முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா

தூய்மையான கடற்கரை:பாதுகாப்பான கடல் இந்தியாவின் 7500 கிலோ மீட்டர்  நீண்ட கடற்கரையானது, அதிகமான கடல் வளங்களுடையது. ஒரு நாட்டின் பெயரால் அமைந்துள்ள பெருங்கடல் என்பது இந்தியப் பெருங்கடல் மட்டுமே.


கடலின் சுற்றுச்சூழலில் மிக அதிக அளவில்  பிளாஸ்டிக்குகள் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.  இது ஒரு சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பிளாஸ்டிக்குகளின் பாதிப்பு குறித்து பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அத்தனை ஆய்வுகளிலும், கடல் சூழலை  பிளாஸ்டிக்குகள்  பாதிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர். கடலில் வாழும் மீன்கள் பாதிப்படைகின்றன, அதன் மூலம் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது . மேலும், இது பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  கடற்கரை ஒட்டிய பகுதிகளில் சேர்ந்துள்ள குப்பைகள் அதிக அளவில் கடலில் சென்று சேர்வதால், கடல் சூழலியல் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.

 ஐக்கிய நாடுகளின் சுத்தமான கடற்கரை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட் டுள்ளது. இதனையடுத்து கடல் தூய்மை பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.  தூய்மை இந்தியா திட்டத்தின் படி பல பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.  இம்மாதிரியான நடவடிக்கைகள் மூலம் கடலிலும், கடற்கரையொட்டி உள்ள பகுதிகளிலும் மாசுபாடு ஏற்படாமல் நாம் தடுக்க முடியும். நிலைத்த வளர்ச்சி  இலக்கு 14 ஒரு முக்கிய அம்சமாகும். இதில் 14.1 இன் படி வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் கடலை பாதிக்கும் விதத்திலான அனைத்து நடவடிக்கைகளையும் குறைப்பது,  மேலும் நிலப் பகுதியில் நடைபெறும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை குறைத்து, கடலில் குப்பைகள் சேரா வண்ணம் பாதுகாப்பது அவசியம்.  பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்கும் வகையில், ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல்  தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம், செப்டம்பர் மாதம் மூன்றாம் சனிக்கிழமையன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.  இந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி இந்திய அரசின் பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், உள்ளூர் அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து கடற்கரைப் பகுதிகளில் சுத்தப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. " தூய்மையான கடல் பாதுகாப்பான கடல்" என்ற முழக்கத்துடன் இந்தியாவின் அனைத்து கடற்கரைகளையும் சுத்தப்படுத்துவது என்ற இலக்குடன் பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகளின் போது,  எப்படி கடலில் குப்பைகள் சேருகின்றன என்ற அறிவியல் பூர்வமான தரவுகள் தொகுக்கப்படும்.  இந்தக் குப்பை கழிவுகளால் எப்படி கடல் நீர் பாதிப்படைகிறது என்பதுடன் அதில் வாழக்கூடிய நுண்ணுயிரிகள் குறித்தும் தூய்மையான கடற்கரை பகுதி குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

இந்தப் பிரச்சாரத்தில் மத்திய அரசின் புவியியல் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வன பாதுகாப்பு காலநிலை மாற்றம் அமைச்சகம், நாட்டு நலப் பணித்திட்டம், இந்திய கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  உள்ளிட்ட அமைப்புகள், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.

இந்த ஆண்டு நம் நாடு விடுதலை அடைந்து 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நேரத்தில், 75 கடற்கரையோரங்களில்   ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு 75 தன்னார்வலர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.  இதற்காக 75 கடற்கரைகள் நாடு முழுவதும் கண்டறியப்பட்டுள்ளன.

