முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகிய நிலையில், இன்று ஒப்படைக்கும் விழா

தமிழ்நாட்டின் காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகிய நிலையில், இன்று ஒப்படைக்கும் விழா 


சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையுடன்  இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசு தலைவர் கொடியை ஒப்படைத்தார்.

அப்போது வானத்தில் வண்ணப் பலூன்கள் பறக்கவிடப்பட்டது.  நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய போது, தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை எனவும், உயிரைப் பொருட்படுத்தாமல் காவல்துறை ஆற்றிய சேவைக்கான அங்கீகாரமென்றும். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை என்றும், சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இராஜரத்தினம் அரங்கத்தில், காவல் துறையினருக்குக் குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் விழா நடை பெற்றதையொட்டி இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ருக்குமணி லட்சுமிபதி சாலையில் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பிற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

பாந்தியன் சாலையிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பாந்தியன் சாலை ரவுண்டானாவிலிருந்து பாந்தியன் மேம்பாலம் வழியாகச் சென்று கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாக அவர்கள் செல்லவேண்டிய பகுதிகளை அடையலாம். எத்திராஜ் சாலை ருக்குமணி லட்சுமிபதி சாலை சந்திப்பிலிருந்து பாந்தியன் ரவுண்ட்டான நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாகப் பாந்தியன் சாலையினை அடையலாம்.

பாந்தியன் சாலை மாண்டியத் சாலை சந்திப்பிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பாந்தியன் சாலை வழியாக கோ-ஆப்டெக்ஸ் அல்லது பாந்தியன் ரவுண்டானா அடைந்துத் தாங்கள் செல்லவேண்டிய இடத்தினை அடையலாம். என்ற நிலையில் மக்கள் செல்வாக்கு மாற்று வழி ஏற்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில், குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் :

தமிழக காவல்துறைக்கு, குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குவதற்காக, சென்னையில் உங்களை சந்திப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  எழில்மிகு நகரான சென்னை, எனது இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் பெற்றிருப்பதுடன், வாழ்நாளில்  என்னை வியப்படையச் செய்வதை ஒருபோதும் நிறுத்த முடியாது.  இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், சென்னைக்கு வருவது இதுவே எனது கடைசிப் பயணம் என்றாலும்,  தமிழக மக்களின் அளவுகடந்த அன்பும், உபசரிப்பும் என்னை இங்கு அழைத்துக்கொண்டே இருக்கும். 

அன்பார்ந்த நண்பர்களே,

தமிழக காவல்துறையின் வரலாற்றில், இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும்.  இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பிரிவு அல்லது மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் உயரிய கவுரவத்தைப் பெற்ற வெகுசில மாநிலங்களின் பட்டியலில் இன்று நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்.   இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடிய தருணமாக அமைவதேதாடு, இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.  உங்களது பாராட்டத்தக்க பணி மற்றும் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இது, உங்களது அர்ப்பணிப்பு, தொழில் வல்லமை, தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். 

1859-ம் ஆண்டு சென்னை(மெட்ராஸ்) காவல்துறை என்ற பெயரில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, பன்னெடுங்காலமாக, மக்களுடன் மிக நெருக்கமாக இருந்து வருவதன் மூலம், நாட்டில் உள்ள மிகச் சிறந்த காவல்படைகளில் ஒன்றாக, தமிழக காவல்துறை திகழ்கிறது.  மிகவும் பரபரப்பான மற்றும் நெருக்கடியான காலகட்டங்களிலும், சாமான்ய மனிதர், ஒடுக்கப்பட்ட மற்றும்  சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எப்போதும் பாடுபட்டு வருவதுடன், மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை சிறப்பாக பேணவும், பொது அமைதியைப் பராமரிக்கவும் உதவி வருகிறது.  

நாட்டிலேயே, அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் இருப்பதை அறிந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.   நாட்டில், பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழகம் பெற்றுள்ளது.   பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதென்ற நமது இலக்கை நோக்கிய பயணத்தின் இந்த சாதனைகள் பாராட்டத்தக்கவை. 

அன்பார்ந்த நண்பர்களே, 

நமது மக்கள்தொகையில் சமபாதி அளவிற்கு பெண்கள் உள்ளபோதிலும், பல்வேறு துறைகளிலும் அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதில் நாம் இன்னும் பெருமளவு பணியாற்ற வேண்டியுள்ளது. பெண்களுக்கு உகந்த சூழல் மற்றும் பாதுகாப்பை உருவாக்குவது, அவர்களது வளர்ச்சி மற்றும் அவர்களது முழுத் திறனை அடைய உதவுவதற்கு மிகவும் அவசியம் ஆகும்.  எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதில், கூடுதல் பொறுப்புணர்வுடன் பணியாற்றுமாறு காவல்துறையினரை வலியுறுத்துகிறேன்.  

