முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உயர் கல்விக் கட்டண உயர்வு சாமானிய மக்களுக்கு பாதிப்பு

பொறியியல்  கல்விக்கான கட்டணத்தை ஏ.ஐ.சி.டி.இ.(ஆல் இண்டியா கவுன்சில் ஃபார் டெக்னிகல் எஜூகேஷன் - AICTE) உயர்த்தியிருக்கிறது. பேராசிரியர்களுக்கும்  சம்பளத்தை உயர்த்தியிருக்கிறோம்’ என  உத்தரவில் 

கவுன்சிலின் உத்தரவுப்படி, தொழில்நுட்பக் கல்லூரிகளில் (B.E., B.Tech., B.arch) பயிலும் மாணவர்களின் குறைந்தபட்சக் கல்விக் கட்டணமாக 79 ஆயிரத்து 600 ரூபாயும், அதிகபட்சமாக ஒரு லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் (ஒரு செமஸ்டர் கணக்கு மட்டும்) செலுத்த வேண்டிய நிலை. 


பட்டயப் படிப்பு (பாலிடெக்னிக் - டி.எம்.இ., டி.சி.இ., டி.இ.இ., டி.இ.இ.இ) படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு 67 ஆயிரத்து 900 ரூபாய் கட்டணம் குறைந்தபட்சம் , அதிகபட்சமாக ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 900 ரூபாய் என ஆல் இண்டியா கவுன்சில் தெரிவித்து உள்ளது.



யு.ஜி. (இளங்கலை) யின் நிலை இப்படி என்றால், ப்பி.ஜி. (முதுகலை) நிலை வேறு. குறைந்த அளவு கட்டணமாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 200 ரூபாயும், அதிகபட்சமாக மூன்று லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும் கல்விக் கட்டணமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

 மூன்றாண்டு எம்.சி.ஏ., பட்டப் (முதுகலை) படிப்புக்கு 88 ஆயிரத்து 500 ரூபாய் குறைந்த கட்டணமாகவும், ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 100 ரூபாய் அதிகபட்சக் கட்டணத் தொகையாகவும் செலுத்த வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. 


எம்.பி.ஏ (முதுகலை) பட்டப் படிப்புக்கு, குறைந்த பட்சக் கட்டணம், 85 ஆயிரம் ரூபாயாகவும், அதிகபட்சம் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 200 ரூபாயாகவும் செலுத்த வேண்டும் என கவுன்சில் தெரிவிக்கிறது. ‘கட்டண உயர்வை கல்வி நிறுவனங்களே நிர்ணயம் செய்து கொள்ளலாம்’ என, கவுன்சில் கூறியிருக்கிறது.

 கடந்த காலங்களில் பிரதமராக இருந்த இந்திராகாந்தி, 1976 ஆம் ஆண்டு அவசரநிலை சட்டத்தை (எமர்ஜென்ஸி) பிறப்பித்த காலகட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் 57 ஆவது பிரிவு 42 ஆவது சட்ட திருத்தம் மூலமாக பதிவு ( நுழைவு 11) 11 -ஐ மாநில பட்டியலிலிருந்து நீக்கி, பொதுப்பட்டியலில் கல்வியை (பதிவு -25) நுழைவு 25 ஆக அப்போது  சேர்த்தார்.

மாநில சுயாட்சியை கடைபிடிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பொதுப்பட்டியலில் சேர்க்கப்பட்ட கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற அவ்வப்போது  குரல் கொடுத்தும் வந்தனர், மறக்காமல் பின்னர் கூட்டணியிலும் நீடித்தனர். 



அது இந்திரா காங்கிரஸ் என்ற பெயரில் பசுவும் கன்றும் சின்னமாக இருந்து கை சின்னத்துக்கு காங்கிரஸ் மாறி நிற்கும் இந்தக் காலகட்டம் வரையிலும் கூட்டணி உறவை பல்வேறு மாநிலக் கட்சிகள் தொடர்ந்தது. தமிழ்நாட்டில் ஆண்டு வந்த  கழகங்களும் காங்கிரஸ் உறவில் தான் இருந்தன.

