தொலைத்தொடர்புத் துறையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு
வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள தொலைத்தொடர்புத் துறை சீர்திருத்தங்களுக்கு இணங்க தொழில்துறையும் சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு
வரும் ஆண்டுகளில் நாட்டின் தொலைத்தொடர்புத் துறை மேலும் பல சீர்திருத்தங்களை சந்திக்கும் என்றும், தொழில்துறையும் தனது பங்கிற்கு சேவையின் தரத்தை குறிப்பிட்டதக்க அளவில் மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் . டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் தொழில்துறையின் பிரதிநிதிகள் அடங்கிய முக்கிய அமைப்பான டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான் மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சேவையின் தர அளவுருக்கள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை, தொலைத்தொடர்புத் துறை அணுக வேண்டும் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தற்போதைய நிலையை விட சேவையின் தர அளவுருக்களை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரிப்பதற்கு புதிய ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.
ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தின் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று கூறிய அவர், பல்வேறு நாடுகள் 40 முதல் 50% சேவையை வழங்குவதற்கே பல வருடங்கள் தேவைப்பட்டதை சுட்டிக் காட்டினார். ஆனால் நாம் மிக தீவிரமாக பணியாற்றுவதோடு குறுகிய காலத்திற்குள் 80% சேவை என்ற இலக்கை அரசு நிர்ணயித்திருப்பதோடு, குறைந்தபட்சம் 80%ஐ நாம் நிச்சயம் அடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான், வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருவதாகவும், இதை அடைவதில் தொலைத் தொடர்புத் துறை அளப்பரிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார். சுகாதாரம், கல்வி சுரங்கம், போக்குவரத்து, தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதில் ஐந்தாம் தலைமுறை இணைப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றார் அவர்.
“ஐந்தாம் தலைமுறை மற்றும் அதைக் கடந்த தொழில்நுட்பத்திற்கு கதி சக்தி தொலைநோக்குப் பார்வை” என்பது இந்த ஆண்டு வருடாந்திர நிகழ்வின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியின்போது ‘கதி சக்தி-இந்தியாவில் அதிகரிக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பின் துவக்கத்திற்கான பாதை' என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும்
தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav
நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்து, சேவையின் தரத்தை துறை அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்
நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் துறை அதிகாரிகளிடையே ஒழுங்குமுறையிலிருந்து வளர்ச்சி வரையிலான உணர்வில் மாற்றம் தேவை என்று மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கள அலுவலர்கள், தலைமையக துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகானால் நேற்று காலை தொடங்கி வைக்கப்பட்ட இந்த உச்சிமாநாட்டில், தொலைத் தொடர்புத்துறை சம்பந்தமான பல்வேறு விஷயங்கள் குறித்த இணை பங்குதாரர்களின் பணி குழுக்களின் பரிந்துரைகள் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் பிற்பகலில் எடுத்துரைக்கப்பட்டது.
டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பின் அவசியத்தை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக் காட்டினார். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, துறை மற்றும் தலைமையகத்தில் உள்ள துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் கூறினார். பழங்கால தொலைத்தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம் என்றும், இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் ஆலோசனைகள்/ கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு தேவுசிங் சவுகான், 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய முன்னேற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையின் பங்களிப்பை வலியுறுத்தினார்
கருத்துகள்