முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையில் ஆளுநரின் உரையும் முயல்வரின் பதிலும் அரசியல் சார்ந்த குற்றச்சாட்டுளும்

தமிழ்நாடு மாநில சட்டமன்றப் பேரவையில் 


ஆளுநரின் உரை என்பது,



அவரை தமிழ்நாட்டை விட்டே விரட்ட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி இடையூறுகள் செய்யும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறதென்றும். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் இதற்காக


பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனும் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த. போது ஆளுநர் வெளிநடப்பு குறித்த வினாவிற்கு பதிலாக, "தேசிய கீதத்தைக்கூட மதிப்பதற்கு தயாராக இல்லாத ஆளுநராக ஆர்.என்.ரவி இருக்கிறார். ஆளுநர் வெளிநடப்பு செய்திருப்பது என்பது தமிழக முதல்வரை அல்ல, தமிழ்நாடு சட்டப்பேரவையையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கிறார். தேசிய கீதத்தை அவமதிக்கிறார்" என்றார்.புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட இடங்களில் ஆளுநர் பதவி பிரச்சினைக்குரியதாக இருந்து வருவது குறித்த வினாவிற்கு, "ஆளுநர் பதவி தேவையில்லை என்பதுதான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையாகும். ஆளுநர் என்பது ஒரு பதவி கிடையாது. இதெல்லாம் ஆங்கிலேயர்கள்  காலத்தில் உருவாக்கப்பட்ட அமைப்பு. எனவே இன்றைக்கு ஆளுநர் பதவி தேவையில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் இருக்கிறது. ஆளுநர் பதவி கூடாது என்பது கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிலை. ஆனால் இன்றைக்கு இந்தப் பதவி இருக்கிறது.



இப்போதிருக்கிற ஆளுநர்கள் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள் என்று சொன்னால், பாஜக எங்கெல்லாம் மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இல்லையோ, அந்த மாநிலங்களில் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி இடையூறு செய்யும் பணிகளில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. அதற்காக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இன்னும் பல மாநிலங்களில் ஆளுநர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்" என்று தெரிவித்தார்.மேலும், அவரது அறிக்கையில், “நடப்பு ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்து தமிழ்நாடு ஆளுநர் இன்று உரையாற்றியுள்ளார். அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற மாநில அரசின் தலைவர் ஆளுநர். இவர் அமைச்சரவையின் ஆலோசனைப்படி தான் செயல்பட முடியும். இந்த வகையில் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கும் உரையை ஆளுநர் சட்டமன்றப் பேரவையில் வாசிக்க கடமைப்பட்டவர். இந்த முறையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அமைந்த காலம் தொட்டு பின்பற்றி வருவது மரபாக அமைந்துள்ளது. இந்த முறையிதான் இன்று  ஆளுநர் உரையாற்றும் நிகழ்வு நடந்திருக்க வேண்டும். ஆனால், ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி, சட்ட மன்றப் பேரவையின் மாண்புக்கு நீங்கா களங்கம் ஏற்படுத்தும் முறையில் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டிருப்பது உச்சமட்ட அத்துமீறலாகும்.



அவையின் மரபுகளை உடைத்தும், தமிழ்நாட்டின் நன்மதிப்பு பெற்ற தலைவர்கள் பெயர்களையும், ஆளும் அரசு “திராவிட மாடல் ஆட்சி” என்று உரிமை கொண்டாடுவதை நிராகரித்தும் அவமதித்துள்ளார். தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதை ஏற்க மறுத்துள்ள ஆர்.என்.ரவியின் அநாகரிகச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. அண்மைக் காலமாக ஆளுநரும், பாஜக மற்றும் சங் பரிவார் கும்பலும் தமிழ்நாட்டின் அமைதி நிலையை சீர்குலைத்து, கலகத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டு வருவதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் நடவடிக்கை அமைத்திருக்கிறது. இது ஜனநாயக நடைமுறைகளுக்கும், அமைதி வாழ்வுக்கும் பேராபத்து ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் பேராபத்தை எதிர் கொண்டு முறியடிக்க, தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து பாஜக சார்பில் தெரிவித்த கருத்தில் மாநில சட்டமன்றத்துக்கு சட்டப்படியான என்ன அதிகாரம் இருக்குன்னு தீர்மானம் மூலம் காட்டலாமே? 

