புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையத்தில் விஞ்ஞானி பி (நூலகர்) பணிக்கு ஆள்சேர்ப்பு
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புவி அறிவியல் ஆய்வுகளுக்கான தேசிய மையம், திருவனந்தபுரத்தில் காலியாக உள்ள விஞ்ஞானி பி (நூலகர்) பணிக்கான இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நூலக அறிவியலில் முதுநிலை பட்டப்படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்புகளில் 60% மதிப்பெண் பெற்றுள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
எழுத்து மற்றும் பேச்சில் நல்ல ஆங்கில புலமை, டி ஸ்பேஸ், கோஹா, சி.எம்.எஸ், ஆர்.டி.பி.எம்.எஸ், ஹெச்டிஎம்எல் போன்ற மென்பொருட்களில் செயலறிவு, முன்னணி தேசிய அளவிலான ஆராய்ச்சி அல்லது கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் முதலியவை விரும்பத்தக்க தகுதிகளாகும்.
ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு இந்த காலியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இது பற்றிய கூடுதல் விவரங்களை www.ncess.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
கருத்துகள்