முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டின் காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகிய நிலையில், இன்று ஒப்படைக்கும் விழா

தமிழ்நாட்டின் காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி அறிவிக்கப்பட்டு 13 ஆண்டுகளாகிய நிலையில், இன்று ஒப்படைக்கும் விழா 


சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதையுடன்  இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலினிடம் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசு தலைவர் கொடியை ஒப்படைத்தார்.

அப்போது வானத்தில் வண்ணப் பலூன்கள் பறக்கவிடப்பட்டது.  நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிய போது, தமிழக காவல்துறைக்கு குடியரசு தலைவர் கொடி கிடைத்தது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே கிடைத்த பெருமை எனவும், உயிரைப் பொருட்படுத்தாமல் காவல்துறை ஆற்றிய சேவைக்கான அங்கீகாரமென்றும். தமிழகத்தில் கடந்த ஓராண்டில் சாதி, மதக் கலவரங்கள், துப்பாக்கிச் சூடுகள் இல்லை என்றும், சிறை மரணங்களே இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இராஜரத்தினம் அரங்கத்தில், காவல் துறையினருக்குக் குடியரசுத் தலைவரின் கொடி வழங்குதல் விழா நடை பெற்றதையொட்டி இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. ருக்குமணி லட்சுமிபதி சாலையில் காலை 7 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை பிற வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

பாந்தியன் சாலையிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பாந்தியன் சாலை ரவுண்டானாவிலிருந்து பாந்தியன் மேம்பாலம் வழியாகச் சென்று கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாக அவர்கள் செல்லவேண்டிய பகுதிகளை அடையலாம். எத்திராஜ் சாலை ருக்குமணி லட்சுமிபதி சாலை சந்திப்பிலிருந்து பாந்தியன் ரவுண்ட்டான நோக்கிச் செல்ல வேண்டிய வாகனங்கள் கோ-ஆப்டெக்ஸ் பாய்ண்ட் வழியாகப் பாந்தியன் சாலையினை அடையலாம்.

பாந்தியன் சாலை மாண்டியத் சாலை சந்திப்பிலிருந்து ருக்குமணி லட்சுமிபதி சாலை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பாந்தியன் சாலை வழியாக கோ-ஆப்டெக்ஸ் அல்லது பாந்தியன் ரவுண்டானா அடைந்துத் தாங்கள் செல்லவேண்டிய இடத்தினை அடையலாம். என்ற நிலையில் மக்கள் செல்வாக்கு மாற்று வழி ஏற்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர்தமிழக காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் கொடி வழங்கும் விழாவில், குடியரசு துணைத்தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள் :

தமிழக காவல்துறைக்கு, குடியரசுத் தலைவரின் கொடியை வழங்குவதற்காக, சென்னையில் உங்களை சந்திப்பது, எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.  எழில்மிகு நகரான சென்னை, எனது இதயத்தில் எப்போதும் சிறப்பிடம் பெற்றிருப்பதுடன், வாழ்நாளில்  என்னை வியப்படையச் செய்வதை ஒருபோதும் நிறுத்த முடியாது.  இந்தியாவின் குடியரசு துணைத்தலைவர் என்ற முறையில், சென்னைக்கு வருவது இதுவே எனது கடைசிப் பயணம் என்றாலும்,  தமிழக மக்களின் அளவுகடந்த அன்பும், உபசரிப்பும் என்னை இங்கு அழைத்துக்கொண்டே இருக்கும். 

அன்பார்ந்த நண்பர்களே,

தமிழக காவல்துறையின் வரலாற்றில், இந்நாள் மிகுந்த சிறப்புக்குரிய நாளாக இருக்கும்.  இந்திய ராணுவத்தின் எந்த ஒரு பிரிவு அல்லது மாநில காவல்துறைக்கு வழங்கப்படும் உயரிய கவுரவத்தைப் பெற்ற வெகுசில மாநிலங்களின் பட்டியலில் இன்று நீங்கள் இணைந்திருக்கிறீர்கள்.   இது தமிழர்கள் ஒவ்வொருவரும் மிகுந்த பெருமிதம் அளிக்கக் கூடிய தருணமாக அமைவதேதாடு, இந்தியாவின் முப்படைத் தளபதியின் சார்பில் இந்த கவுரவத்தை தமிழக காவல்துறைக்கு வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சியும், பேருவகையும் அடைகிறேன்.  உங்களது பாராட்டத்தக்க பணி மற்றும் பல்வேறு சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.  தமிழக காவல்துறையைச் சேர்ந்த அனைவருக்கும், எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இது, உங்களது அர்ப்பணிப்பு, தொழில் வல்லமை, தன்னலமற்ற சேவை மற்றும் தியாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் ஆகும். 

