முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தொலைத்தொடர்புத் துறையில் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் அமைச்சர் பேச்சு

வரும் ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவுள்ள தொலைத்தொடர்புத் துறை சீர்திருத்தங்களுக்கு இணங்க தொழில்துறையும் சேவையின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் பேச்சு

வரும் ஆண்டுகளில் நாட்டின் தொலைத்தொடர்புத் துறை மேலும் பல சீர்திருத்தங்களை சந்திக்கும் என்றும், தொழில்துறையும் தனது பங்கிற்கு சேவையின் தரத்தை குறிப்பிட்டதக்க அளவில் மேம்படுத்த வேண்டும் என்றும் மத்திய தொலைத் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார் .  டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் தொழில்துறையின் பிரதிநிதிகள் அடங்கிய முக்கிய அமைப்பான  டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குனர்கள் சங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மத்திய தொலைத் தொடர்புத் துறை இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான் மற்றும் இதர பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

சேவையின்  தர அளவுருக்கள் கணிசமாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை, தொலைத்தொடர்புத் துறை அணுக வேண்டும் என்றும் திரு அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தற்போதைய நிலையை விட சேவையின் தர அளவுருக்களை மூன்று அல்லது நான்கு மடங்கு அதிகரிப்பதற்கு புதிய ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு துறைக்கு அவர் அறிவுறுத்தினார்.


ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தின் பயணம் மிகவும் உற்சாகமாக இருக்கும் என்று கூறிய அவர், பல்வேறு நாடுகள் 40 முதல் 50% சேவையை வழங்குவதற்கே பல வருடங்கள் தேவைப்பட்டதை சுட்டிக் காட்டினார். ஆனால் நாம் மிக தீவிரமாக பணியாற்றுவதோடு குறுகிய காலத்திற்குள் 80%  சேவை என்ற இலக்கை அரசு நிர்ணயித்திருப்பதோடு,  குறைந்தபட்சம் 80%ஐ நாம் நிச்சயம் அடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேசிய இணையமைச்சர் திரு தேவுசிங் சவுகான், வளரும் நாடு என்ற நிலையிலிருந்து இந்தியா வளர்ந்த நாடாக மாறி வருவதாகவும், இதை அடைவதில் தொலைத் தொடர்புத் துறை அளப்பரிய பங்களிப்பை வழங்கும் என்றும் தெரிவித்தார். சுகாதாரம், கல்வி சுரங்கம், போக்குவரத்து, தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவதில் ஐந்தாம் தலைமுறை இணைப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கும் என்றார் அவர்.

“ஐந்தாம் தலைமுறை மற்றும் அதைக் கடந்த தொழில்நுட்பத்திற்கு கதி சக்தி தொலைநோக்குப் பார்வை” என்பது இந்த ஆண்டு வருடாந்திர நிகழ்வின் கருப்பொருளாகும். நிகழ்ச்சியின்போது ‘கதி சக்தி-இந்தியாவில் அதிகரிக்கப்பட்ட டிஜிட்டல் உள்கட்டமைப்பின் துவக்கத்திற்கான பாதை' என்ற தலைப்பிலான வெள்ளை அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. மேலும் 

தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டுக்கும் தொலைத்தொடர்பு இணைப்பை உறுதி செய்து, சேவையின் தரத்தை துறை அதிகாரிகள் மேம்படுத்த வேண்டும்: மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல்

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் தொலைத்தொடர்பு  இணைப்பை உறுதி செய்தல், சேவையின் தரத்தை மேம்படுத்துதல் ஆகிய பொதுவான இலக்குகளில் துறை அதிகாரிகளிடையே ஒழுங்குமுறையிலிருந்து  வளர்ச்சி வரையிலான உணர்வில் மாற்றம் தேவை என்று மத்திய தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம், ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். கள அலுவலர்கள், தலைமையக துறை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளின் இரண்டு நாள் உச்சிமாநாட்டில் நேற்று உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்தார். மத்திய தகவல் தொடர்பு இணையமைச்சர் திரு தேவுசிங்  சவுகானால் நேற்று காலை  தொடங்கி வைக்கப்பட்ட இந்த உச்சிமாநாட்டில், தொலைத் தொடர்புத்துறை சம்பந்தமான பல்வேறு விஷயங்கள் குறித்த இணை பங்குதாரர்களின் பணி குழுக்களின் பரிந்துரைகள் அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் பிற்பகலில் எடுத்துரைக்கப்பட்டது.

  டிஜிட்டல் பொருளாதாரத்தின் உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்கத்தில் தரமான தொலைத்தொடர்பு இணைப்பின் அவசியத்தை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக் காட்டினார். தொழில்துறை மற்றும் கல்வியாளர்களுடன் இணைந்து, துறை மற்றும் தலைமையகத்தில் உள்ள துறை அலுவலர்கள் பணியாற்றினால் மட்டுமே தொழில்நுட்பத்தின் மாறும் தன்மைக்கு ஏற்றவாறு தொலைத்தொடர்புத் துறையை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று அவர் கூறினார். பழங்கால தொலைத்தொடர்பு சட்டங்களுக்கு பதிலாக வலுவான மற்றும் எதிர்காலத்துக்கு ஏற்ற சட்டம் அவசியம் என்றும், இது தொடர்பான வரைவு அறிக்கை, பொது மக்களின் ஆலோசனைகள்/ கருத்துக்களுக்காக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 முன்னதாக உச்சிமாநாட்டின் துவக்க விழாவில் பேசிய அமைச்சர் திரு தேவுசிங்  சவுகான், 5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கிய முன்னேற்றத்தில் தொலைத்தொடர்புத் துறையின் பங்களிப்பை வலியுறுத்தினார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...