முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பாலியில் ஜி-20 உச்சிமாநாட்டில் இந்தியத் தலைமையின் கீழ் ஆதரவளித்த. அதிபர்களுக்கு பிரதமர் நன்றி

பாலியில் ஜி-20 உச்சிமாநாட்டின் இடையே அமெரிக்கா மற்றும் இந்தோனேசிய அதிபர்களுடன் பிரதமர் சந்திப்பு

ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு.
பாலியில் நடைபெறும்  ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் மேன்மை தங்கிய ரிஷி சுனக்-கை சந்தித்துப் பேசினார்.

இருநாட்டு தலைவர்களின் முதல் சந்திப்பு இதுவாகும். அப்போது இங்கிலாந்து பிரதமராக சுனக்  பொறுப்பேற்றதற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது இந்தியா-இங்கிலாந்து இடையே பரந்த அளவிலான கூட்டாண்மை மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும், ஜி-20 மற்றும் காமன்வெல்த் உள்ளிட்ட அமைப்புகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவது குறித்து இரு தலைவர்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

வர்த்தகம், போக்குவரத்து, பாதுகாப்பு, பந்தோபஸ்து போன்ற  முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பாலியில் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோசப் ஆர். பைடன் மற்றும் இந்தோனேசிய அதிபர் மேதகு திரு ஜோகோ விடோடோ ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார்.

சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மன்றமாக ஜி-20 திகழ்கிறது என்று கூறிய பிரதமர், சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்காக முக்கிய பொருளாதரங்கள் அனைத்தையும் இணைப்பதற்கான திறனை இந்த அமைப்பு தொடர்ந்து வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நமது பொருளாதாரங்களில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரவும், தற்போதைய பருவநிலை, எரிசக்தி மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், உலகளாவிய மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மாற்றங்களை ஊக்குவிக்கவும் ஜி-20 அமைப்பு பணியாற்றுகிறது.



இந்த அமைப்பிற்குத் தலைமை தாங்கும் போது இதர வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்கும் என்று பிரதமர் திரு மோடி உறுதியளித்தார். பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு உதவுதல்; உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவு; பொருளாதார பாதுகாப்பு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது; பல அம்ச நிதி நிறுவனங்களுக்கு மேம்பட்ட மற்றும் புதுமையான நிதி மாதிரிகளை உருவாக்குதல்; பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, பலவீனமான பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல், உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதற்கு அரசு மற்றும் தனியார் நிதியைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஜி-20 அமைப்பின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 அமைப்பின் பணிகளுக்கு ஆதரவளித்ததற்காக அதிபர்கள் திரு விடோடோ மற்றும் திரு பைடன் ஆகியோருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்    பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே ஜெர்மனி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு



பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி,  ஜெர்மனி பிரதமர் திரு ஓலஃப் ஸ்கால்சை சந்தித்துப் பேசினார்.

இந்த ஆண்டு இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்ட 3-வது கூட்டம் இதுவாகும்; முன்னதாக இந்தியா – ஜெர்மனி 6-வது நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் கடந்த மே 2, 2022 அன்று பெர்லின் சென்ற போது, சந்தித்தார். பின்னர், பிரதமர்  திரு ஸ்கால்சின் அழைப்பின் பேரில் ஜி-7  மாநாட்டில் பங்கேற்பதற்காக நட்பு நாடு என்ற முறையில், ஜெர்மனியில் உள்ள ஸ்கால்ஸ் எல்மாவுக்கு பிரதமர் சென்றார்.


இந்தியா – ஜெர்மனி நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தின் போது பசுமை மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக புதிய கட்டத்தின் கீழ், பிரதமர் மற்றும் ஜெர்மனி பிரதமர், கையெழுத்திட்டது தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, குடியமர்வு, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில், ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

ஜி-20, ஐநா போன்ற பலதரப்பட்ட அமைப்புகளில், மேலும், ஒத்துழைத்து இணைந்து செயல்படுவது என இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.     பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபருடனான பிரதமரின் சந்திப்பு

பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார்.

பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற பலதரப்பட்ட துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்புக் குறித்து இரண்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். புதிய துறைகளில் ஏற்படும் பொருளாதார தொடர்புகள் அதிகரிப்பதை இருதலைவர்களும் வரவேற்றனர்.

பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர இருநாட்டு  நலன் குறித்தும் விவாதிக்கப்படும் .      பாலியில் ஜி-20 மாநாட்டின் போது சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டின் பொது பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமர் மேதகு திரு. லீ சியென் லூங்கை இன்று சந்தித்தார். கடந்த ஆண்டு ரோமில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் லீயை சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

செப்டம்பர் 2022 இல் புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேஜை கூட்டத்தின் தொடக்க அமர்வு உட்பட இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் வழக்கமான உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் நிறுவன தொடர்புகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தினர்.


இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான இணைப்புகளை, குறிப்பாக ஃபின்டெக் (நிதி சார் தொழில்நுட்பம்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில், மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். பசுமைப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யவும், இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வழிமுறை, சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் மற்றும் விரைவு சக்தி திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமாறு சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இரு தலைவர்களும் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய மேம்பாடு குறித்த தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியாவின் கிழக்கை உற்று நோக்குங்கள் கொள்கையில் சிங்கப்பூரின் பங்கையும், 2021-2024 வரையிலான ஆசியான்-இந்திய உறவுகளின் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூரின் பங்கையும் பிரதமர் மோடி பாராட்டினார். இந்தியா-ஆசியான் பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் விருப்பத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.பாலியில் ஜி-20 மாநாட்டின் போது இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை இன்று சந்தித்தார்.

இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மெலோனிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் முதலீடு, பயங்கரவாத எதிர்ப்பு, இரு நாட்டு மக்கள் இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.


இந்தியா-இத்தாலி இடையேயான தூதரக உறவின் 75-வது ஆண்டினைக் கொண்டாடுவதையும் அடுத்த ஆண்டு ஜி-20 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மெலோனியை வரவேற்பதையும் பிரதமர் மோடி எதிர் நோக்கி இருக்கிறார்   பாலியில் ஜி-20 மாநாட்டிற்கு இடையே பிரதமரின் ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு

பாலியில் ஜி-20 மாநாட்டிற்கு இடையே  ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆண்டனி அல்பேன்சை  பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.11.2022) சந்தித்துப் பேசுகிறார். விரிவான செயல்திட்ட கூட்டாண்மை கீழ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பாக இருப்பது குறித்தும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே உயர்மட்ட பேச்சுக்கள் வழக்கமாக நடைபெறுவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, தூய்மை எரிசக்தி மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு ஆகிய பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து  அவர்கள் ஆய்வு செய்தனர். கல்வி குறிப்பாக உயர்கல்வி, தொழிற்கல்வி, பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பு, ஆகிய துறைகளில் உள்ள கூட்டாண்மை குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி நிலவுவது பருவநிலை தொடர்பான விவகாரங்கள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உள்ளிட்ட குறித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்களில்  பரஸ்பரம் இருநாட்டு நலன் குறித்த தங்களது கருத்துக்களையும் தலைவர்கள் பரிமாறிக் கொண்டனர்.


விரைவில் இந்தியாவில் ஆஸ்திரேலிய பிரதமர் திரு அல்பேன்சை வரவேற்பதை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.   பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்

பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிற ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் 'டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்' என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் செய்து பார்வையிட்டார்.

மாங்குரோவ் தாவரங்கள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.  ஜி-20 தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு முன்முயற்சியான பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இந்தியா சேர்ந்துள்ளது.

