ஊழல் வழக்குகள் - விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
1983 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை விசாரணை நிலுவையிலுள்ள 1,635 ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவு.
ஊழல் வழக்குகள் காரணமாக வழங்கப்படாத ஓய்வு காலப் பலன்களை வழங்கக் கோரிய வழக்கில் உத்தரவு.
ஊழல் வழக்குகள் பல ஆண்டுகள் நிலுவையில் இருந்தால் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்கள் - என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற அண்ணாதுரை என்பவர் தாக்கல் செய்த வழக்கைப் பொறுத்தவரை, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலர், ஓய்வுகாலப் பலன்களைப் பெற்று விட்டதால், மனுதாரருக்கும் சில பலன்களை வழங்கி விட்டு, குற்ற வழக்கு முடிவுக்கு வந்த பின் மீதப் பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல, நள்ளிரவில் இரு பெண்கள் வசிக்கும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நீடாமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கரனை பணி நீக்கம் செய்த உத்தரவை உறுதி செய்தும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றொரு வழக்கில் உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள்