டெல்லி மதுபான ஊழல் புகாரில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா, நாளை விசாரணைக்கு ஆஜராக முடியாது எனத் தெரிவித்துள்ளார்
கே.கவிதாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி டிசம்பர் மாதம் 6ஆம் தேதி உங்களிடம் விசாரணை நடத்த வேண்டுமென நோட்டீசில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, கே.கவிதா அளித்த தகவலில், ‘நான் எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தான் தயாராக இருக்கிறேன்.
சிபிஐ, அமலாக்கத்துறை என எந்த அமைப்புகள் கேள்விகள் கேட்டாலும் அதற்கு பதில் சொல்லத் தயாராக உள்ளேன்’ எனக் கூறினார். இந்த நிலையில் சிபிஐ-க்கு கே.கவிதா எழுதியுள்ள கடிதத்தில், ‘நீங்கள் கூறியது போல், என்னால் டிசம்பர் மாதம் . 6ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக முடியாது. அந்த நாளில் எனக்கு முன் திட்டமிட்ட நிகழ்ச்சிகள் உள்ளன. அந்த நாளுக்குப் பதிலாக டிசம்பர் 11, 12, 14 அல்லது 15 ஆகிய தேதிகளில் ஏதாவது ஒரு நாளில் எனது ஹைதராபாத் இல்லத்தில் என்னை அதிகாரிகள் சந்தித்து விசாரிக்கலாம்’ எனத் தெரிவித்துள்ளார் .
கருத்துகள்