பாதுகாப்பு விருது வழங்கும் விழா (முதற்கட்டம் )-ல் முதற்கட்டத்தில் 13 பேருக்கு சவுரியசக்ரா விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்கினார்
புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற பாதுகாப்பு விருது வழங்கும் விழாவில் (முதற்கட்டம்), மரணத்திற்கு பிந்தைய 6 பேர் உட்பட 13 பேருக்கு, சவுரிய சக்ரா விருதுகளை பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியான குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் வழங்கினார். பணிக்காலத்தில் அதிகபட்ச அர்ப்பணிப்புடன் வீர தீரத்துடன் சிறப்பான பணியை வெளிப்படுத்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.
இது தவிர, தற்போதைய ராணுவ தளபதியான ஜெனரல் மனோஜ் பாண்டே உட்பட 14 பேருக்கு பரம் விஷிஸ்ட் சேவா பதக்கங்களையும், 4 பேருக்கு உத்தம் யுத் சேவா பதக்கங்களையும், 24 பேருக்கு அதி விஷிஸ்ட் சேவா பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் இந்த விழாவில் வழங்கினார்.
கருத்துகள்