பாலியில் ஜி-20 உச்சிமாநாட்டின் இடையே அமெரிக்கா மற்றும் இந்தோனேசிய அதிபர்களுடன் பிரதமர் சந்திப்பு
பாலியில் நடைபெறும் ஜி-20 தலைவர்களின் உச்சிமாநாட்டின் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் மேதகு திரு ஜோசப் ஆர். பைடன் மற்றும் இந்தோனேசிய அதிபர் மேதகு திரு ஜோகோ விடோடோ ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார்.
சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பின் முக்கிய மன்றமாக ஜி-20 திகழ்கிறது என்று கூறிய பிரதமர், சர்வதேச சவால்களை எதிர்கொள்வதற்காக முக்கிய பொருளாதரங்கள் அனைத்தையும் இணைப்பதற்கான திறனை இந்த அமைப்பு தொடர்ந்து வெளிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நமது பொருளாதாரங்களில் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை மீண்டும் கொண்டு வரவும், தற்போதைய பருவநிலை, எரிசக்தி மற்றும் உணவு தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ளவும், உலகளாவிய மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொழில்நுட்ப மாற்றங்களை ஊக்குவிக்கவும் ஜி-20 அமைப்பு பணியாற்றுகிறது.
இந்த அமைப்பிற்குத் தலைமை தாங்கும் போது இதர வளர்ந்து வரும் நாடுகளுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்கும் என்று பிரதமர் திரு மோடி உறுதியளித்தார். பாதிப்புக்குள்ளாகும் நாடுகளுக்கு உதவுதல்; உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவு; பொருளாதார பாதுகாப்பு மற்றும் சர்வதேச விநியோக சங்கிலியை வலுப்படுத்துவது; பல அம்ச நிதி நிறுவனங்களுக்கு மேம்பட்ட மற்றும் புதுமையான நிதி மாதிரிகளை உருவாக்குதல்; பருவநிலை மாற்றம், பெருந்தொற்று, பலவீனமான பொருளாதாரம், வறுமை ஒழிப்பு, நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைதல், உள்கட்டமைப்பு இடைவெளியைக் குறைப்பதற்கு அரசு மற்றும் தனியார் நிதியைப் பயன்படுத்துதல் போன்றவற்றில் ஜி-20 அமைப்பின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி-20 அமைப்பின் பணிகளுக்கு ஆதரவளித்ததற்காக அதிபர்கள் திரு விடோடோ மற்றும் திரு பைடன் ஆகியோருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார் பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே ஜெர்மனி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜெர்மனி பிரதமர் திரு ஓலஃப் ஸ்கால்சை சந்தித்துப் பேசினார்.
இந்த ஆண்டு இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்ட 3-வது கூட்டம் இதுவாகும்; முன்னதாக இந்தியா – ஜெர்மனி 6-வது நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் கடந்த மே 2, 2022 அன்று பெர்லின் சென்ற போது, சந்தித்தார். பின்னர், பிரதமர் திரு ஸ்கால்சின் அழைப்பின் பேரில் ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக நட்பு நாடு என்ற முறையில், ஜெர்மனியில் உள்ள ஸ்கால்ஸ் எல்மாவுக்கு பிரதமர் சென்றார்.
இந்தியா – ஜெர்மனி நிர்வாக ஆலோசனைக் கூட்டத்தின் போது பசுமை மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக புதிய கட்டத்தின் கீழ், பிரதமர் மற்றும் ஜெர்மனி பிரதமர், கையெழுத்திட்டது தொடர்பாக இருதரப்பு ஒத்துழைப்புக் குறித்து தலைவர்கள் விவாதித்தனர். வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, குடியமர்வு, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில், ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
ஜி-20, ஐநா போன்ற பலதரப்பட்ட அமைப்புகளில், மேலும், ஒத்துழைத்து இணைந்து செயல்படுவது என இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபருடனான பிரதமரின் சந்திப்பு
பாலியில் ஜி-20 மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் திரு இமானுவேல் மேக்ரானை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார்.
பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு போன்ற பலதரப்பட்ட துறைகளில் தற்போதுள்ள ஒத்துழைப்புக் குறித்து இரண்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர். புதிய துறைகளில் ஏற்படும் பொருளாதார தொடர்புகள் அதிகரிப்பதை இருதலைவர்களும் வரவேற்றனர்.
பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பர இருநாட்டு நலன் குறித்தும் விவாதிக்கப்படும் . பாலியில் ஜி-20 மாநாட்டின் போது சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டின் பொது பிரதமர் திரு நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமர் மேதகு திரு. லீ சியென் லூங்கை இன்று சந்தித்தார். கடந்த ஆண்டு ரோமில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் லீயை சந்தித்ததை அவர் நினைவு கூர்ந்தார்.