ஆளுநர் தான் சட்டசபைக்கு அதிகாரபூர்வ தலைவர்.  ஆளுநர் அவராகவே என்ன வேண்டுமானாலும் உரையாற்றலாம். 

அரசியலமைப்பு சட்ட பிரிவு 174, 175, 176.  ஆளுநர் மாநில அரசு தயாரித்த உரையை படிப்பது என்பது ஒரு வழக்கம் தான். அரசியலமைப்பு சட்டவிதிகளிலே அது கிடையாது. என அக் கட்சியின் நபர்கள்  கூறி வருகின்றனர்.பொதுவான பார்வையில் ஆளுநரை ஆளும் திமுகவின்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கையாண்ட விதம் சரி என்ற போதும் 

திராவிட ஆரிய மாதிரி போன்ற பல காரணங்கள் அதில் இருந்தாலும், ஆளுநர் தனது உள்ளடித் திட்டங்களைச் செயல்படுத்த அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற வகையில் நாம் மாநில ஆளும் அரசிற்குத் துணை நிற்கிறோம் என அதிக ஆதரவுகள் வருகிறது.

சட்ட சபையின்  உரையில் ஆளுநரின் தனிப்பட்ட  கொள்கைக்கு ஒவ்வாதவற்றையும், திமுக அரசு தன்னைத் தானே புகழ்ந்து கொள்வதான வார்தைகளையும்தயாரித்துத் தந்ததாக கூறப்படும் உரையையும் ஆளுநர் ஆன்.என்.ரவி தெளிவாகவே தவிர்த்ததோடு, தன் கொள்கைப் படி ‘ஜெய்ஹிந்த்’ கோஷத்தையும் போட்டே, வெளி நடப்பு செய்தார்.

ஆளுநர் தவிர்த்த  வார்த்தைகளாகப் பார்க்கப்படுவதாவது : 

தன் அரசை, இது வளர்ச்சியுடன் கூடிய திராவிடமாடல் அரசு என்றும், அம்பேத்கார், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் வழியில் பயணிக்கும் திராவிட மாடல் அரசு என்றும் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அவர் பேசாமல் தவிர்த்துள்ளார்! இதன் மூலம் ‘இது வளர்ச்சியுடன் கூடிய அரசு’ என்ற கருத்தாக்கத்தை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதும், ‘மேற்படி பெரியவர்களின் வழியில் நடக்கும் அரசு’ என்பதோ, ‘திராவிட மாடல்’ என்ற சொல்லோ அவருக்கு உவப்பில்லை என நமக்கு அவர் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்தி உள்ளார் 

ஆளுநர் ‘ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளை, பேச்சுக்களை  கவனிக்கும் யாருக்கும் திமுக அரசின் இந்த சொல்லாடலில் அவருக்கு ஏற்பு இருக்கும்’ என நம்புவதற்கு  இடமேயில்லை

ஆனால் அவர் மரபை உடைத்ததும், மிக இயல்பாக தானும் மரபை உடைத்து, அவர் பேசியதற்கு அல்லது பேசத் தவிர்த்ததற்கு தன் வருத்ததையும் , கண்டணத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனே வெளிப்படுத்தியது மிகச் சரி ,ஆனால், தான் மரபை உடைக்கும் போதும், எதிர் கருத்து வைக்கும் போதும் அமைதி காத்த சபைக்கு கொஞ்சம் கூட நன்றி உணர்வு இல்லாதவராகவும், முதலமைச்சரின் வருத்ததையும், கண்டணத்தையும் ஒரு ஜனநாயகச் செயல்பாடாக எதிர் கொள்ளத் திரானியற்றவராகவும் ஆளுநர்  வெளி நடப்புச் செய்துள்ளார் என்பதே இங்கே உள்ள பொது நீதி என்பதைக் கவனிக்க வேண்டும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த