முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உடன் பிறவா தோழி சசிகலா நடராஜன் பினாமிக்கு சொந்தமானதாக கூறப்படும் சொத்தை நேற்று முடக்கியது. வருமான வரித் துறை

காலம்சென்ற முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவின் உடன் பிறவா தோழி சசிகலா நடராஜன் பினாமிக்கு சொந்தமானதாக கூறப்படும், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, சென்னையில் நேற்று முடக்கப்பட்டது.


வருமான வரித் துறையின் தொடர்  நடவடிக்கைகள் காரணமாக, பினாமிகள் பெயரில் அவர் வாங்கி குவித்துள்ள, ௨,௦௦௦ கோடி ரூபாய் சொத்துக்கள் வழக்கில் சம்பந்தப்பட்டவை இதுவரை கையகப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் 

மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா. அவரும், அவரது பினாமிகளாகக் கருதப்படும் குடும்பத்தினரும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக, வருமான வரித் துறைக்கு புகார்கள் சென்றதன் அடிப்படையில், சசிகலா மற்றும் உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட, 187 இடங்களில், 2017 ஆம் ஆண்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.


ஐந்து நாட்கள் நீடித்த சோதனையில், சசிகலா பினாமி என கருதப்படும் குடும்பத்தினர், 60 க்கும் மேற்பட்ட போலியான நிறுவனங்களைத் துவக்கி, 1,500 கோடி ரூபாய் வரை, வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மேலும், சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சொத்துக்களில் முதலீடு செய்தது தொடர்பான சோதனையில் சிக்கிய.  ஆவணங்கள் அடிப்படையில், சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்ட்டதன்படி, 2019 ஆம் ஆண்டில், 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. 2020 ஆம் ஆண்டில், ஹைதராபாதிலுள்ள, 'ஸ்ரீ ஹரிசந்தனா எஸ்டேட்' நிறுவனத்தின் பெயரிலிருந்த, 300 கோடி ரூபாய் மதிப்பிலான 65 சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் கையகப்

படுத்தப்பட்டதில், சென்னை, போயஸ் தோட்டத்தில், வேதா நிலையம் எதிரே, 22 ஆயிரத்து 460 சதுர அடி நிலத்தில் கட்டப்பட்டு வரும் கட்டடமும் அடங்கும். மேலும், ஆலந்துார், தாம்பரம், ஸ்ரீபெரும்புதுார் உட்பட, பல்வேறு பகுதிகளில் உள்ள, 200 ஏக்கர் நிலங்கள் உட்பட, 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களும், பினாமி சொத்துக்களாக கையகப்படுத்தப்பட்டன.




2021 ஆம் ஆண்டு செப்டம்பர், மாதம், செங்கல்பட்டு மாவட்டம், பையனுாரிலுள்ள, 100 கோடி ரூபாய் மதிப்பிலான, சசிகலா நடராஜனுக்குச் சொந்தமான பங்களாவை, பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், வருமான வரித் துறை முடக்கியதன் தொடர்ச்சியாக தற்போது, 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை, வருமான வரித் துறை முடக்கியுள்ளது. இதுகுறித்து, வருமான வரி அதிகாரிகள் கூறியதாவது: சசிகலா நடராஜன் உட்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில், அவரது சொத்துக்கள், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2021ம் ஆண்டு வரை, சசிகலா நடராஜனுக்குச் சொந்தமான, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தற்போது, சென்னை தி.நகர், பத்மநாபா தெருவில், 15 கோடி ரூபாய் மதிப்பில், 3,486 சதுர அடி நிலத்தில், 'ஆஞ்சநேயா பிரின்டர்ஸ்' என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனத்தை, பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளததையடுத்து, இந்தச் சொத்தை தற்போது முடக்கி, வருமான வரித்துறை துணை ஆணையர் எம்.விவேகானந்தன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு, அந்நிறுவனத்தின் வாசலில் ஒட்டப்பட்டுள்ளது.



சொத்து முடக்கம் செய்து அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, 90 நாட்களுக்குள்ளாகவோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, இந்த சொத்தின் வாயிலாக ஆதாயம் பெறவோ, பிறருக்கு மாற்றவோ தடை விதிக்கப்படுகிறது. இந்த 'நோட்டீஸ்' குறித்து, ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமார் மகள் தீபா, மகன் தீபக் மற்றும் தி.நகர் சார் - பதிவாளர் ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை, சசிகலா நடராஜனுக்குச் சொந்தமான, 2,015 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.கடந்த 2021 செப்டம்பரில், சசிகலா நடராஜன் உறவினரான செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் முன்னால் வளர்ப்பு மகன் சுதாகரனுக்குச் சொந்தமான, செங்கல்பட்டு மாவட்டம், சிறுதாவூரில் உள்ள, 30 கோடி ரூபாய் மதிப்பிலான, 21 ஏக்கர் நிலம், வருமான வரித் துறையினரால் முடக்கப்பட்டுள்ளது.சென்னை தி. நகர் பத்மநாபா தெருவில் இயங்கிய ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம்  நிறுவனத்தை பினாமி பெயரில் சசிகலா வாங்கிய சொத்து என உச்ச நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டதையடுத்து வருமானவரித்துறையினர் அந்த சொத்தை முடக்கி உள்ளனர்.

வருமான வரித்துறை சார்பில் விளக்கம்

பினாமி பெயரில் சசிகலா வாங்கிய 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர். தற்போது வருமான வரித்துறை அந்த நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று மாதங்களுக்குள் அந்த நோட்டீசிற்கு விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக பயணம் முடிந்து அஇஅதிமுகவை மீட்க அரசியல் பயணம் செய்யும் சசிகலா நடராஜனுக்கு இப்போது வந்த சோதனை அவரது அரசியல் பயணம் தொடர்பானதாகவே பார்க்கப்படுகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த