தூய்மையான கடல் பாதுகாப்பான கடல் என்ற நோக்குடன் மக்கள் பிரச்சாரம்  75 நாட்கள் நீடிக்கும்.  இதன் மூலம் இந்தியாவில் கடலும்,  கடற்கரையும் தூய்மையானதாக மாறும்.  இதற்கான பிரச்சாரம் ஜூலை 3 ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

நமது கடல் மற்றும் அதன் சுற்றுசூழலை நாம் பாதுகாக்கும் வகையில்,

தேவையான பொருட்களை மட்டும் வாங்குவோம், வீட்டில் தேவையற்ற குப்பைகளை ஒதுக்கிவைப்போம். இந்த குப்பைகளை பத்திரமாக அதற்கான இடத்தில் கொட்டுவோம்.

மாபெரும் தூய்மையான கடற்கரை பிரச்சாரம் என்பது, செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் . இந்த நிகழ்வில் அன்றைய தினம் 7500.கிலோ மீட்டர் தூரம் கொண்ட கடற்கரை மேலும் தூய்மை பெறும்.

கடலின் சுற்றுச்சூழலை மோசமாக பாதிக்க கூடிய  நடவடிக்கைகளில் இருந்து விலகி இருப்பதுடன், எப்படி குப்பைகள் குறிப்பாக பிளாஸ்டிக்குகள் சுற்றுச்சூழலின் சமநிலையை, கடலின் காலநிலையையும் பாதிப்பதை எடுத்துரைக்கிறது. ஆகஸ்ட் மாதம்  இளைஞர்கள் மத்தியில் பிரச்சாரத்தை எடுத்துச் சென்று பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தீர்வு ஏற்படும் வகையிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், செப்டம்பர் மாதம் செயலில் இறங்கி மக்களை ஒன்று திரட்டி குப்பைகளை அகற்றுவதும் நடைபெறும்.

பிளாஸ்டிக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க உறுதி ஏற்பது இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய அம்சம் ஆகும்.  உள்ளூர் சமூகத்தை ஒன்று திரட்டி கடற்கரையும், கடலும் நம்முடைய வாழ்வாதாரத்திற்கு எப்படி உறுதுணை புரிகிறது என்பதை உணர்த்துவது, குறிப்பாக பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்த பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.  கடற்கரை தூய்மைப்படுத்தும் பிரச்சார இயக்கமானது, நேரடியாகவும் காணொலி வாயிலாகவும் நடத்தப்படும். சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையை பாதுகாக்கும் இடத்தில் நம்முடைய வாழ்க்கை முறையையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு இதன் மூலம் ஏற்படுத்தப்படும்.

காணொலி வாயிலாக வினாடி-வினா நிகழ்ச்சிகள், உறுதி ஏற்புகள், பிளாஸ்டிக்கால் எற்படும் சவால்கள் குறித்து விவாதிக்கப்படும்.  கடற்கரையோரங்களுக்குச் சென்று சுத்தப்படுத்துவது, விழிப்புணர்வு பிரச்சார பேரணிகள், சிறு நாடகங்கள் மற்றும் போட்டிகள் நடத்தப்படும்.

இந்த பிரச்சாரத்திற்காக "ஈக்கோ மித்ரம்" என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி மூலம் பொதுமக்கள் , வரும் செப்டம்பர் 17ஆம் தேதி நடைபெறும் கடற்கரையோர தூய்மைப் படுத்தும் நிகழ்வில் தன்னார்வமாக பணியாற்ற பதிவு செய்து கொள்ளலாம்.

உலகிலேயே முதல் முறையாக அதிக நாட்கள் கடற்கரை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி மக்கள் பங்கேற்புடன் நடத்தப்படுகிறது. இது போன்ற தொடர் நடவடிக்கைகளின் மூலமாக பொதுமக்களிடம் எப்படி பிளாஸ்டிக்குகள் நம்முடைய கடல் வாழ் உயிரினங்களை பாதிக்கின்றன என்பதை உணர்த் துவதும், அதன் மூலமாக அவர்களின் நடத்தைகளில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கிறோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்