முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சென்றடைய வேண்டும் பிரதமர் கருத்து


‘கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரை

“அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது”

“சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைசி மைலை சென்றடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும்”

‘கடைக்கோடியும் சென்றடைதல்’ அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது”

“அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது”

“ஊரகப் பகுதிகள் மற்றும் பழங்குடிப் பகுதிகளை சென்றடையும் தாரக மந்திரத்திற்கு இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளது”

“பழங்குடி சமூகத்தின் மிகப்பெரிய திறனை முதன் முறையாக இந்த அளவுக்கு நாடு பயன்படுத்துகிறது”

“பழங்குடி சமூகத்தில் மிகவும் நலிவடைந்தவர்களுக்கான சிறப்பு இயக்கத்தின் கீழ் விரைவாக வசதிகளை அளிப்பதற்கு ஒட்டுமொத்த நாட்டின் அணுகுமுறை அவசியமாகிறது”

‘கடைக்கோடியும் சென்றடைதலில்’ முன்ன

‘கடைக்கோடியும் சென்றடைதல்’ பற்றிய நிதிநிலை அறிக்கை சம்பந்தமான இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். 2023 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்கு கருத்துக்களைப் பெறும் வகையில் நடைபெறும் நிதிநிலை அறிக்கைக்குப் பிந்தைய 12 இணையவழிக் கருத்தரங்குகள் தொடரில் இது நான்காவது ஆகும்.

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், அரசு ஒரு படி முன்னேறி, நிதிநிலை அறிக்கைக்குப் பிறகு அது குறித்த கருத்துக்களை பங்குதாரர்களுடன் பரிமாறிக் கொள்ளும் புதிய நடைமுறையை கடந்த சில ஆண்டுகளாக தொடங்கியுள்ளது என்று கூறினார். “அமலாக்கம் மற்றும் உரிய காலத்தில் விநியோகிப்பதன் கண்ணோட்டத்தில் இந்த நிதிநிலை அறிக்கைக்குப் பிறகான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியத்துவம் பெறுகிறது. வரி செலுத்துபவர்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக பயன்படுத்தப்படுவதையும் இது உறுதி செய்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

வளர்ச்சிக்கு, நிதியுடன் அரசியல் உறுதிப்பாடும் அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். சிறந்த ஆளுகை மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளைத் தொடர்ந்து கண்காணிப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், “சிறந்த ஆளுகையில் நாம் அதிக கவனம் செலுத்தினால் கடைநிலையை அடையும் நமது இலக்கை மிக சுலபமாக அடைய முடியும்” என்று கூறினார். தொலைதூரப் பகுதிகளில் வசிப்பவர்களையும் சென்றடையும் சிறந்த ஆளுகையின் ஆற்றலை வெளிப்படுத்துவதற்கு இந்திரதனுஷ் இயக்கம் மற்றும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தடுப்பூசியை செலுத்துவதில் பின்பற்றப்பட்ட புதிய அணுகுமுறைகளை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.

முழுமையான நிலை என்ற கொள்கைக்குப் பின்னணியில் உள்ள சிந்தனையை விளக்கிய பிரதமர், கடைநிலையை அடையும் அணுகுமுறையும், முழுமையான நிலை என்ற கொள்கையும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளது என்று கூறினார். முந்தைய காலத்தில் அடிப்படை வசதிகளை வேண்டி ஏழை மக்கள் அரசிற்கு பின்னால் சென்றிருந்த காலம் மாறி, தற்போது ஏழைகளின் இருப்பிடத்தை அரசு சென்றடைகிறது என்று அவர் தெரிவித்தார். “அனைத்துப் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை வசதிகள் அனைத்தும் சென்றடைய வேண்டும் என்று நாம் முடிவு செய்யும் நாள்தான், உள்ளூர் அளவில் பணி கலாச்சாரத்தில் பெரும் மாற்றத்தை நாம் சந்திக்க முடியும். முழுமையான நிலை என்ற கொள்கையின் பின்னணியில் உள்ள உணர்வு இதுதான். அனைவரையும் சென்றடைவது என்பது நமது இலக்காக இருக்கும் போது ஏற்றத்தாழ்வு மற்றும் ஊழலுக்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது. கடைநிலையை அடையும் இலக்கை அப்போதுதான் நம்மால் முழுமையாக எட்ட முடியும்” என்று பிரதமர் மேலும் கூறினார்.