நெருக்கடி நிலையை 1976 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்து 45 ஆண்டுகள் கடந்து விட்டாலும், அன்று உண்டாக்கி வைக்கப்பட்ட நெருக்கடியை தமிழ்நாட்டிலுள்ள மாநிலக் கட்சிகள், இதுநாள் வரையிலும் முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. 

இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 246 - 7 ஆம் அட்டவணை பட்டியல் (2-ல்) இரண்டில், மாநிலப்பட்டியல் 1976 ஆம் ஆண்டுக்கு முன்னர்  இருந்தது. கல்வி தொடர்பான அனைத்து முடிவுகளையும் (பாடத்திட்டம், கட்டணம், மாணவர் சேர்க்கை) மாநில அரசாங்கமே எடுப்பதற்கான அதிகாரத்தை அந்தச் சட்டப் பிரிவு வழங்கி வந்தது. ஒருங்கிணைத்தல் ( கோ - ஆர்டினேட்) மற்றும், உயர் கல்வியின் தரம் பராமரித்தல் - ஒழுங்கு படுத்துதல் (கண்காணிப்பு) போன்றவை மட்டுமே மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அந்த அதிகாரத்தின் எல்லையில் பாடத்திட்டமோ, கல்விக் கட்டணமோ, மாணவர் சேர்க்கையோ அடங்காது; அதேவேளையில் அந்த அதிகாரம் மட்டுமல்ல - வானளாவிய பல அதிகாரத்தை மாநிலங்களின் கல்வி உரிமையில் தலையிட 1976- ஆம் ஆண்டு கொண்டு வந்த  42 ஆவது சட்ட திருத்தம் வழி வகுத்தது.  புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட, இன்றைய பல அம்சங்களுக்கு விதை போட்டது  42 ஆவது சட்டத்திருத்தம் தான். (பிரிவு 246, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரப் பகிர்வு பற்றியே ஏழாவது அட்டவணை கூறுகிறது. 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, மத்திய பட்டியலில் 100 துறைகளும், மாநில பட்டியலில்  61 துறைகளும், பொதுப்பட்டியலில்  52 துறைகளும் உள்ளன) 

எரிவதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கிவிடும் என்பார்களே, அது போல மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை முன்னால் பிரதமர் இந்திராகாந்தி நீக்கியதோடு, அதை பொதுப்பட்டியலில்  சேர்த்து விட்டுப் போனார். அந்த காலகட்டத்தில் என்ன கொதித்ததோ, என்ன எரிந்ததோ ?


எடப்பாடி கே. பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கால கட்டம். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூட்டத்தில் (ஆகஸ்ட் 1- 2020), பேசிய அன்றைய திமுக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கே கொண்டுவர வேண்டும், புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என அதிமுக அரசு, உடனே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” தீர்மானம் இயற்றி பேசினார்.

செப்டம்பர் 14, 2012 -ஆம் ஆண்டில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலனின், தொண்டு நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மத்திய மாநில அரசுகள் இது குறித்து பதிலளிக்க 8 வார காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது. அந்த விவகாரம் அப்படியே இருக்கிறது.


இன்னும் கொஞ்சம் பின்னர் பார்த்தால், நாட்டின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் (1950 ஆம் ஆண்டு) கொண்டுவரப்பட்ட காலகட்டத்தில் கல்வியானது மாநிலப்பட்டியலில் தான் இருந்தது. அதே நிலை நீடிக்க அனைவரும் விரும்பினர், அன்றைய இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும் அதை ஏற்றுக்கொண்டார். அவருடைய மகளான இந்திராகாந்தி அம்மையார், தந்தையின் வார்த்தையை 26 ஆண்டு காலம் கழித்து 1976-ஆம் ஆண்டில் எமர்ஜென்சியின் மூலம் மாற்றினார். அவர் மாற்றியதை மாற்றத் தான் 45 ஆண்டு காலம் கடந்தும் போராடுகின்றன, சுயாட்சி விரும்பும் மாநிலக் கட்சிகள். 

பொறியியல் பட்டயத்துக்கு அரசின், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பத்தாயிரம் ரூபாய்க்கும் குறைவாக இதுநாள் வரையிலும் கொடுத்து கல்வி கற்று வந்த மாணவர்கள் கல்விக் கட்டணம், இப்போது செமஸ்டருக்கு 67 ஆயிரத்து 900 ரூபாய், குறைந்தபட்சம் என்றும், அதிகபட்சமாக 1 லட்சத்து 40 ஆயிரத்து 900 என்றும் மாறியிருக்கிறது.

மாநிலக் கல்விக்கொள்கை வேறு என்பதில் உறுதி காட்டும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இப்போது ஏழை மாணவர்களின் கல்வியில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையை மாற்றுவார் என்றே அடித்தளத்தில் மற்றும் நடுத்தர வர்க்கம் சார்ந்த மக்கள் நம்புகின்றனர் ! ஆனால் அரசில் பங்கேற்று வருகின்ற கட்சிகள், ஊடகங்கள் எங்கினும் இதை  விவாதிக்கக் கூடிய அளவு பொருட்டாக இதுவரை கருதவில்லை.  பொறியியல் பட்ட - பட்டயப் படிப்பாளர்கள் யார் வீட்டிலும் இல்லையா என்ற வினா எழுகிறது அடுத்த தலைமுறை கல்வியறிவு பெற பணம் மலை அளவு தேவை என்ற நிலையில் எப்படி எப்போது இனி தீர்வு காண்பது ... கல்வி இனி பலருக்கும் கானல் நீர் தான்.அதேபோல, 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி ஆசிரியர்களுக்கான ஊதியம் வழங்கப்பட வேண்டும். அதன்படி உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ.57,700 முதல் ரூ.1 லட்சத்து 37,000 வரையும், பேராசிரியர்களுக்கு ரூ.1 லட்சத்து 44,200 முதல் ரூ.2 லட்சத்து 60,000 வரையும் ஊதியம் மாற்றி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதைக் காரணம் காட்டி கட்டணத்தைக் கல்லூரிகள் குறைக்கக் கூடாது. சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித்தரத்தை உயர்த்த முயல வேண்டும். இந்தப் பரிந்துரைகளை வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்த, தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இது இன்பச் செய்தி என்றாலும், மாணவர்களுக்கும் பெற்றோர்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பொறியியல் மற்றும் டிப்ளோமா படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தி ஏ.ஐ.சி.டி.இ அறிவித்துள்ள நிலையில், கல்விக் கட்டண நிர்ணயக்குழு உள்ள தமிழ்நாட்டுக்கு இது பொருந்துமா என்று கேள்வி எழுந்துள்ளதுஅரசியலமைப்பு (எண்பத்தி ஆறாவது திருத்தம்) சட்டம் 2002, இந்திய அரசியலமைப்பில் 21-A பிரிவைச் சேர்த்து, ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வியை அரசு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட அடிப்படை உரிமையாக உத்தரவாதப்படுத்துகிறது. இலவச கட்டாயக் கல்விக்கான குழந்தைகளின் உரிமைச் சட்டம் 2009, அரசியலமைப்பு உறுப்பு 21-Aஇன் கீழ் சட்டமாக இயற்றப்பட்டது; இச்சட்டத்தின்படி அத்தியாவசிய விதிமுறைகள், தரநிலைகள் அடிப்படையில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு முறையான பள்ளியில் நிறைவான, சமமான, தரமான முழுநேரத் தொடக்கக் கல்விக்கான உரிமை வழங்கப்படுகிறது. இதேபோல அவர்கள் உயர் கல்வி பயிலும் வரை இச்சட்டம் வகை செய்யும் நிலை அடிப்படை உரிமையாக வரவேண்டும் என்பதே அணைத்து மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த