முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள்

கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசின் நடவடிக்கைகள்

இமயமலையின் பனிப்பாறைகள் பற்றிய ஆய்வு என்பது இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், தரவு சேகரிப்பு மற்றும் பல்வேறு ஆய்வுகளின் பகுப்பாய்வு மூலம் ஆராயப்படுகின்ற  ஒரு சிக்கலான மற்றும் வளர்ந்துவரும் விஷயமாகும். புவிக்கோள், உயிரிக்கோள்  திட்டத்தின் கீழ் ஏரோசல் கண்காணிப்பு வலைப்பின்னலை  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் - இஸ்ரோ,  இயக்குகிறது.. இந்த வலைப்பின்னலிலிருந்து அளவிடப்படும் அளவுருக்களில் ஒன்று கரியமில வாயுவின் அடர்த்தி ஆகும். இதில்  கடந்த பத்தாண்டுகளில் குறைந்துவரும் போக்கு காணப்படுகிறது. 

பிரதமரின் உஜ்வாலா திட்டம்  தூய்மையான வீட்டு சமையல் எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.

2020, ஏப்ரல் 1  முதல் எரிபொருள் மற்றும் வாகனங்களுக்கான நெறிமுறைகள் பிஎஸ் (BS) -IV இலிருந்து பிஎஸ் (BS)-VI க்குப் பாய்ச்சல் வேகம் .

பொதுப் போக்குவரத்திற்கான மெட்ரோ ரெயில் நெட்வொர்க் மேம்படுத்தப்பட்டு, மேலும் பல நகரங்கள் உட்படுத்தப்பட்டுள்ளன.

வாயு எரிபொருள் (சிஎன்ஜி, எல்பிஜி போன்றவை), எத்தனால் கலவை போன்ற தூய்மையான / மாற்று எரிபொருட்களின் அறிமுகம்.

மின்சார வாகனங்களின் விரைவான உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்கான திட்டத்தின் 2ம்  கட்டம்-  வெளியீடு.

மாசுபாட்டைக் குறைக்க செங்கல் சூளைகளை வளைந்தும் நெளிந்தும் செல்லும் குழாய் மூலம் வெப்பக் காற்றை செலுத்தும் தொழில்நுட்பத்திற்கு மாற்றுதல். குழாய் மூலமான இயற்கை எரிவாயுவுக்கு தொழில்துறை பிரிவுகளை மாற்றுதல் உள்ளிட்டவை அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாகும்.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு 2023 அறிக்கை அண்மையில்  வெளியிடப்பட்டது. இதில் முன்பிருந்த நிலையைவிட 2 இடங்கள் முன்னேறி இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்துக்  குறியீட்டு வகைகளிலும் ஒட்டுமொத்தமாக மிக உயர்ந்த மதிப்பீட்டை அடைய எந்த நாட்டின் செயல்பாடும்  போதுமானதாக இல்லாததால், முதல் மூன்று இடங்கள் அதாவது 1-3 காலியாக உள்ளன. அதன்பிறகான முதல் 5 நாடுகளில் இந்தியா இடம்பிடித்துள்ளது. இந்தியா (8வது), பிரிட்டன்  (11வது), மற்றும் ஜெர்மனி (16வது). மூன்று ஜி 20 நாடுகள் மட்டுமே பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீடு  2023ல் அதிக செயல்திறன் கொண்ட நாடுகளாக உள்ளன. எனவே இந்தியாவின் தரவரிசை ஜி 20 நாடுகளில் சிறந்ததாக உள்ளது.

பருவநிலை மாற்ற செயல்திறன் குறியீட்டின்  பல்வேறு அம்சங்களில் இந்தியாவின் தரவரிசை வருமாறு: 

பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் – உயர்நிலை

புதுப்பிக்கவல்ல எயசக்தி -  நடுத்தரம்

எரிசக்திப் பயன்பாடு  - உயர்நிலை

பருவநிலக் கொள்கை  - நடுத்தரம்

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.வனவளர்ப்பை மேம்படுத்துதல்

காடுகளின் பரப்பை அதிகரிப்பதன் மூலம் பாலைவனமாவதைத் தடுத்துநிறுத்த அரசு பல உடனடித்  திட்டங்கள்/தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. காடு மற்றும் மரம் வளர்த்தல் பரப்பை அதிகரிப்பதையும் மேம்படுத்துவதையும்  நோக்கமாகக் கொண்டு   சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம்  மற்றும் பிற அமைச்சகங்களால்  பல்வேறு காடு வளர்ப்பு தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

பசுமை இந்தியாவுக்கான தேசிய இயக்கம்  மற்றும் காட்டுத்  தீயிலிருந்து பாதுகாப்பு மற்றும் மேலாண்மை திட்டம் போன்ற  முக்கிய திட்டங்களின் கீழ் காடுகளைப்  பாதுகாத்தல், மேம்பாடு மற்றும் ஊக்குவிப்பதற்கான மத்திய நிதியுதவி திட்டத்தின் மூலம் பல்வேறு காடு வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு  சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் ஆதரவளிக்கிறது.

ஈடுசெய்யும்  காடு வளர்ப்பு நிதி நிர்வாகம் மற்றும் திட்டமிடல் ஆணையம் மூலம்  ஈடுசெய்யும்  காடு வளர்ப்பு நாடு முழுவதும் காடுகளை அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசுகளும் சீரழிந்த வனப்பகுதிகளை மீட்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாடு

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர்களின் தேசிய மாநாடு 2022, செப்டம்பர் 23-24 ல் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை, பருவநிலை மாற்றத்தை முறியடித்தல்,  ஒருங்கிணைந்த பசுமை அனுமதிகளுக்கான ஒற்றைச் சாளர அமைப்பு, வேளாண் வனவியல், மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, பல்லுயிர் பெருக்கம் உள்ளிட்ட வனவிலங்கு மேலாண்மை,  சதுப்புநிலப்  பாதுகாப்பு, பிளாஸ்டிக் மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய தலைப்புகளில் கவனம் செலுத்தும் ஆறு கருப்பொருள் அமர்வுகள் நடைபெற்றன.

சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம்  என்பது காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், குறைப்பதற்கும் காலவரம்புக்கு உட்பட்ட தேசிய அளவிலான ஒரு நீண்ட கால உத்தியாகும். 2017 ஆம் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு 2024 ஆம் ஆண்டிற்குள் 131 நகரங்களில் காற்றில் கலந்திருக்கும் துகள் மாசினை  20-30% குறைக்க தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம்  உத்தேசித்துள்ளது. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டம் 2025-26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இலக்குகள் 40% ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. தேசிய தூய்மைக் காற்றுத் திட்டத்தின் உத்திகளில் தேசிய, மாநில மற்றும் நகர அளவில் தூய்மையான  காற்று செயல் திட்டங்களை அமலாக்குவதும்  இதனை மக்கள் இயக்கமாக மாற்றுவதும் அடங்கும்.

இந்தத் தகவலை சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் திரு  அஸ்வினி குமார் சௌபே இன்று மக்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த