சிபிஐ அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மணிஷ் சிசோடியா திடுக்கிடும் தகவல்
டெல்லியில் மதுபானக் கொள்கைகள் அமலாக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாக மணிஷ் சிசோடியாவிற்கெதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது
சம்பந்தமாக ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, மணிஷ் சிசோடியாவுக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 31 இடங்களில் நடத்த சோதனையில் பல முக்கியமான ஆவணங்களைக் கைப்பற்றியதாக சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்த சோதனைக்குப் பிறகு மணிஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சிபிஐ வழக்கும் பதிவு செய்துள்ள நிலையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த மணிஷ் சிசோடியா, மத்திய அரசின் வழக்கமான பழிவாங்கும் நடவடிக்கையே இது எனக் கூறி வருகிறார்.மேலும், பாஜகவின் கைப்பாவையைப் போல சிபிஐ அமைப்பு செயல்படுவதாகவும் ஆம் ஆத்மி அரசின் சிறப்பான செயல்பாடு கல்வித் துறையில் ஆம் ஆத்மி செய்து வரும் மாற்றங்கள் பாஜகவை கலக்கம் அடையச் செய்துள்ளதாகவும் சாடினார்.
அத்துடன் தனக்கெதிராக போலி கலால் வழக்கைப் பதிவு செய்யுமாறு சிபிஐ அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக மணிஷ் சிசோடியா திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பேசுகையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது போலி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் மணீஷ் சிசோடியாவின் வீடு, அலுவலகம் மற்றும் வங்கி லாக்கர் ஆகியவற்றில் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் வழக்கு தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று சிபிஐ அதிகாரிகள் புரிந்துகொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் அழுத்தத்தில் உள்ளனர். இதனால் அழுத்தம் காரணமாக மணீஷ் சிசோடியாவை கைது செய்வார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் பிரதமர் மோடியிடமிருந்து நற்பெயர் சான்றிதழ் பெறுவதை நாடு முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், அரசியல் வாழ்க்கையில் கைதுகள் என்பது ஒரு அங்கம். ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 49 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இதுவரை 169 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்