வன்னியர்களின் பொதுச்சொத்துவாரியம் செயல்பாட்டிற்கு வந்தது,
தமிழகஅரசு சார்பில் அரசாணை வெளியீடு
வன்னியர் பொதுசொத்து வாரியத்திற்கு தலைவரையும், அறங்காவலர்களையும் நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வன்னிய சமுதாயத்தின் சார்பாக தமிழ்நாடு முதல்வர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரிடம் அச் சமூகத்தின் சார்பில் வைத்த கோரிக்கை அடிப்படையில்
240 அறக்கட்டளைகளை அபகரிப்பவர்களிடமிருந்து பாதுகாத்து வன்னிய சமுதாயம் பன்பெற 2010 ஆம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது வன்னியர் பொதுச்சொத்துவாரியம் அமைக்க நீதிமன்ற ஆணை அடிப்படையில் தமிழ்நாடு அரசின் மூலம் 44 வது சட்டம் இயற்ற அரசாணை வெளியிட்டு 44-வது சட்டத்தை குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்று 2018 ஆம் ஆண்டில் சட்டமானது, தற்போது அரசாணை மூலமாக நடைமுறைக்கு வந்தது.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு எண்: W.P.No. 26565 of 2011 ன் படி வன்னியர்களின் பொதுச்சொத்துவாரியம் செயல்பாட்டுக்கு வந்ததால் அரசு சலுகைகளையே எதிர்பார்க்க வேண்டிய அவசியமில்ல்த நிலை அச் சமூகம் அடையும் என்பதே,
வன்னியர்கள் பொதுச்சொத்து வாரியம் மூலம் வன்னியர் சமுதாயம் பெற முடியும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். விவசாய பயிர் கடன் பெற்றுத்தருதல். விவசாய விளைபொருட்களை விற்பனை செய்ய வணீக நிறுவனங்களை ஏற்படுத்துதல்.
பாரம்பரிய நவீன விவசாயத்தில் புதிய முயற்ச்சிகளை மேற்கொள்வோருக்கு ஊக்க தொகை
:மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு இலவச கல்வி மற்றும் தங்கும் வசதி.
ஆண்டுதோரும் பொறியியல், சட்டம், அறிவியல், இலக்கியம், வரலாறு மற்றும் முனைவர் பட்ட ஆய்வு செய்வதற்கான இலவச கல்விக்கட்டணம்.
IAS, IPS, IFS மற்றும் இதர அரசுப் பணிக்கான பயிற்சி மேற்கொள்ள இலவச பயிற்சி மையம்.
மருத்துவக் கல்லூரி, பொறியியல், சட்டக் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உலகத் தரம் வாய்ந்த நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் மற்றும் பள்ளிகள் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு
மாவட்ட அளவில் வணீக வியாபாரிகளை ஒருங்கிணைத்து, வியாபார மற்றும் விளம்பர உத்திகள் பற்றி இலவச பயிற்ச்சி அளிக்க பயிற்ச்சி மையம் ஏற்படுத்துதல்.
உற்பத்தியாளர்களுக்கும் சில்லறை வியாபாரிகளுக்கும் நேரடி தொடர்பு ஏற்படூத்துதல்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு பயிற்ச்சி அளித்தல் மற்றும் வாய்ப்புகளை உருவாக்குதல்.
1987 ஆம் ஆண்டு சாலை மறியலின் போது உயிர் நீத்த 25 ஜாதித் தியாகிகளின் குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவது. மரியாதை செய்தல்.
வன்னியர் ஜாதி சொத்து, வணீகம், குடும்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு மாவட்ட அளவிலும் உயர்நீதி மன்ற அளவிலும் இலவச சட்ட உதவி மையம் அமைத்தல்.
பலவகையான, தகவல் மையம், விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளித்தல், சமுதாய விழா, திருமணத் தகவல் மையம், நினைவுச்சின்னங்கள் அமைத்தல், வன்னியர் தனித்த வரலாறுகள் வெளியிடுதல் போன்றவற்றைச் செய்யலாம். என அச் சமூகப் போராளி
சி.என். இராமமூர்த்தி. ஒரு செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார், அனைத்து சமுதாயத்துக்கும் அவரவருடைய உரிமை கிடைக்க யாரும் பாதிக்காத வண்ணம் இது போன்ற சட்டமும் அரசாணையும் தேவை என்பதே இங்கு பொதுநீதி
கருத்துகள்