1859-ம் ஆண்டு சென்னை(மெட்ராஸ்) காவல்துறை என்ற பெயரில் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, பன்னெடுங்காலமாக, மக்களுடன் மிக நெருக்கமாக இருந்து வருவதன் மூலம், நாட்டில் உள்ள மிகச் சிறந்த காவல்படைகளில் ஒன்றாக, தமிழக காவல்துறை திகழ்கிறது.  மிகவும் பரபரப்பான மற்றும் நெருக்கடியான காலகட்டங்களிலும், சாமான்ய மனிதர், ஒடுக்கப்பட்ட மற்றும்  சமுதாயத்தின் நலிந்த பிரிவினருக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக எப்போதும் பாடுபட்டு வருவதுடன், மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை சிறப்பாக பேணவும், பொது அமைதியைப் பராமரிக்கவும் உதவி வருகிறது.  

நாட்டிலேயே, அதிக அளவிலான மகளிர் காவல் நிலையங்களையும், அதிக பெண் காவலர்களைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் இருப்பதை அறிந்த நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.   நாட்டில், பெண் கமாண்டோ படைப்பிரிவை அமைத்த முதல் மாநிலம் என்ற சிறப்பையும் தமிழகம் பெற்றுள்ளது.   பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்குவதென்ற நமது இலக்கை நோக்கிய பயணத்தின் இந்த சாதனைகள் பாராட்டத்தக்கவை. 

அன்பார்ந்த நண்பர்களே, 

நமது மக்கள்தொகையில் சமபாதி அளவிற்கு பெண்கள் உள்ளபோதிலும், பல்வேறு துறைகளிலும் அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்குவதில் நாம் இன்னும் பெருமளவு பணியாற்ற வேண்டியுள்ளது. பெண்களுக்கு உகந்த சூழல் மற்றும் பாதுகாப்பை உருவாக்குவது, அவர்களது வளர்ச்சி மற்றும் அவர்களது முழுத் திறனை அடைய உதவுவதற்கு மிகவும் அவசியம் ஆகும்.  எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்களைக் கையாள்வதில், கூடுதல் பொறுப்புணர்வுடன் பணியாற்றுமாறு காவல்துறையினரை வலியுறுத்துகிறேன்.  

இணையக் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருவதும்,  ஆன்லைன் மோசடி மற்றும் எல்லைதாண்டிய குற்றங்கள் போன்ற தற்கால குற்றங்கள் அதிகரித்து வருவதும் கவலையளிக்கத்தக்கது.   இதுபோன்ற, 21-ம் நூற்றாண்டின் குற்றங்களை, திறம்பட்ட முறையில், விரைவாக எதிர்கொள்ள, நமது காவல் படைகள் திறன்பயிற்சி  மற்றும் உரிய வசதிகளைப் பெற்றிருப்பதும் அவசியம்.   46 இணையக் குற்ற காவல் நிலையங்களுடன்,  இணையக் குற்றங்களுக்கென தமிழக காவல்துறை தனிப் பிரிவு ஒன்றை ஏற்படுத்தியிருப்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.   இணையக் குற்றங்களை அறிவியல் பூர்வமாக விசாரிக்க ஏதுவாக, பாதுகாப்பான நகரம் திட்டத்தின்கீழ், ரூ.6.90 கோடி செலவில், டிஸ்க் தடயவியல், நடமாடும் தடயவியல் மற்றும் சமூக ஊடக சாதனங்கள்,  அதிநவீன தடயவியல் பணியிடத்துடன் கூடிய இணையத் தடயவியல் ஆய்வகம், அமைக்கப்படுவதாக அறிந்தேன்.  