இந்தியாவின் 5000 சதுரகிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 50-க்கும் அதிகமாக மாங்குரோவ் வகைகள் இருப்பதை காணலாம். காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சும் திறனும், செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் தன்மையும் கொண்ட மாங்குரோவ் காடுகளை பாதுகாத்து, மறுசீரமைப்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.பாலியில் ஜி-20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வான டிஜிட்டல் மாற்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்

மேதகு பெருமக்களே,

டிஜிட்டல் மாற்றம் என்பது நமது யுகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வறுமைக்கு எதிராக உலகம் முழுவதும் பல தசாப்தங்களாக நடைபெறும் போராட்டங்களுக்கு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முறையான பயன்பாடு உந்து சக்தியாக மாறியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து பணி புரிதல் மற்றும் காகிதம் இல்லா பசுமை அலுவலகங்கள் போன்று கொவிட் காலத்தில் நமக்கு பரிச்சயமான டிஜிட்டல் தீர்வுகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சியிலும் உதவியாக இருக்கக்கூடும். எனினும் டிஜிட்டல் அணுகுமுறை முற்றிலும் உள்ளடக்கியதாக, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு பரவலாக்கப்பட்ட பிறகு தான் இதன் பயன்கள் முழுவதும் உணரப்படும். துரதிஷ்டவசமாக, இத்தகைய ஆற்றல் வாய்ந்த கருவியை வரவு, செலவு புத்தகத்துடன் தொடர்புபடுத்தி எளிய வர்த்தக நோக்கத்துடன் மட்டுமே நாம் அணுகி வருகிறோம். டிஜிட்டல் மாற்றத்தின் பயன்களை மனித சமூகத்தின் சிறு பிரிவினர் மட்டுமல்லாமல் அனைவரும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது ஜி-20 தலைவர்களாகிய நமது பொறுப்பாகும்.

டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக மாற்றினால், சமூகப் பொருளாதார மாற்றங்கள் ஏற்படும் என்பதை கடந்த சில ஆண்டுகளில் தனது அனுபவத்தின் மூலம் இந்தியா அறிந்துள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டினால் அளவும், வேகமும் அதிகரிக்கும். ஆளுகையில் வெளிப்படுத்தன்மையைக் கொண்டு வர முடியும். ஜனநாயக கோட்பாடுகளை உள்ளடக்கிய அடிப்படை கட்டமைப்புடனான டிஜிட்டல் பொது சொத்துக்களை இந்தியா உருவாக்கியுள்ளது. வெளிப்படையான ஆதாரம், வெளிப்படையான ஏ.பி.ஐ மற்றும் வெளிப்படை தரங்களின் அடிப்படையில் இயங்கக்கூடிய வகையில், பொதுவான ஒன்றாக இந்த தீர்வுகள் அமைந்துள்ளன. இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை எங்களது இந்த அணுகுமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உதாரணமாக, எங்களது ஒருங்கிணைந்த கட்டண இணைப்பு (யு.பி.ஐ).

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 40% கட்டண பரிவர்த்தனைகள் யு.பி.ஐ வாயிலாக நடைபெற்றன. அதேபோல டிஜிட்டல் அடையாளத்தின் அடிப்படையில் 460 மில்லியன் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கி, நிதி உள்ளடக்கத் துறையில்  இந்தியாவை சர்வதேச நாடுகளின் வழிகாட்டியாக உயர்த்தி உள்ளோம். எங்களது கோவின் தளம், மனித வரலாற்றின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி, பெரும் வெற்றி பெற்றது.

மேதகு பெருமக்களே,

இந்தியாவில் டிஜிட்டல் அணுகலை நாங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டாலும், சர்வதேச அளவில் மாபெரும் டிஜிட்டல் இடைவெளி இன்னும் உள்ளது. ஏராளமான வளர்ந்து வரும் நாடுகளின் மக்களுக்கு டிஜிட்டல் அடையாளங்கள் எதுவும் இல்லை. 50 நாடுகளில் மட்டுமே டிஜிட்டல் கட்டண முறை உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்களை உலகம் முழுவதும் அனைவரும் பெற்று, அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நாம் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்போமா!

அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்கும் போது தனது கூட்டாளிகளோடு இந்த நோக்கத்திற்காக இணைந்து பணியாற்றும். “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற எங்கள் தலைமையின் ஒட்டுமொத்த கருப்பொருளின் உள்ளார்ந்த அங்கமாக “வளர்ச்சிக்கு தரவு” என்ற கோட்பாடு இருக்கும்.

நன்றி.

(பொறுப்புத்துறப்பு:   இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்). பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...