செப்டம்பர் 2022 இல் புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேஜை கூட்டத்தின் தொடக்க அமர்வு உட்பட இந்தியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வலுவான உத்திசார் ஒத்துழைப்பு மற்றும் வழக்கமான உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் நிறுவன தொடர்புகள் குறித்து இரு பிரதமர்களும் விவாதித்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பான இணைப்புகளை, குறிப்பாக ஃபின்டெக் (நிதி சார் தொழில்நுட்பம்), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருந்துத் துறைகளில், மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். பசுமைப் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்யவும், இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு மேம்பாட்டு வழிமுறை, சொத்துக்கள் மூலம் வருவாய் ஈட்டும் திட்டம் மற்றும் விரைவு சக்தி திட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளமாறு சிங்கப்பூருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இரு தலைவர்களும் சமீபத்திய உலகளாவிய மற்றும் பிராந்திய மேம்பாடு குறித்த தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். இந்தியாவின் கிழக்கை உற்று நோக்குங்கள் கொள்கையில் சிங்கப்பூரின் பங்கையும், 2021-2024 வரையிலான ஆசியான்-இந்திய உறவுகளின் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூரின் பங்கையும் பிரதமர் மோடி பாராட்டினார். இந்தியா-ஆசியான் பன்முக ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் விருப்பத்தை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.பாலியில் ஜி-20 மாநாட்டின் போது இத்தாலி பிரதமருடன் பிரதமர் சந்திப்பு
பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இத்தாலி பிரதமர் மேதகு திருமதி ஜியோர்ஜியா மெலோனியை இன்று சந்தித்தார்.
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மெலோனிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வர்த்தகம் மற்றும் முதலீடு, பயங்கரவாத எதிர்ப்பு, இரு நாட்டு மக்கள் இடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தங்களின் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்தியா-இத்தாலி இடையேயான தூதரக உறவின் 75-வது ஆண்டினைக் கொண்டாடுவதையும் அடுத்த ஆண்டு ஜி-20 உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மெலோனியை வரவேற்பதையும் பிரதமர் மோடி எதிர் நோக்கி இருக்கிறார் பாலியில் ஜி-20 மாநாட்டிற்கு இடையே பிரதமரின் ஆஸ்திரேலிய பிரதமருடனான சந்திப்பு
பாலியில் ஜி-20 மாநாட்டிற்கு இடையே ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆண்டனி அல்பேன்சை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.11.2022) சந்தித்துப் பேசுகிறார். விரிவான செயல்திட்ட கூட்டாண்மை கீழ், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பாக இருப்பது குறித்தும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையே உயர்மட்ட பேச்சுக்கள் வழக்கமாக நடைபெறுவது குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பாதுகாப்பு, வர்த்தகம், கல்வி, தூய்மை எரிசக்தி மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையேயான உறவு ஆகிய பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து அவர்கள் ஆய்வு செய்தனர். கல்வி குறிப்பாக உயர்கல்வி, தொழிற்கல்வி, பயிற்சி மற்றும் திறன் கட்டமைப்பு, ஆகிய துறைகளில் உள்ள கூட்டாண்மை குறித்து விரிவாக விவாதித்தனர்.
இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில், ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி நிலவுவது பருவநிலை தொடர்பான விவகாரங்கள் மற்றும் இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் உள்ளிட்ட குறித்து தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். அத்துடன் பிராந்தியம் மற்றும் சர்வதேச விவகாரங்களில் பரஸ்பரம் இருநாட்டு நலன் குறித்த தங்களது கருத்துக்களையும் தலைவர்கள் பரிமாறிக் கொண்டனர்.
விரைவில் இந்தியாவில் ஆஸ்திரேலிய பிரதமர் திரு அல்பேன்சை வரவேற்பதை எதிர்நோக்கியிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். பாலியில் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்
பாலியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் திரு.நரேந்திர மோடி, பிற ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் 'டமான் ஹுட்டான் ராய என்குரா ராய்' என்னுமிடத்தில் உள்ள மாங்குரோவ் காடுகளுக்கு பயணம் செய்து பார்வையிட்டார்.
மாங்குரோவ் தாவரங்கள் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ஜி-20 தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா இருந்தபோது, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டு முன்முயற்சியான பருவநிலைக்கான மாங்குரோவ் கூட்டணியில் இந்தியா சேர்ந்துள்ளது.
