பசவ ஜெயந்தி நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
பசவ ஜெயந்தி நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். காணொளி ஒன்றின் வாயிலாக ஜெகத்குரு பசவேஸ்வரா குறித்த கருத்துக்களை திரு மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
“பசவ ஜெயந்தி என்னும் நன்னாளில் ஜெகத்குரு பசவேஸ்வராவை வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும், கோட்பாடுகளும் மனித சமூகத்துக்கு சேவையாற்ற நமக்கு ஊக்கமளிக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிக்கவும், வலிமையான மற்றும் வளமான சமூகத்தை கட்டமைக்கவும் அவர் குரல் கொடுத்தார்.ஜெகத்குரு பசவன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா மரியாதை செலுத்தியுள்ளார்
ஜெகத்குரு பசவன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
“ஜெகத்குரு பசவன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை வணங்குகிறேன். அவரது ஆன்மீக உணர்வு, நேர்மையான மற்றும் சமமான சமூகத்தை உருவாக்க வழிவகை செய்தது. ஒவ்வொரு மனிதரிடமும் தெய்வீகத் தன்மையைக் காணும் அவரது மெய்யறிவு, இந்தியாவின் ஜனநாயக மாண்புகளையும், மக்களுக்கு சேவையாற்றும் நமது பாதையையும் வழிநடத்துகிறது”, என்று ட்விட்டர் பதிவில் திரு அமித் ஷா கூறியுள்ளார்.
கருத்துகள்