முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக ஊடக வைரலான ஜசக் வீட்டு விளம்பரப் பலகை

திருநெல்வேலி திரைப்படத் துணை நடிகர் ஐசக் பாண்டியன்  தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளார். அது வைரலாகிறது. . ஆனால் 


அப்படி என்ன வித்தியாசம் தெரியுமா? இதோ `வீடு வாடகைக்கு – குடிகாரர், வடமாநிலத்தவர், எடப்பாடி அதிமுக-வினர் அனுக வேண்டாம்’!  என உள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதைக்கண்ட வலைதள நபர்கள் பலரும், “அட என்னங்க இது… என்னதான் விமர்சனமா இருந்தாலும், மது குடிப்போரையும் அரசியல்வாதிகளையும் இப்படியா இணைக்கிறது” என்று கேட்கத் தொடங்கினர். ஐசக் பாண்டியனின்  நியாயம் இது  அவர் கூறுகையில்  

“என்னை பொறுத்தவரை, குடி பழக்கமென்பது இளைஞர்களை பின்னோக்கி கொண்டு செல்வதாகும். இன்றைய தமிழ் இளைஞர்கள், குடிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். இவர்களால் தமிழ் சமுதாயத்தை பின்னோக்கி செல்லும். அவர்களால் வீட்டிலும் பிரச்னை வரும். அதனால் அவர்கள் என்னை அனுக வேண்டாம் எனவும்.

குடியால் மூழ்கிய நம்மூர் இளைஞர்கள் பலரும், வேலை வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் இங்கே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. தமிழ் பேசுவோரை விட இந்தி பேசுவோரும் பிற வட மாநில மொழி பேசுவோரும்தான் அதிகம் உள்ளனர். அதையெல்லாம் காணும்போது, நம் எதிர்காலமே கேள்விக்குறியானதை உணர்ந்தேன். நம் கலாசாரமே கெட்டுப்போகிறது. விரைவில் தமிழ் கலாசாரம் மறையுமே என்று அச்சப்படுகிறேன். அதனால் அவர்களும் வாடகைக்கு வீடு தொடர்பாக அனுக வேண்டாமென தெரிவித்தேன். அடுத்தபடியாக, எடப்பாடி அணியினர். இவர்களை மறுக்க இரண்டு காரணம் உண்டு முதலில் வீடு கேட்க வரும் போது, 4 கால்களில் தவழ்ந்து வருவர்; பின் என்னையே தெரியாது என சொல்லிவிடுவர் என்ற அச்சம். இந்த அச்சம், என்னைப் போன்ற எல்லா சாமாணியனுக்கும் இருக்கிறது. இரண்டாவது காரணம், இந்த எடப்பாடி பழனிசாமி தான், தனது ஆட்சிக்காலத்தில் வடமாநிலத்தவர்களை இங்கே வேலைக்கு அமரவைத்தார். கட்டட வேலைகள் தொடங்கி மின்சார - போக்குவரத்துறை அரசு ஊழியர்கள் வரை இன்று பலரும் நம் ஊரில் வட மாநிலத்தவர்கள்தான். காரணம், அன்று எடப்பாடி அவர்களை அனுமதித்தது. தன் பதவி நிலைக்க, மத்திய அரசு சொல்வதையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று அவர் அப்படி செய்தார். அதன் பலன்… இன்று கிராமங்களில்கூட வட மாநில மின் ஊழியர்கள் நிறைந்து கிடக்கின்றனர்.

இதை சொல்வதால் நான் ஆளுங்கட்சி என்றோ, அல்லது வேறு கட்சியை சேர்ந்த நபரென்றோ தயவுசெய்து பொருள்பட வேண்டாம். நான் எந்த கட்சி உறுப்பினரும் அல்ல; தவறுநடந்தால், ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சிக்கும் சாமாணியன் தான் நான். திமுக-வையும் கருத்துகளால் தாக்குவேன். சொல்லப்போனால் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக மேல் எனக்கு நன்மதிப்பு இருந்தது. ஏனெனில் அப்போது மாநில அரசை கண்டு, மத்திய அரசு பயந்தது. `அந்த மோடியா இந்த லேடியா’ என துணிச்சலாக கேட்டவர் அவர். அப்படிப்பட்டவர் இருந்த சிம்மாசனத்தில் எடப்பாடியை அமர வைத்தார்கள். பதவி மோகத்தில், பதவியை தக்கவைத்துக்கொள்ள அவர் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை, வடமாநிலத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தார். இன்றைய போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை எல்லாமே இதற்கு சாட்சி. தமிழர்களின் சாப்பாட்டை, இந்திக்காரர்களுக்கு அவர் கொடுத்தார் என்றே சொல்வேன்அப்படிப்பட்ட எடப்பாடியை ஆதரித்து, அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு, எப்படி என் வீட்டில் நான் இடம் கொடுக்க முடியும்? நான் சொல்லும் காரணம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை” என்றார்.

ஐசக் பாண்டியன், நடிகர் தனுஷின் மாரி திரைப்படத்தில் வில்லனுடன் வரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சீவலப்பேரி பாண்டி படம் தொடங்கி எந்திரன், மாரி போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பதாக கூறும் அவர் தற்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். அங்குதான் தனது வீட்டில் இந்த விளம்பரத்தையும் வைத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த