முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள்

இமயமலையின் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வு என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், தரவு சேகரிப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் பகுப்பாய்வு மூலம் ஆராயப்படுகின்ற  ஒரு சிக்கலான மற்றும் வளர்ந்துவரும் விஷயமாகும். புவிக்கோள், உயிரிக்கோள்  திட்டத்தின் கீழ் ஏரோசல் கண்காணிப்பு வலைப்பின்னலை  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோ,  இயக்குகிறது.. இந்த வலைப்பின்னலிலிருந்து அளவிடப்படும் அளவுருக்களில் ஒன்று கரியமில வாயுவின் அடர்த்தி ஆகும். இதில்  கடந்த பத்தாண்டுகளில் குறைந்துவரும் போக்கு காணப்படுகிறது. 

பிரதமரின் உஜ்வாலா திட்டம்  தூய்மையான வீட்டு சமையல் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.

2020, ஏப்ரல் 1  முதல் எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான நெறிமுறைகள் பிஎஸ் (BS) -IV இலிருந்து பிஎஸ் (BS)-VI க்குப் பாய்ச்சல் வேகம் .

பொதுப் போக்குவரத்திற்கான மெட்ரோ ரெயில் நெட்வொர்க் மேம்படுத்தப்பட்டு, மேலும் பல நகரங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.

வாயு எரிபொருள் (சிஎன்ஜி, எல்பிஜி போன்றவை), எத்தனால் கலவை போன்ற தூய்மையான / மாற்று எரிபொருட்களின் அறிமுகம்.

மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான திட்டத்தின் 2ம்  கட்டம்-  வெளியீடு.

மாசுபாட்டைக் குறைக்க செங்கல் சூளைகளை வளைந்தும் நெளிந்தும் செல்லும் குழாய் மூலம் வெப்பக் காற்றை செலுத்தும் தொழில்நுட்பத்திற்கு மாற்றுதல். குழாய் மூலமான இயற்கை எரிவாயுவுக்கு தொழில்துறை பிரிவுகளை மாற்றுதல் உள்ளிட்டவை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும்.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023 அறிக்கை அண்மையில்  வெளியிடப்பட்டது. இதில் முன்பிருந்த நிலையைவிட 2 இடங்கள் முன்னேறி இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்துக்  குறியீட்டு வகைகளிலும் ஒட்டுமொத்தமாக மிக உயர்ந்த மதிப்பீட்டை அடைய எந்த நாட்டின் செயல்பாடும்  போதுமானதாக இல்லாததால், முதல் மூன்று இடங்கள் அதாவது 1-3 காலியாக உள்ளன. அதன்பிறகான முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியா (8வது), பிரிட்டன்  (11வது), மற்றும் ஜெர்மனி (16வது). மூன்று ஜி 20 நாடுகள் மட்டுமே பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு  2023ல் அதிக செயல்திறன் கொண்ட நாடுகளாக உள்ளன. எனவே இந்தியாவின் தரவரிசை ஜி 20 நாடுகளில் சிறந்ததாக உள்ளது.

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின்  பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் தரவரிசை வருமாறு: 

பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் – உயர்நிலை

புதுப்பிக்கவல்ல எயசக்தி -  நடுத்தரம்

எரிசக்திப் பயன்பாடு  - உயர்நிலை

பருவநிலக் கொள்கை  - நடுத்தரம்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.வனவளர்ப்பை மேம்படுத்துதல்

காடுகளின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் பாலைவனமாவதைத் தடுத்துநிறுத்த அரசு பல உடனடித்  திட்டங்கள்/தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காடு மற்றும் மரம் வளர்த்தல் பரப்பை அதிகரிப்பதையும் மேம்படுத்துவதையும்  நோக்கமாகக் கொண்டு   சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்  மற்றும் பிற அமைச்சகங்களால்  பல்வேறு காடு வளர்ப்பு தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கம்  மற்றும் காட்டுத்  தீயிலிருந்து பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டம் போன்ற  முக்கிய திட்டங்களின் கீழ் காடுகளைப்  பாதுகாத்தல், மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தின் மூலம் பல்வேறு காடு வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆதரவளிக்கிறது.

ஈடுசெய்யும்  காடு வளர்ப்பு நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல் ஆணையம் மூலம்  ஈடுசெய்யும்  காடு வளர்ப்பு நாடு முழுவதும் காடுகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசுகளும் சீரழிந்த வனப்பகுதிகளை மீட்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்களின் தேசிய மாநாடு 2022, செப்டம்பர் 23-24 ல் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, பருவநிலை மாற்றத்தை முறியடித்தல்,  ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு, வேளாண் வனவியல், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட வனவிலங்கு மேலாண்மை,  சதுப்புநிலப்  பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தும் ஆறு கருப்பொருள் அமர்வுகள் நடைபெற்றன.

சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம்  என்பது காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் காலவரம்புக்கு உட்பட்ட தேசிய அளவிலான ஒரு நீண்ட கால உத்தியாகும். 2017 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டிற்குள் 131 நகரங்களில் காற்றில் கலந்திருக்கும் துகள் மாசினை  20-30% குறைக்க தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம்  உத்தேசித்துள்ளது. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலக்குகள் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் உத்திகளில் தேசிய, மாநில மற்றும் நகர அளவில் தூய்மையான  காற்று செயல் திட்டங்களை அமலாக்குவதும்  இதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அடங்கும்.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...