நடைபாதை வியாபாரிகளை வங்கியோடு முறையாக இணைக்க வகை செய்யும் பிரதமரின் ஸ்வநிதித் திட்டம், சீர்மரபினர், நாடோடிகள், குடிநிரந்தரமற்றோருக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆணையம், ஊரகப் பகுதிகளில் 5 லட்சம் பொது சேவை மையங்கள் மற்றும் 10 கோடி பேருக்கு தொலை - மருத்துவ சேவை வசதி வழங்கப்பட்டிருப்பது கடைகோடியும் சென்றடைவதற்கான எடுத்துக்காட்டுகள் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நலத்திட்ட உதவிகள், பழங்குடியினர் மற்றும் ஊரகப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு முற்றிலும் சென்றடையும் நோக்கத்திற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டத்தை பிரதமர் குறிப்பிட்டுப் பேசினார். அம்ரித் சரோவர்-எதிர்காலத்திற்காக நீர் ஆதாரத்தை பாதுகாத்தல் திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் நீர் ஆதார அமைப்புகள் அமைப்பதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் 30 ஆயிரம் திட்டப்பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டுவிட்டன. “இந்த இயக்கங்கள் மூலம் பல தசாப்தங்களாக பல்வேறு வசதிகளுக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருந்த தொலைதூரத்தில் வாழும் இந்தியர்களின் வாழ்வாதாரங்கள் மேன்மை அடைந்துள்ளன. நாம் இதோடு நின்றுவிடக் கூடாது. புதிய நீர் இணைப்புகள் உருவாக்குவது தொடர்பான நடைமுறை அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும் நீர் ஆதாரம் தொடர்பான அமைப்புகளை எவ்விதம் வலுப்படுத்த வேண்டும் என்பது குறித்து சீராய்வு மேற்கொள்ளப் வேண்டும் என்றார்.

அனைவருக்கும் வீட்டுவசதி கிடைக்கும் வகையில் எவ்விதம்  தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து துறைசார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றார். சூரியசக்தி கிடைப்பதற்காக எளிமையான முறைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் நகர்ப்புற, ஊரகப்பகுதிகளில் தொகுப்பு வீட்டு வசதி திட்டங்களை உருவாக்கவேண்டும் என்றும் கூறினார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஏழைகளுக்கு குடியிருப்பு கட்டுவதற்காக 80,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

“முதல் முறையாக நமது நாட்டின் பழங்குடி சமூகத்தின் பிரம்மாண்டமான வளம் பெருமளவிற்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் பழங்குடியின மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது” என்று பிரதமர் கூறினார். ஏக்லாவியா உறைவிடப் பள்ளிகளுக்கான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை அறியுமாறும், இந்தப் பள்ளிகளின் மாணவர்கள் பெரிய நகரங்களில் எவ்வாறு பிரபலம் அடைகிறார்கள் என்பதைக் காணுமாறும் கூடியிருந்தோரிடம் கேட்டுக்கொண்டார். இந்தப் பள்ளிகளில் கூடுதலாக அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களை உருவாக்குவதற்கும், புத்தொழில்களுடன் தொடர்புடைய அம்சங்களுக்காகப் பயிலரங்குகளை நடத்துவதற்கு வழிவகைகளைக் காணுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

பழங்குடி சமூகங்களுக்கிடையே மிகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் முறையாக சிறப்பு இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். “நாட்டில் உள்ள 200-க்கும் அதிகமான மாவட்டங்களில் 22,000-க்கும் அதிகமான கிராமங்களில் நமது பழங்குடி நண்பர்களுக்கு அதிவேகமாக வசதிகளை நாம் வழங்கவிருக்கிறோம்” என்று அவர் கூறினார். இது தொடர்பாக பஸ்மாண்ட முஸ்லிம்கள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார். அரிவாள் வடிவ செல்களால் ஏற்படும் நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடவும் பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒட்டுமொத்த தேசம் என்ற அணுகுமுறை தேவைப்படுகிறது. எனவே சுகாதாரத்தோடு தொடர்புடைய அனைவரும் அதிவேகமாக பணியாற்ற வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

கடைக்கோடி பகுதியையும் சென்றடைவது என்ற வகையில், முன்னேறவிரும்பும் மாவட்டத் திட்டம் வெற்றிகரமான முன்மாதிரியாக உருவாகியுள்ளது. இந்த அணுகுமுறையை மேலும் முன்கொண்டு செல்ல நாட்டின் 500 வட்டாரங்களில் முன்னேற விரும்பும் வட்டாரத் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. “முன்னேற விரும்பும் வட்டாரத் திட்டங்களைப் பொறுத்தவரை, முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்காகப் பணியாற்றிய அதே வழிமுறையுடன் ஒப்பீட்டு அளவுகளை மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டியுள்ளது” என்று கூறி பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,