முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய சிறு-குறு தொழில் துறை

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை - மத்திய இணையமைச்சர் திரு பானு பிரதாப்சிங் வர்மா


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை வழங்குவதாகவும் மேலும் அதன் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக 11 கோடிக்கும் அதிகமான மக்கள்  இந்த துறையில் பணி புரிகிறார்கள் என்றும், தொழில்முனைவோருக்கு முக்கிய பங்கு அளிப்பதுடன் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த துறை பெரும் பங்கு வகிப்பதாகவும் மத்திய சிறு-குறு தொழில் துறைக்கான மத்திய இணையமைச்சர் திரு பானு பிரதாப்சிங் வர்மா பேசினார்.


தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள் அமைச்சகம் சார்பில் தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் மாநாடு நடைபெற்றது.   

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர், தமிழ்நாட்டின் சிறு-குறு தொழில் துறையில் தொழில்முனைவு மற்றும் வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த கருத்தரங்கில் புதிய தொடக்கங்கள், வணிக விரிவாக்கம், தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல், சந்தைப்படுத்தல் மற்றும் திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்க திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறும் வகையிலான தளமாக விளங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றார்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு-குறு தொழில் துறை சுமார் 30 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன என்று கூறிய அமைச்சர்,  இந்த துறை இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான பாதையை வகுத்து தருவதோடு,  வலுவான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இன்றைய நிலவரப்படி, 1.09 கோடி சிறு-குறு தொழில் நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவற்றில் 11.46 லட்சம் அலகுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஒரு துடிப்பான தொழில்துறையாக தொழில் முனைவோரின் பாரம்பரியத்தை முன்வைக்கும் வகையில் இது கைவினைப்பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில்களில் தனது பங்களிப்பை வழங்கிவருகிறது. வாகன உதிரிபாகங்கள் மற்றும் பழுதுநீக்குதல் ஆகியவற்றில் முன்னணியில் உள்ளது. உள்ளாடைகள், ஆயத்த ஆடைகள், தோல் மற்றும் தோல் பொருட்கள் உட்பட பல சிறு தொழில்களை உள்ளடக்கிய குழுமங்களின் தாயகமாகவும் தமிழகம் உள்ளது.

கட்டிடக்கலை அற்புதங்கள் நிறைந்த வரலாற்று கோயில்களை உள்ளடக்கிய தமிழகம் மத மற்றும் ஆன்மீக சுற்றுலாவிற்கு ஏற்ற  இடமாக உள்ளது, அதே நேரத்தில் மக்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் வழங்குகிறது.

சிறு-குறு தொழில் துறையின் மேம்பாட்டிற்காக மத்திய மற்றும் மாநில அரசுகளால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் தொடர்ச்சியான ஊக்குவிப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்த அற்புதமான வளர்ச்சி காணப்படுகிறது.

திறன் மேம்பாடு, சந்தை இணைப்புகள், நிதி வசதி, டெண்டர் ஏலம் போன்ற பல்வேறு தலையீடுகள் மூலம் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின  தொழில்முனைவோருக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான முதன்மை நோக்கத்துடன் தேசிய ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான முனையம் தொடங்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் பழங்குடியினர் கைவினைப் பொருட்களின் கண்காட்சி இடம் பெற்றிருந்தது.


இந்த மாநாட்டில் தமிழக சிறுகுறு தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் ஆகியோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...