முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமூக ஊடக வைரலான ஜசக் வீட்டு விளம்பரப் பலகை

திருநெல்வேலி திரைப்படத் துணை நடிகர் ஐசக் பாண்டியன்  தனது வீட்டை வாடகைக்கு விடுவதற்கு சில நிபந்தனைகள் விதித்துள்ளார். அது வைரலாகிறது. . ஆனால் 


அப்படி என்ன வித்தியாசம் தெரியுமா? இதோ `வீடு வாடகைக்கு – குடிகாரர், வடமாநிலத்தவர், எடப்பாடி அதிமுக-வினர் அனுக வேண்டாம்’!  என உள்ள இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதைக்கண்ட வலைதள நபர்கள் பலரும், “அட என்னங்க இது… என்னதான் விமர்சனமா இருந்தாலும், மது குடிப்போரையும் அரசியல்வாதிகளையும் இப்படியா இணைக்கிறது” என்று கேட்கத் தொடங்கினர். ஐசக் பாண்டியனின்  நியாயம் இது  அவர் கூறுகையில்  

“என்னை பொறுத்தவரை, குடி பழக்கமென்பது இளைஞர்களை பின்னோக்கி கொண்டு செல்வதாகும். இன்றைய தமிழ் இளைஞர்கள், குடிக்கு அடிமையாகியிருக்கிறார்கள். இவர்களால் தமிழ் சமுதாயத்தை பின்னோக்கி செல்லும். அவர்களால் வீட்டிலும் பிரச்னை வரும். அதனால் அவர்கள் என்னை அனுக வேண்டாம் எனவும்.

குடியால் மூழ்கிய நம்மூர் இளைஞர்கள் பலரும், வேலை வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். இதனால் வடமாநில தொழிலாளர்கள் இங்கே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.. தமிழ் பேசுவோரை விட இந்தி பேசுவோரும் பிற வட மாநில மொழி பேசுவோரும்தான் அதிகம் உள்ளனர். அதையெல்லாம் காணும்போது, நம் எதிர்காலமே கேள்விக்குறியானதை உணர்ந்தேன். நம் கலாசாரமே கெட்டுப்போகிறது. விரைவில் தமிழ் கலாசாரம் மறையுமே என்று அச்சப்படுகிறேன். அதனால் அவர்களும் வாடகைக்கு வீடு தொடர்பாக அனுக வேண்டாமென தெரிவித்தேன். அடுத்தபடியாக, எடப்பாடி அணியினர். இவர்களை மறுக்க இரண்டு காரணம் உண்டு முதலில் வீடு கேட்க வரும் போது, 4 கால்களில் தவழ்ந்து வருவர்; பின் என்னையே தெரியாது என சொல்லிவிடுவர் என்ற அச்சம். இந்த அச்சம், என்னைப் போன்ற எல்லா சாமாணியனுக்கும் இருக்கிறது. இரண்டாவது காரணம், இந்த எடப்பாடி பழனிசாமி தான், தனது ஆட்சிக்காலத்தில் வடமாநிலத்தவர்களை இங்கே வேலைக்கு அமரவைத்தார். கட்டட வேலைகள் தொடங்கி மின்சார - போக்குவரத்துறை அரசு ஊழியர்கள் வரை இன்று பலரும் நம் ஊரில் வட மாநிலத்தவர்கள்தான். காரணம், அன்று எடப்பாடி அவர்களை அனுமதித்தது. தன் பதவி நிலைக்க, மத்திய அரசு சொல்வதையெல்லாம் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று அவர் அப்படி செய்தார். அதன் பலன்… இன்று கிராமங்களில்கூட வட மாநில மின் ஊழியர்கள் நிறைந்து கிடக்கின்றனர்.

இதை சொல்வதால் நான் ஆளுங்கட்சி என்றோ, அல்லது வேறு கட்சியை சேர்ந்த நபரென்றோ தயவுசெய்து பொருள்பட வேண்டாம். நான் எந்த கட்சி உறுப்பினரும் அல்ல; தவறுநடந்தால், ஆளுங்கட்சியாக இருந்தால் விமர்சிக்கும் சாமாணியன் தான் நான். திமுக-வையும் கருத்துகளால் தாக்குவேன். சொல்லப்போனால் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுக மேல் எனக்கு நன்மதிப்பு இருந்தது. ஏனெனில் அப்போது மாநில அரசை கண்டு, மத்திய அரசு பயந்தது. `அந்த மோடியா இந்த லேடியா’ என துணிச்சலாக கேட்டவர் அவர். அப்படிப்பட்டவர் இருந்த சிம்மாசனத்தில் எடப்பாடியை அமர வைத்தார்கள். பதவி மோகத்தில், பதவியை தக்கவைத்துக்கொள்ள அவர் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை, வடமாநிலத்தவர்களுக்கு விட்டுக்கொடுத்தார். இன்றைய போக்குவரத்துத்துறை மின்சாரத்துறை எல்லாமே இதற்கு சாட்சி. தமிழர்களின் சாப்பாட்டை, இந்திக்காரர்களுக்கு அவர் கொடுத்தார் என்றே சொல்வேன்அப்படிப்பட்ட எடப்பாடியை ஆதரித்து, அவருக்கு ஆதரவாக இருப்பவர்களுக்கு, எப்படி என் வீட்டில் நான் இடம் கொடுக்க முடியும்? நான் சொல்லும் காரணம் உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இதுதான் உண்மை” என்றார்.

ஐசக் பாண்டியன், நடிகர் தனுஷின் மாரி திரைப்படத்தில் வில்லனுடன் வரும் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். சீவலப்பேரி பாண்டி படம் தொடங்கி எந்திரன், மாரி போன்ற பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருப்பதாக கூறும் அவர் தற்போது திருநெல்வேலியில் வசிக்கிறார். அங்குதான் தனது வீட்டில் இந்த விளம்பரத்தையும் வைத்துள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...