இணையக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதும்,  ஆன்லைன் மோசடி மற்றும் எல்லைதாண்டிய குற்றங்கள் போன்ற தற்கால குற்றங்கள் அதிகரித்து வருவதும் கவலையளிக்கத்தக்கது.   இதுபோன்ற, 21-ம் நூற்றாண்டின் குற்றங்களை, திறம்பட்ட முறையில், விரைவாக எதிர்கொள்ள, நமது காவல் படைகள் திறன்பயிற்சி  மற்றும் உரிய வசதிகளைப் பெற்றிருப்பதும் அவசியம்.   46 இணையக் குற்ற காவல் நிலையங்களுடன்,  இணையக் குற்றங்களுக்கென தமிழக காவல்துறை தனிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.   இணையக் குற்றங்களை அறிவியல் பூர்வமாக விசாரிக்க ஏதுவாக, பாதுகாப்பான நகரம் திட்டத்தின்கீழ், ரூ.6.90 கோடி செலவில், டிஸ்க் தடயவியல், நடமாடும் தடயவியல் மற்றும் சமூக ஊடக சாதனங்கள்,  அதிநவீன தடயவியல் பணியிடத்துடன் கூடிய இணையத் தடயவியல் ஆய்வகம், அமைக்கப்படுவதாக அறிந்தேன்.  

நமது பாரம்பரியப் பெருமை மிக்க சிலைகள், ஓவியங்கள் மற்றும் பிற கலைப் பொக்கிஷங்கள் போன்ற கலாச்சார சிறப்புவாய்ந்த கலைப்பொருட்கள் திருட்டு அல்லது இழக்க நேரிட்டால், அதுபற்றி விசாரிப்பதற்கான பிரத்யேக புலனாய்வுப் பிரிவான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தியுள்ள நாட்டின் ஒரே மாநிலம் தமிழகம் என்பது சிறப்புக்குரியதாகும்.   அன்மையில்,  இந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து விலைமதிப்பற்ற பத்து பழங்கால சிலைகளை மீட்டு வந்துள்ளது.   இந்தப் பணி பாராட்டத்தக்கது.  நமது கலாச்சார பாரம்பரியமிக்க மற்றும் நாகரீக நற்பண்புகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.  நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே, கலாச்சார  செழுமை மற்றும் வளத்தை தமிழகம் பெருமிதத்துடன் போற்றி வரும் நிலையில்,  நமது எதிர்கால தலைமுறையினருக்காக இதனை நாம் பாதுகாக்க வேண்டும். 

நண்பர்களே,

1076 கி.மீ தூரமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழ்நாடு,  எல்லைதாண்டிய நடவடிக்கைகளைத் தடுக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற நோக்கத்தை நிறைவேற்றவும், “கடலோர பாதுகாப்புக் குழுமம்“ என்ற பெயரில் மிகச் சிறந்த கடலோர பாதுகாப்புப் பிரிவைக் கொண்டதாக உள்ளது.   மாநிலத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள் மற்றும் 100 சோதனைச்சாவடிகள் உள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.  

காவல்துறையினரின் மன உறுதியை அதிகரிப்பதற்காக, காவல் துறையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வது, எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.   காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்கவும், மதுப்பழக்கம் மற்றும் தற்கொலைகளைத் தடுக்கவும்,  “காவலர் நலத் திட்டங்கள்“-ஐத் தொடங்கும் நாட்டின் ஒரே மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.   இதுதவிர,  காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, காப்பீடு மற்றும் கல்வி உதவித் திட்டங்களையும் இம்மாநில காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 


காவல்துறை நவீனமயமாக்கலுக்கு, திறன் மேம்பாடு, கட்டமைப்பு வசதி மேம்பாடு மற்றும் காவல்துறையினரின் மனப்பாங்கை மாற்றுவது போன்றவை முக்கிய அம்சங்களாகும்.     வலுவான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்குடன், காவல்நிலையக் கட்டடங்கள், குடியிருப்புகள், வாகன வசதி, தொலைத்தொடர்பு, பயிற்சி, ஆயுதங்கள், விரல் ரேகை பிரிவு/ தடய அறிவியல் ஆய்வகம்,  புள்ளிவிவர பராமரிப்பு, கணினிமயமாக்கல் மற்றும் சாதனங்களை நவீனமயமாக்க,   மத்திய அரசு வழங்கும் நிதியுதவியுடன், காவல்துறையை நவீனமயமாக்க மாநில அரசும் நிதி ஒதுக்கி வருகிறது.

தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.   வேகமாக மாறிவரும் சமூக-பொருளாதார சூழலில், காவல்துறையினரின் பங்களிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.  மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில்,  பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பும் ஒன்றாகும்.  முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பொது அமைதியைப் பராமரிப்பது அவசியம்.  மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழன காவல்துறை தலைவர் டாக்டர் சி.சைலேந்திர பாபு-வின் வழிகாட்டுதலில், அனைவரையும் ஈர்க்கும் வகையில் தமிழகக் காவல் துறையினர் பணியாற்றி வருவதற்காக, காவல்துறைத் தலைவர் என்ற முறையில், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபுவுக்கு எனது சிறப்புப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  பாதுகாப்புப் படையினரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தமிழக காவல்துறையின் அளப்பரிய பங்களிப்பை நாடு அங்கீகரித்துள்ளது.  மதிப்புமிக்க குடியரசுத்தலைவரின் கொடியைப் பெறுவதையொட்டி, தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.