சைவம் மற்றும் அசைவம் என்பதன் விளக்கம் இன்றைக்குத் தான் இலக்கண வகையில் விரிவாக்கப்பட்டுள்ளது.
புரிதல் இல்லாத மூடர்கள் அதென்ன அசைவம் ,சைவம்? என்ற வினவல் உண்டு
(Vegetarian Non-Vegetarian ) என்ற ஆங்கிலப் பதத்தில் புரிந்து கொண்டு கேள்விகளை சைவ மதங்களுடன் இணைத்து தங்களின் அறிவீனத்தை அதி புத்திசாலித்தனமான வாதங்கள் என்று வைப்பது தான் வேடிக்கை கலந்த வாடிக்கை.
இதோ நமது அன்பில் நிறைந்த ஐயா பொள்ளாச்சி நேசன் என்ற நசனய்யா தமிழ் வாயிலாக:
சை × அசை' சை' என்றால் நிலையானது; தாவரங்கள் ஒரிடத்தை விட்டு நகராதது. 'அசை' என்றால் அசைவது, ஆடு, கோழி, மீன்கள் இயங்குவது, இடம்விட்டு இடம் நகர்வது என்பது பொருள். செய்யுளில் சீர்களை அசைப்பதால் தான் சீரின் உள்ளடக்கத்தை 'அசை' என்கிறோம்.
தாவரங்கள் முளைத்த இடத்திலிருந்து நகராதவை. வேர்விட்ட இடத்திலேயே இருப்பவை. நிலத்தைப் பற்றியிருப்பவை.
விலங்குகள் இயங்குபவை; அசைபவை. ஐந்தறிவு வரைக்கும் நெருங்கி வந்துவிட்டதால் பெரும்பாலும் மனித உணர்வுகளைப் போன்றே இயல்புகளையுடையவை.
ஆதி மனிதன் தொடக்கத்தில் காடுகளில் காய், கனி, கிழங்கு போன்றவற்றோடு விலங்குகளையும் வேட்டையாடித் தின்றான். அது இவனைத் தின்றது போலவே இவனும் அவற்றைத் தின்றான்.
நாகரிக வளர்ச்சிக்குப் பின்... உயிர், மெய், அறிவு, உணர்வு, அருள், ஈகை போன்ற சிந்தனை வளர்ச்சியின் போக்கு, உயிரைக் கொன்று தின்பதை மறுக்கிறது. அப்போது ஏற்பட்ட உணவுமுறை மாற்றந்தான் 'சைவம்', 'அசைவம்' என்பது.
அசையும் உயிர்களைத் தின்பவன் அசைவன்; அசையா உயிர்களைத் தின்பவன் 'சைவன்'.
ஞானமடைந்த ஞானியர் பெரும்பாலோர் உயிர்க்கொலையும், புலாலும் மறுக்கின்றனர். நாம் புத்தரையும் வள்ளுவரையும் நினைவுகொள்ளலாம்.
வள்ளுவர் "தினற்பொருட்டு கொல்லாமை நன்று" என்பதில் விரிவான விளக்கம் உள்ளது.
சைவம் என்பது மதமல்ல. உணவுநெறி. அவ்வளவுதான். நண்பர் அசோக்குமார் என்பவர் 'உலக தாவர உணவாளர்கள்' சங்கம் வைத்துள்ளார். நான் அதில் இல்லை. நான்தான் இருபட்ஷிணியாயிற்றே.
பிறவாநிலை வேண்டி, பதி பசு பாசமறுக்கும் கருத்துகளும், ஆகமமும், சனாதனமும் பின்னால் இக் கருத்தின் வழியே பல்கிப் பெருகியவை. இங்கு சைவத்தை நான் விவாதிக்க வரவில்லை. அச் சொல்லுக்கான ஒரு விளக்கம் சொன்னேன். மற்றபடி உணவு என்பது உங்கள் விருப்பம் சார்ந்தது. பொருளாதார வழியாகப் பேசினால் இன்னும் ஆழமாகப் பேசவேண்டிய சொல் 'சைவம்' என்பது. வாய்ப்பு அமையுமானால் அதை ஒரு நூலாகவோ அதற்கு முன்னர் அய்யா அனுமதியுடன் தான் இச் செய்தி.
ஒருங்கிணைந்த ஹிந்து மதமோ அல்லது பண்பாடு எனப் பார்த்தால் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், சௌரம், கணாபத்தியம், ஸ்மார்த்தம். சமணம், உள்ளிட்ட எட்டு பிரிவுகளும் சைவ நெறி கொண்டவை தான். அசைவம் என்று பார்த்தால் அது வேட்டையாடி உணவு உண்ணும் சத்திரியர்கள் வழியாக வந்த கடவுள் வழிபாடு தனி இங்கு தான் வழிபாட்டு முறைகள் அசைவ வழியில் இருக்கும் கருப்பன் காளி, முனீஸ்வரன், அய்யனார், வழிபாட்டு முறைகள் அந்தணர் மற்றும் சைவர்கள் பூஜை முறை இல்லாத ஆலயங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தான் உண்டு.
கருத்துகள்