முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு

நீர்வாழ் உயிரின நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்திற்கு ரூ.33.78 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல்


தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு மத்திய அரசு இதுவரை ரூ. 3000 கோடி வழங்கியுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன்

பிரதமரின் மத்சய சம்படா திட்டத்தின் கீழ் தேசிய நீர்வாழ் உயிரினங்களை  நோயிலிருந்து பாதுகாப்பதற்கான திட்டத்தின் 2-வது கட்டத்தை செயல்படுத்த ரூ.33.78 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.  


சென்னையில் உள்ள தேசிய உவர் நீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் மரபணு மேம்பாட்டுத் திட்டத்தை இன்று  (27.02.2023) தொடங்கிவைத்துப் பேசிய அவர்,  மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றி தகவல் தெரிவிக்கவும், அறிவியல் பூர்வமான உள்ளீடுகள் கிடைப்பதற்கும், ரிப்போர்ட்ஃபிஷ்டிசீஸ் என்ற செயலி தொடங்கப்பட்டுள்ளது.  மீன்களுக்கு ஏற்படும் நோய்கள் பற்றிய தகவல்களை நேரடியாக  மாவட்ட மீன்வள அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், விஞ்ஞானிகளிடமிருந்து தொழில்நுட்ப உதவியை பெற்று பிரச்சனைக்கு தீர்வு காணவும் இந்த செயலி உதவும் என்று அவர் கூறினார்.

காப்பீட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இறால்களுக்கான காப்பீட்டு திட்டத்தை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் உவர் நீர் மீன் வளர்ப்புக்கான மத்திய நிறுவனம் இன்று தொடங்கியுள்ளது. புயல், வெள்ளம் மற்றும் நோய் பரவல் ஆகியவற்றால், இறால்கள் வளர்க்கும், விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்க இந்தத் திட்டம் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் உள்நாட்டு வெள்ளை இறாலில் புதிய வகையை உருவாக்க நமது விஞ்ஞானிகள் கடுமையாக பாடுபடுவார்கள் என்று தாம் நம்புவதாகவும் திரு பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.  மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கும், மீன் சார்ந்த தொழில்முனைவோருக்கும் உதவி செய்யும் இத்தகைய முக்கியமான திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க தமது அமைச்சகம் எப்போதும் தயாராக உள்ளது என்று அவர் கூறினார்.

 இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், தமிழக மீன் வளத்துறை மேம்பாட்டிற்கு 2014-ம் ஆண்டில் இருந்து மத்திய அரசு, சுமார் 3000 கோடி ரூபாய் வழங்கியிருப்பதாக தெரிவித்தார்.  ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு 625 கப்பல்கள் வாங்க நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும், இதேபோல் கடலில் மீன்பிடிக்க செல்லும் கப்பல்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவதற்கு 5000 மீனவர்களுக்கு சுமார் 18 கோடி ரூபாய் நிதி அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். விழுப்புரம், நாகப்பட்டினம், சென்னை திருவொற்றியூர், கடலூர்  ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். 

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றத்தில் இருந்து மீன்வளத்துறை மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும், 2014 ஆம் ஆண்டு இறால்  ஏற்றுமதி வெறும் ரூ. 8175 கோடியாக இருந்ததாகவும், இது கடந்த ஆண்டு ரூ.42,706 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.  மீன் வளர்ப்பு துறையில் தொழில்முனைவோரை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதன் காரணமாக, இறால் ஏற்றுமதி பெரும் வளர்ச்சியை கண்டிருப்பதாகவும், ஏற்றுமதியில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.  இத்துறைக்கு கடந்த 9 ஆண்டுகளில் 32,500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் முருகன் கூறினார்.

முன்னதாக இந்திய வெள்ளை இறால் இனப்பெருக்கம் மற்றும் மேம்பாட்டு அமைவகத்திற்கு இரு அமைச்சர்களும் அடிக்கல் நாட்டினர்.

 இந்நிகழ்ச்சியில் மத்திய மீன் வளத்துறை செயலர் ஜதேந்திர நாத் ஸ்வைன், மத்திய மீன் வளத்துறை இணைச் செயலர் கே பாலாஜி, தமிழ்நாடு மீன் வளத்துறை முதன்மை செயலர் ஏ கார்த்திக், சிபா இயக்குனர்  திரு குல்தீப் லால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...