முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா

தூய்மையான கடற்கரை:பாதுகாப்பான கடல் இந்தியாவின் 7500 கிலோ மீட்டர்  நீண்ட கடற்கரையானது, அதிகமான கடல் வளங்களுடையது. ஒரு நாட்டின் பெயரால் அமைந்துள்ள பெருங்கடல் என்பது இந்தியப் பெருங்கடல் மட்டுமே.


கடலின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில்  பிளாஸ்டிக்குகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.  இது ஒரு சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பிளாஸ்டிக்குகளின் பாதிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தனை ஆய்வுகளிலும், கடல் சூழலை  பிளாஸ்டிக்குகள்  பாதிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். கடலில் வாழும் மீன்கள் பாதிப்படைகின்றன, அதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது . மேலும், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள் அதிக அளவில் கடலில் சென்று சேர்வதால், கடல் சூழலியல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

 ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட் டுள்ளது. இதனையடுத்து கடல் தூய்மை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  தூய்மை இந்தியா திட்டத்தின் படி பல பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.  இம்மாதிரியான நடவடிக்கைகள் மூலம் கடலிலும், கடற்கரையொட்டி உள்ள பகுதிகளிலும் மாசுபாடு ஏற்படாமல் நாம் தடுக்க முடியும். நிலைத்த வளர்ச்சி  இலக்கு 14 ஒரு முக்கிய அம்சமாகும். இதில் 14.1 இன் படி வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் கடலை பாதிக்கும் விதத்திலான அனைத்து நடவடிக்கைகளையும் குறைப்பது,  மேலும் நிலப் பகுதியில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைத்து, கடலில் குப்பைகள் சேரா வண்ணம் பாதுகாப்பது அவசியம்.  பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம், செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. " தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்" என்ற முழக்கத்துடன் இந்தியாவின் அனைத்து கடற்கரைகளையும் சுத்தப்படுத்துவது என்ற இலக்குடன் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் போது,  எப்படி கடலில் குப்பைகள் சேருகின்றன என்ற அறிவியல் பூர்வமான தரவுகள் தொகுக்கப்படும்.  இந்தக் குப்பை கழிவுகளால் எப்படி கடல் நீர் பாதிப்படைகிறது என்பதுடன் அதில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் குறித்தும் தூய்மையான கடற்கரை பகுதி குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

இந்தப் பிரச்சாரத்தில் மத்திய அரசின் புவியியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு காலநிலை மாற்றம் அமைச்சகம், நாட்டு நலப் பணித்திட்டம், இந்திய கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  உள்ளிட்ட அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

இந்த ஆண்டு நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், 75 கடற்கரையோரங்களில்   ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 75 தன்னார்வலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக 75 கடற்கரைகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன.

தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற நோக்குடன் மக்கள் பிரச்சாரம்  75 நாட்கள் நீடிக்கும்.  இதன் மூலம் இந்தியாவில் கடலும்,  கடற்கரையும் தூய்மையானதாக மாறும்.  இதற்கான பிரச்சாரம் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நமது கடல் மற்றும் அதன் சுற்றுசூழலை நாம் பாதுகாக்கும் வகையில்,

தேவையான பொருட்களை மட்டும் வாங்குவோம், வீட்டில் தேவையற்ற குப்பைகளை ஒதுக்கிவைப்போம். இந்த குப்பைகளை பத்திரமாக அதற்கான இடத்தில் கொட்டுவோம்.

மாபெரும் தூய்மையான கடற்கரை பிரச்சாரம் என்பது, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் . இந்த நிகழ்வில் அன்றைய தினம் 7500.கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை மேலும் தூய்மை பெறும்.

கடலின் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்க கூடிய  நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதுடன், எப்படி குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலின் சமநிலையை, கடலின் காலநிலையையும் பாதிப்பதை எடுத்துரைக்கிறது. ஆகஸ்ட் மாதம்  இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரத்தை எடுத்துச் சென்று பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு ஏற்படும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செப்டம்பர் மாதம் செயலில் இறங்கி மக்களை ஒன்று திரட்டி குப்பைகளை அகற்றுவதும் நடைபெறும்.

பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி ஏற்பது இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம் ஆகும்.  உள்ளூர் சமூகத்தை ஒன்று திரட்டி கடற்கரையும், கடலும் நம்முடைய வாழ்வாதாரத்திற்கு எப்படி உறுதுணை புரிகிறது என்பதை உணர்த்துவது, குறிப்பாக பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.  கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சார இயக்கமானது, நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் நடத்தப்படும். சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் இடத்தில் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.

காணொலி வாயிலாக வினாடி-வினா நிகழ்ச்சிகள், உறுதி ஏற்புகள், பிளாஸ்டிக்கால் எற்படும் சவால்கள் குறித்து விவாதிக்கப்படும்.  கடற்கரையோரங்களுக்குச் சென்று சுத்தப்படுத்துவது, விழிப்புணர்வு பிரச்சார பேரணிகள், சிறு நாடகங்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும்.

இந்த பிரச்சாரத்திற்காக "ஈக்கோ மித்ரம்" என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள் , வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் கடற்கரையோர தூய்மைப் படுத்தும் நிகழ்வில் தன்னார்வமாக பணியாற்ற பதிவு செய்து கொள்ளலாம்.

உலகிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி மக்கள் பங்கேற்புடன் நடத்தப்படுகிறது. இது போன்ற தொடர் நடவடிக்கைகளின் மூலமாக பொதுமக்களிடம் எப்படி பிளாஸ்டிக்குகள் நம்முடைய கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கின்றன என்பதை உணர்த் துவதும், அதன் மூலமாக அவர்களின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...