இந்தியாவின் 5000 சதுரகிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் 50-க்கும் அதிகமாக மாங்குரோவ் வகைகள் இருப்பதை காணலாம். காற்றில் உள்ள கார்பனை உறிஞ்சும் திறனும், செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்துக்கு உதவும் தன்மையும் கொண்ட மாங்குரோவ் காடுகளை பாதுகாத்து, மறுசீரமைப்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது.பாலியில் ஜி-20 உச்சிமாநாட்டின் மூன்றாவது அமர்வான டிஜிட்டல் மாற்றத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
மேதகு பெருமக்களே,
டிஜிட்டல் மாற்றம் என்பது நமது யுகத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். வறுமைக்கு எதிராக உலகம் முழுவதும் பல தசாப்தங்களாக நடைபெறும் போராட்டங்களுக்கு, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முறையான பயன்பாடு உந்து சக்தியாக மாறியுள்ளது. தொலைதூரத்தில் இருந்து பணி புரிதல் மற்றும் காகிதம் இல்லா பசுமை அலுவலகங்கள் போன்று கொவிட் காலத்தில் நமக்கு பரிச்சயமான டிஜிட்டல் தீர்வுகள், பருவநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சியிலும் உதவியாக இருக்கக்கூடும். எனினும் டிஜிட்டல் அணுகுமுறை முற்றிலும் உள்ளடக்கியதாக, டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாடு பரவலாக்கப்பட்ட பிறகு தான் இதன் பயன்கள் முழுவதும் உணரப்படும். துரதிஷ்டவசமாக, இத்தகைய ஆற்றல் வாய்ந்த கருவியை வரவு, செலவு புத்தகத்துடன் தொடர்புபடுத்தி எளிய வர்த்தக நோக்கத்துடன் மட்டுமே நாம் அணுகி வருகிறோம். டிஜிட்டல் மாற்றத்தின் பயன்களை மனித சமூகத்தின் சிறு பிரிவினர் மட்டுமல்லாமல் அனைவரும் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்வது ஜி-20 தலைவர்களாகிய நமது பொறுப்பாகும்.
டிஜிட்டல் கட்டமைப்பை உள்ளடக்கியதாக மாற்றினால், சமூகப் பொருளாதார மாற்றங்கள் ஏற்படும் என்பதை கடந்த சில ஆண்டுகளில் தனது அனுபவத்தின் மூலம் இந்தியா அறிந்துள்ளது. டிஜிட்டல் பயன்பாட்டினால் அளவும், வேகமும் அதிகரிக்கும். ஆளுகையில் வெளிப்படுத்தன்மையைக் கொண்டு வர முடியும். ஜனநாயக கோட்பாடுகளை உள்ளடக்கிய அடிப்படை கட்டமைப்புடனான டிஜிட்டல் பொது சொத்துக்களை இந்தியா உருவாக்கியுள்ளது. வெளிப்படையான ஆதாரம், வெளிப்படையான ஏ.பி.ஐ மற்றும் வெளிப்படை தரங்களின் அடிப்படையில் இயங்கக்கூடிய வகையில், பொதுவான ஒன்றாக இந்த தீர்வுகள் அமைந்துள்ளன. இன்று இந்தியாவில் ஏற்பட்டுள்ள டிஜிட்டல் புரட்சியை எங்களது இந்த அணுகுமுறை அடிப்படையாகக் கொண்டுள்ளது. உதாரணமாக, எங்களது ஒருங்கிணைந்த கட்டண இணைப்பு (யு.பி.ஐ).
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 40% கட்டண பரிவர்த்தனைகள் யு.பி.ஐ வாயிலாக நடைபெற்றன. அதேபோல டிஜிட்டல் அடையாளத்தின் அடிப்படையில் 460 மில்லியன் புதிய வங்கி கணக்குகளை உருவாக்கி, நிதி உள்ளடக்கத் துறையில் இந்தியாவை சர்வதேச நாடுகளின் வழிகாட்டியாக உயர்த்தி உள்ளோம். எங்களது கோவின் தளம், மனித வரலாற்றின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி, பெரும் வெற்றி பெற்றது.
மேதகு பெருமக்களே,
இந்தியாவில் டிஜிட்டல் அணுகலை நாங்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய முயற்சி மேற்கொண்டாலும், சர்வதேச அளவில் மாபெரும் டிஜிட்டல் இடைவெளி இன்னும் உள்ளது. ஏராளமான வளர்ந்து வரும் நாடுகளின் மக்களுக்கு டிஜிட்டல் அடையாளங்கள் எதுவும் இல்லை. 50 நாடுகளில் மட்டுமே டிஜிட்டல் கட்டண முறை உள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பயன்களை உலகம் முழுவதும் அனைவரும் பெற்று, அடுத்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று நாம் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்போமா!
அடுத்த ஆண்டு ஜி-20 அமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்கும் போது தனது கூட்டாளிகளோடு இந்த நோக்கத்திற்காக இணைந்து பணியாற்றும். “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற எங்கள் தலைமையின் ஒட்டுமொத்த கருப்பொருளின் உள்ளார்ந்த அங்கமாக “வளர்ச்சிக்கு தரவு” என்ற கோட்பாடு இருக்கும்.
நன்றி.
(பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்). பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்
கருத்துகள்