குளித்தலை வட்டத்தில் இறப்புச் சான்று வழங்க ரூபாய்.500 இலஞ்சம்; பெற்ற பதிவு எழுத்தருக்கு மூன்றாண்டுகள் சிறை மற்றும் அபராதம்
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்தில் இறப்புச் சான்று வழங்க ரூபாய்.500 இலஞ்சம்; பதிவு எழுத்தருக்கு மூன்றாண்டுகள் சிறை-
கரூா் மாவட்டம் இறப்புச் சான்று வழங்க ரூ.500 லஞ்சம் வாங்கிய முன்னாள் பதிவு எழுத்தருக்கு கரூா் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கரூா் மாவட்டம், குளித்தலை வட்டம் புரிந்தலூர் பாலு. இவா் தனது தந்தை இறந்ததையடுத்து, இறப்புச் சான்று கோரி குளித்தலை வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தபோது,
இறப்புச் சான்று வழங்க பதிவு எழுத்தராக அப்போது பணிபுரிந்த காலத்தில் எம்.சந்திரசேகா் (வயது 53) என்பவா் ரூ.500 லஞ்சமாகக் கொடுத்தால் சான்றிதழ் வழங்குவதாகத் தெரிவித்துள்ளாா்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலு, அது குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் செய்ததன் பேரில், சந்திரசேகரை பணம் பெற்ற போது ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்து கரூா் மாவட்டத் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி
ராஜலிங்கம், குற்றவாளியாந சந்திரசேகருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய். பத்தாயிரம் அபராதமும் விதித்துத் தீா்ப்பளித்தாா்.
கருத்துகள்