நமது பாரம்பரியப் பெருமை மிக்க சிலைகள், ஓவியங்கள் மற்றும் பிற கலைப் பொக்கிஷங்கள் போன்ற கலாச்சார சிறப்புவாய்ந்த கலைப்பொருட்கள் திருட்டு அல்லது இழக்க நேரிட்டால், அதுபற்றி விசாரிப்பதற்கான பிரத்யேக புலனாய்வுப் பிரிவான சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவை ஏற்படுத்தியுள்ள நாட்டின் ஒரே மாநிலம் தமிழகம் என்பது சிறப்புக்குரியதாகும்.   அன்மையில்,  இந்த சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து விலைமதிப்பற்ற பத்து பழங்கால சிலைகளை மீட்டு வந்துள்ளது.   இந்தப் பணி பாராட்டத்தக்கது.  நமது கலாச்சார பாரம்பரியமிக்க மற்றும் நாகரீக நற்பண்புகளைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.  நமது முன்னோர்கள் காலத்திலிருந்தே, கலாச்சார  செழுமை மற்றும் வளத்தை தமிழகம் பெருமிதத்துடன் போற்றி வரும் நிலையில்,  நமது எதிர்கால தலைமுறையினருக்காக இதனை நாம் பாதுகாக்க வேண்டும். 

நண்பர்களே,

1076 கி.மீ தூரமுள்ள நீண்ட கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழ்நாடு,  எல்லைதாண்டிய நடவடிக்கைகளைத் தடுக்கவும், மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது என்ற நோக்கத்தை நிறைவேற்றவும், “கடலோர பாதுகாப்புக் குழுமம்“ என்ற பெயரில் மிகச் சிறந்த கடலோர பாதுகாப்புப் பிரிவைக் கொண்டதாக உள்ளது.   மாநிலத்தில் 12 கடலோர காவல் நிலையங்கள் மற்றும் 100 சோதனைச்சாவடிகள் உள்ளதாக என்னிடம் தெரிவித்தனர்.  

காவல்துறையினரின் மன உறுதியை அதிகரிப்பதற்காக, காவல் துறையினருக்கு பல்வேறு நலத் திட்டங்களை தொடங்கும் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்வது, எனக்கு அளவற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.   காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்கவும், மதுப்பழக்கம் மற்றும் தற்கொலைகளைத் தடுக்கவும்,  “காவலர் நலத் திட்டங்கள்“-ஐத் தொடங்கும் நாட்டின் ஒரே மாநிலமாக, தமிழகம் திகழ்கிறது.   இதுதவிர,  காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ வசதி, காப்பீடு மற்றும் கல்வி உதவித் திட்டங்களையும் இம்மாநில காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. 


காவல்துறை நவீனமயமாக்கலுக்கு, திறன் மேம்பாடு, கட்டமைப்பு வசதி மேம்பாடு மற்றும் காவல்துறையினரின் மனப்பாங்கை மாற்றுவது போன்றவை முக்கிய அம்சங்களாகும்.     வலுவான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் நோக்குடன், காவல்நிலையக் கட்டடங்கள், குடியிருப்புகள், வாகன வசதி, தொலைத்தொடர்பு, பயிற்சி, ஆயுதங்கள், விரல் ரேகை பிரிவு/ தடய அறிவியல் ஆய்வகம்,  புள்ளிவிவர பராமரிப்பு, கணினிமயமாக்கல் மற்றும் சாதனங்களை நவீனமயமாக்க,   மத்திய அரசு வழங்கும் நிதியுதவியுடன், காவல்துறையை நவீனமயமாக்க மாநில அரசும் நிதி ஒதுக்கி வருகிறது.

தமிழகம் தற்போது, இந்தியாவின் மிகவும் வளமான மற்றும் தொழில்மயமான மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.   வேகமாக மாறிவரும் சமூக-பொருளாதார சூழலில், காவல்துறையினரின் பங்களிப்பு தலையாய முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.  மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்னணியாக உள்ள காரணங்களில்,  பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிப்பதில் மாநில காவல்துறையின் பங்களிப்பும் ஒன்றாகும்.  முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், பொது அமைதியைப் பராமரிப்பது அவசியம்.  மாநிலம் முழுவதும் அமைதியை நிலைநாட்டி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வளமைக்கு உகந்த சூழலை உருவாக்கி வருவதற்காக, தமிழக காவல்துறையில் பணியாற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

தமிழன காவல்துறை தலைவர் டாக்டர் சி.சைலேந்திர பாபு-வின் வழிகாட்டுதலில், அனைவரையும் ஈர்க்கும் வகையில் தமிழகக் காவல் துறையினர் பணியாற்றி வருவதற்காக, காவல்துறைத் தலைவர் என்ற முறையில், காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபுவுக்கு எனது சிறப்புப் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  பாதுகாப்புப் படையினரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக, தமிழக காவல்துறையின் அளப்பரிய பங்களிப்பை நாடு அங்கீகரித்துள்ளது.  மதிப்புமிக்க குடியரசுத்தலைவரின் கொடியைப் பெறுவதையொட்டி, தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்களை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...