முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையில் ஆளுநரின் உரையும் முயல்வரின் பதிலும் அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுளும்

தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையில் 


ஆளுநரின் உரை என்பது,



அவரை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி இடையூறுகள் செய்யும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறதென்றும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் இதற்காக


பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த. போது ஆளுநர் வெளிநடப்பு குறித்த வினாவிற்கு பதிலாக, "தேசிய கீதத்தைக்கூட மதிப்பதற்கு தயாராக இல்லாத ஆளுநராக ஆர்.என்.ரவி இருக்கிறார். ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது என்பது தமிழக முதல்வரை அல்ல, தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கிறார். தேசிய கீதத்தை அவமதிக்கிறார்" என்றார்.புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் ஆளுநர் பதவி பிரச்சினைக்குரியதாக இருந்து வருவது குறித்த வினாவிற்கு, "ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையாகும். ஆளுநர் என்பது ஒரு பதவி கிடையாது. இதெல்லாம் ஆங்கிலேயர்கள்  காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. எனவே இன்றைக்கு ஆளுநர் பதவி தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இருக்கிறது. ஆளுநர் பதவி கூடாது என்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிலை. ஆனால் இன்றைக்கு இந்தப் பதவி இருக்கிறது.



இப்போதிருக்கிற ஆளுநர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னால், பாஜக எங்கெல்லாம் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இல்லையோ, அந்த மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி இடையூறு செய்யும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. அதற்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.மேலும், அவரது அறிக்கையில், “நடப்பு ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து தமிழ்நாடு ஆளுநர் இன்று உரையாற்றியுள்ளார். அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற மாநில அரசின் தலைவர் ஆளுநர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும். இந்த வகையில் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் சட்டமன்றப் பேரவையில் வாசிக்க கடமைப்பட்டவர். இந்த முறையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைந்த காலம் தொட்டு பின்பற்றி வருவது மரபாக அமைந்துள்ளது. இந்த முறையிதான் இன்று  ஆளுநர் உரையாற்றும் நிகழ்வு நடந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, சட்ட மன்றப் பேரவையின் மாண்புக்கு நீங்கா களங்கம் ஏற்படுத்தும் முறையில் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருப்பது உச்சமட்ட அத்துமீறலாகும்.



அவையின் மரபுகளை உடைத்தும், தமிழ்நாட்டின் நன்மதிப்பு பெற்ற தலைவர்கள் பெயர்களையும், ஆளும் அரசு “திராவிட மாடல் ஆட்சி” என்று உரிமை கொண்டாடுவதை நிராகரித்தும் அவமதித்துள்ளார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதை ஏற்க மறுத்துள்ள ஆர்.என்.ரவியின் அநாகரிகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அண்மைக் காலமாக ஆளுநரும், பாஜக மற்றும் சங் பரிவார் கும்பலும் தமிழ்நாட்டின் அமைதி நிலையை சீர்குலைத்து, கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் நடவடிக்கை அமைத்திருக்கிறது. இது ஜனநாயக நடைமுறைகளுக்கும், அமைதி வாழ்வுக்கும் பேராபத்து ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பேராபத்தை எதிர் கொண்டு முறியடிக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து பாஜக சார்பில் தெரிவித்த கருத்தில் மாநில சட்டமன்றத்துக்கு சட்டப்படியான என்ன அதிகாரம் இருக்குன்னு தீர்மானம் மூலம் காட்டலாமே? 

ஆளுநர் தான் சட்டசபைக்கு அதிகாரபூர்வ தலைவர்.  ஆளுநர் அவராகவே என்ன வேண்டுமானாலும் உரையாற்றலாம். 

அரசியலமைப்பு சட்ட பிரிவு 174, 175, 176.  ஆளுநர் மாநில அரசு தயாரித்த உரையை படிப்பது என்பது ஒரு வழக்கம் தான். அரசியலமைப்பு சட்டவிதிகளிலே அது கிடையாது. என அக் கட்சியின் நபர்கள்  கூறி வருகின்றனர்.பொதுவான பார்வையில் ஆளுநரை ஆளும் திமுகவின்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாண்ட விதம் சரி என்ற போதும் 

திராவிட ஆரிய மாதிரி போன்ற பல காரணங்கள் அதில் இருந்தாலும், ஆளுநர் தனது உள்ளடித் திட்டங்களைச் செயல்படுத்த அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற வகையில் நாம் மாநில ஆளும் அரசிற்குத் துணை நிற்கிறோம் என அதிக ஆதரவுகள் வருகிறது.

சட்ட சபையின்  உரையில் ஆளுநரின் தனிப்பட்ட  கொள்கைக்கு ஒவ்வாதவற்றையும், திமுக அரசு தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதான வார்தைகளையும்தயாரித்துத் தந்ததாக கூறப்படும் உரையையும் ஆளுநர் ஆன்.என்.ரவி தெளிவாகவே தவிர்த்ததோடு, தன் கொள்கைப் படி ‘ஜெய்ஹிந்த்’ கோஷத்தையும் போட்டே, வெளி நடப்பு செய்தார்.

ஆளுநர் தவிர்த்த  வார்த்தைகளாகப் பார்க்கப்படுவதாவது : 

தன் அரசை, இது வளர்ச்சியுடன் கூடிய திராவிடமாடல் அரசு என்றும், அம்பேத்கார், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு என்றும் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அவர் பேசாமல் தவிர்த்துள்ளார்! இதன் மூலம் ‘இது வளர்ச்சியுடன் கூடிய அரசு’ என்ற கருத்தாக்கத்தை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும், ‘மேற்படி பெரியவர்களின் வழியில் நடக்கும் அரசு’ என்பதோ, ‘திராவிட மாடல்’ என்ற சொல்லோ அவருக்கு உவப்பில்லை என நமக்கு அவர் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உள்ளார் 

ஆளுநர் ‘ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை, பேச்சுக்களை  கவனிக்கும் யாருக்கும் திமுக அரசின் இந்த சொல்லாடலில் அவருக்கு ஏற்பு இருக்கும்’ என நம்புவதற்கு  இடமேயில்லை

ஆனால் அவர் மரபை உடைத்ததும், மிக இயல்பாக தானும் மரபை உடைத்து, அவர் பேசியதற்கு அல்லது பேசத் தவிர்த்ததற்கு தன் வருத்ததையும் , கண்டணத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே வெளிப்படுத்தியது மிகச் சரி ,ஆனால், தான் மரபை உடைக்கும் போதும், எதிர் கருத்து வைக்கும் போதும் அமைதி காத்த சபைக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லாதவராகவும், முதலமைச்சரின் வருத்ததையும், கண்டணத்தையும் ஒரு ஜனநாயகச் செயல்பாடாக எதிர் கொள்ளத் திரானியற்றவராகவும் ஆளுநர்  வெளி நடப்புச் செய்துள்ளார் என்பதே இங்கே உள்ள பொது நீதி என்பதைக் கவனிக்க வேண்டும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...