முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வள்ளுவர் அரிசிக்கு வரியும்.! வறியவர்கள் பிள்ளைக்கு உணவும்

வள்ளுவர் அரிசிக்கு வரியும்.! வறியவர்கள் பிள்ளைக்கு உணவும்     

  25 கிலோ வரைக்கும் தானே ஜிஎஸ்டி? இந்தா பிடி 26 கிலோ.அரிசி பை.தமிழ்நாடு பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கு 5 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவால், தமிழகத்தில் அரிசியின் விலை இன்று முதல் கிலோவுக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை உயர்ந்துள்ளது.




ஜிஎஸ்டி கவுன்சில் 2017 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட அரிசி பிராண்டுகளுக்கு வரி விதித்திருந்தது. ஆனால், பதிவு செய்யப்படாத பிராண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது. தற்போது இந்தத் தளர்வுகள் நீக்கப்பட்டு அரிசி பிராண்டுகளுக்கு இனி 5 சதவீத ஜிஎஸ்டி என்ற முறையைக் கொண்டு வந்துள்ளது.




சில்லறை முறையில் அரிசி (Loose rice) ஜிஎஸ்டியின் வரம்பிற்குள் வராது என்றாலும், அரிசி மற்றும் பிற உணவுப் பொருட்கள் FSSAI சட்டத்தின் கீழ் பேக் செய்யப்பட்ட வடிவில் விற்கப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து கடைக்காரர்களுக்கும் மாநில உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.






இதுவரை ரிஜிஸ்டர்டு பிராண்டுகளுக்கு மட்டுமே 5 சதவீத ஜிஎஸ்டி இருந்த நிலையில், தற்போது பண்டல் பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி, பருப்பு, கோதுமை தானியங்களுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், ஒரு கிலோ அரிசி ரூ.3 வரை விலை உயர்ந்தது. மேலும் ரூ.1000-க்கு விற்கும் 25 கிலோ அரிசி ரூ.1050 ஆக விலை உயர்ந்தது.                     ஆட்சியாளர்கள் தன் சாமானியக் குடிகளிடம் வரி கேட்பது, ஆயுதத்தைப் பிடித்துக் கொண்டு நெடுவழிப் பயணிகளிடம் பணத்தைப் போடு என்று மிரட்டுவதற்குச் சமம். என்கிறார்


திருவள்ளுவர். இது போன்ற பல குறள் அதன் தொடர்ச்சியாக. ஆட்சியாளர்கள் அறியும் வகையில்.   "மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்

மன்னாவாம் மன்னர்க் கொளி."   எனவும்     "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை." எனவும்.  "கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்சூழாது செய்யும் அரசு."         எனவும், பல வகையான கருத்துக்கள் வள்ளுவர் வாக்குள்ளது.       உலக மக்கள் அனைவரும் எந்த ஒரு சலனமுமின்றி திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் படித்து புரிந்து கொள்கிற போது, திருவள்ளுவர் சமூகச் சீர்த்திருத்த அறிஞரென உலக மக்களின் மனதில் பதிகிறார். " நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்  நாடொறும் நாடு கெடும்." எனும் குறள் தந்த திருவள்ளுவர் கி.மு. 31-ல் பிறந்தவர், ஆக இந்த வருடத்துடன் (2022) பிறந்து 2053 ஆண்டுகளாகின்றன. தமிழ் மக்கள் அவர் பிறந்த ஆண்டை ஆதரமாகக் கொண்டு தி.மு, எனவும் தி.பி எனவும் காலத்தைப் பிரித்துப் பயன்படுத்துகின்றனர்.


பொன்னோ, பொருளோ கேட்பாரற்றுக் கிடந்தால் எவரும் தனது, என உரிமைகோருவர் இல்லையா?   அப்படி உருவம் பெற்றது தான் வள்ளுவரின் தோற்றம், அவர் முன் வாழ்ந்த புலவர்கள் பற்றிய  தகவல் கூட பெரிதுமிருக்க வள்ளுவரைப் பற்றிய தகவல்கள் இல்லாதது வியப்பு தான்."வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு." இதுவும் அவர் கூற்றே..  ஒரு பக்கம் அரிசி கூட வரிவிதிப்பு செய்த நிலையில் மறுபக்கம் மற்றும் ஒரு நிகழ்வு வறுமை ஒழிப்பு என்று உணர்ந்து தமிழகத்தின் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் சிறார் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி உணவு திட்டம். 

அரசாணையை வெளியிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

பள்ளிகளில் காலை சிற்றுணவு என 1920 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு  1922-ஆம் ஆண்டில்  திட்டத்திற்கான அரசாணை.

பிறகு காமராஜர் ஆட்சிக்காலத்தில் மாநில அளவில் மதிய உணவு திட்டம்.

பிறகு டாக்டர் எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டமாக அடுத்த கட்டம். 

பின்னர் டாக்டர் கலைஞரும் ஜெ.ஜெயலலிதாவும் சத்துணவிற்கு மேலும் விஷயங்களை சேர்த்து பொலிவுபடுத்தினர்.

இப்போது நூறாண்டுகள் கழித்து தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்  முதற் கட்டமாக 1545 அரசுப் பள்ளிகளில் காலை உணவு.

அவசியமான கல்விக்கும் முன்னே பசிக்காத பிள்ளைகளின் வயிறு இருக்கவேண்டும் எப்போதுமே நினைத்து வருகிறது தமிழ்நாடு.1,545 அரசு தொடக்கப்பள்ளிகளில் 


1.45 லட்சம் ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவுடன் கல்வி புகட்டும் கனவுத்திட்டம் அறிவிப்பு.பசி நீக்கி   கல்வி தருதல் இடைநிற்றலைத் தடுக்க இனிய வழி.மாநிலம் முழுவதும்  விரிவுபடுத்தப்படும் என அறிவிப்பு கூடுதல் மகிழ்ச்சி.   ஒரு பக்கம் பெற்றோர்கள் வாங்கும் அரிசிக்கு வரி மற்றோரு பக்கம் படிக்கும் அவன் பிள்ளைக்கு இரண்டு வேளை உணவு இதுவே இப்போது நிகழ்வு அதன் உடே நேற்று இரு வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன.

முதலாவது உபேர் - ஓலா இரண்டு நிறுவனங்களையும் இணைத்தல் குறித்த உரையாடலில்  முன்னேற்றம்.

இரண்டாவது கேரளாவில் அரசே வாடகை வாகனங்களை வசதிகளை இணைய வழி சேவையாக நிர்வகித்தல்.

 

குடியரசு என்பது மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒன்று.  இங்கு அணைத்து விவசாயிகளும் விவசாய நிலத்தை விற்று வீடு கட்டி, கடை கட்டி, கார் வாங்கி வெள்ளையும் சொள்ளையுமா திரியும் ஒரு கூட்டம். இல்லைன்னா ஊழல் செய்து சம்பாதித்து, ஊரை அடிச்சு உலையில் போட்டு அலையும் மற்றுமொரு கூட்டம் 

தமிழகத்தின் பொருளாதாரமும் விவசாய நிலங்களின் விற்பனையுமென்று தான் எழுத முடியும்.

அரசியல் கருத்தியலில் ஏமாற்றுவதோடு நிற்கவில்லை. அதை புத்தகமாகவும் போட்டும் விற்கிறார்கள் சிலர்.

கால காலமாக எழுதியும் பேசியும் மட்டுமே சம்பாதித்த கூட்டம். வேறு என்ன செய்யும்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த