முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டம்

இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவத்தின் கீழ் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதல் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய காணொலி உரை மொழிபெயர்ப்பு 




மேன்மையுடையவர்களே,

ஜி20 கூட்டத்திற்கு வருகை தந்துள்ள நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களுக்கு எனது கனிவான வணக்கம். இந்தக் கூட்டம் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான முதல் பேச்சுவார்த்தையைக் குறிக்கும் விதமாக அமைகின்றது. இந்தக் கூட்டம் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு நான் எனது நல்வாழ்த்துக்களை கூறும் அதே வேளையில், நீங்கள் எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் நான் அறிவேன். உலகளவில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், நீங்கள் நிதி மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றியிருக்கிறீர்கள். உலகப் பொருளாதாரத்திற்கு நூறாண்டுகளுக்கு ஒருமுறை மிகப் பெரிய பின்னடைவை கொவிட் பெருந்தொற்று ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகள் குறிப்பாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள் அதன் தாக்கத்திலிருந்து தற்போது வரையில் மீள்வதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் புவி - பொருளாதார பிரச்சனைகள் நிலவி வருவதையும் நாம் உணர்ந்து வருகிறோம். உலக விநியோகத் தொடர் சங்கிலியில் பல இடையூறுகள் உள்ளன. விலைவாசி உயர்வின் காரணமாக பல்வேறு சமூக அமைப்புகள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளன. உலகளவில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய பிரச்சனை உருவாகி உள்ளது. நிலையற்ற கடன்களின் விளைவாக பல்வேறு நாடுகள் தனது நிதி ஆதாரங்களில் கேள்விக்குறி ஏற்படும் நிலை உள்ளது. சர்வதேச நிதி நிறுவனங்களின் மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது. ஏனெனில் சீர்திருத்த நடவடிக்கைகளில் மிகுந்த மெத்தனப் போக்கு நிலவுகிறது. தற்போது தங்களால் மட்டுமே உலகளவில் முக்கியப் பொருளாதார மற்றும் நிதி அமைப்புகளுக்குப் பாதுகாவலர்களாக இருந்து உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, நம்பிக்கை, வளர்ச்சி போன்றவற்றை ஏற்படுத்த முடியும். அது அவ்வளவு எளிதான காரியமல்ல.




இந்தியப் பொருளாதாரம் மீண்டு, எழுச்சிப் பெற்றதிலிருந்து தாங்கள் உத்வேகத்தைப் பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். எதிர்காலத்தைப் பற்றிய இந்திய நுகர்வோர்களும், உற்பத்தியாளர்களும் நேர்மறை சிந்தனையோடு இருக்கின்றனர். இந்த நேர்மறை உணர்வுகள் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு மடைமாற்றி விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தக் கூட்டத்தில் நடைபெறும் ஆலோசனைகள் உலகின் மிகப் பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் நலன் சார்ந்து அமைய வேண்டும் என்று நான் நம்புகிறேன். உலகப் பொருளாதார தலைமைகளின் ஒட்டு மொத்த நோக்கமும், உலகத்திற்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக அமைய வேண்டும். நமது ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளானது “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்”.






மேன்மையுடையவர்களே,

உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டிய நிலையில், ஒட்டு மொத்த மேம்பாட்டு இலக்குகள் குறித்த முன்னேற்ற நடவடிக்கைகள் குறைந்துள்ளது. பல்முனை வளர்ச்சி வங்கிகளின் செயல்பாடுகளை நாம் ஒருங்கிணைந்து வலுப்படுத்த வேண்டும். அதன் மூலமே உலகளாவிய சவால்களான பருவநிலை மாற்றம் மற்றும் உயர் வட்டி போன்றவைகளை எதிர்கொள்ள முடியும்.

மேன்மையுடையவர்களே,

உலகளாவிய நிதித் துறையில் தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. கொவிட் பெருந்தொற்று காலத்தில் டிஜிட்டல் முறையில் மக்களுக்கு இடையே தொடர்பற்ற பணபரிமாற்றங்கள் நடைபெற்றது. எனினும் நிதித்துறையில் டிஜிட்டல் முறையிலான புத்தாக்க நடவடிக்கைகள், நிதி ஆதாரங்களை சீர்குலைக்கும் மற்றும் தவறாக பயன்படுத்தும் விதமாக பல்வேறு சவால்கள் ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் எவ்வாறு சிறப்பாக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது என்பது குறித்து, தாங்கள் பல்வேறு வழிமுறைகளை மேற்கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்தியாவின் அனுபவங்கள் ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வசதிகளில் சிறந்த, மிகுந்த நம்பிக்கையுடைய, மிகவும் பாதுகாப்பான முறையை நாங்கள் ஏற்படுத்தியிருக்கிறோம். நமது டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்ற முறைகள் மூலம் பொதுமக்கள் எவ்வித சிரமமுன்றி பயன்படுத்தும் வகையில் அமைத்துள்ளோம். இதன் விளைவாக ஆட்சிமுறை, நிதிஆதாரங்கள் மற்றும் சிரமமின்றி வாழும் நிலை இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. நீங்கள் பெங்களூருவில் (இந்தியாவின் தொழில்நுட்பத் தலைநகரம்) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொள்ளும்போது, இந்திய நுகர்வோர்கள் எவ்விதம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிமாற்ற முறைகளுக்கு மாறியுள்ளனர் என்ற அனுபவத்தை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். நமது ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நாங்கள் இதற்கென புதிய முறையை உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் ஜி20 உறுப்பு நாடுகள் எங்களது முன்னோடி முறையிலான டிஜிட்டல் பணப்பரிமாற்ற தளமான யுபிஐ-ஐ பயன்படுத்த முடியும். நீங்கள் இதனைப் பயன்படுத்தி, அதன் மூலம் ஏற்படக் கூடிய அனுபவங்களின் விளைவாக, ஏன் இந்திய நுகர்வோர்கள் இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதை உணர்வீர்கள். தற்போது யுபிஐ பல்வேறு நாடுகளில் பயன்படுத்தும் அமைப்பாக மாறியுள்ளது. இதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

நாங்கள் எங்களது அனுபவங்களை உலகத்தோடு பகிர்ந்து கொள்கிறோம். அதற்கு ஜி20 தலைமைத்துவம் ஒரு தளமாக அமைந்துள்ளது.

மேன்மையுடையவர்களே,

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மீண்டும் ஒருமுறை நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கூட்டத்தின் மூலம் ஆக்கப்பூர்வமான மற்றும் வெற்றிகரமான ஆலோசனைகள் மேற்கொள்வதற்கு உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,