முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உள்நாட்டு மற்றும் பிற வளரும் நாடுகளின் அரசு ஊழியர்களுக்கான என்சிஜிஜி-யின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்,

மாலத்தீவுகள் மற்றும் வங்கதேசத்தின் அரசு ஊழியர்களுக்காக என்சிஜிஜி மூன்று திறன் மேம்பாட்டு திட்டங்களைத் தொடங்கியது


நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) சார்பில், வங்கதேசம் (45 அதிகாரிகள்) மற்றும் மாலத்தீவுகளைச் சேர்ந்த (50 ஊழியர்கள்) அரசு ஊழியர்களுக்காக மூன்று திறன் மேம்பாட்டு திட்டங்கள் (CBPs) முசோரி வளாகத்தில் தொடங்கப்பட்டன. உள்நாட்டு மற்றும் பிற வளரும் நாடுகளின் அரசு ஊழியர்களுக்கான என்சிஜிஜி-யின் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மக்களை மையமாகக் கொண்ட பொதுக் கொள்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.


பிரதமர் திரு.நரேந்திர மோடியின் ‘வசுதைவ குடும்பகம்’ தத்துவத்திற்கு இணங்க, இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளின் அரசு ஊழியர்களிடையே ஒத்துழைப்பையும், கற்றலையும் மேம்படுத்துவதை என்சிஜிஜி நோக்கமாகக் கொண்டுள்ளது. சிக்கலான மற்றும் சவாலான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான திறன்களை அரசு ஊழியர்களிடையே வளர்ப்பதே இதன் நோக்கமாகும். இந்த 2-வாரப் பயிற்சி, வளர்ந்து வரும் டிஜிட்டல் கருவிகளின் உதவியுடன் அதிகாரிகளின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தவும் உதவும்.

இந்தப்  பயிற்சியின் தொடக்க நிகழ்வில் உரையாற்றிய என்சிஜிஜி இயக்குநர் திரு.பாரத் லால், அரசு ஊழியர்கள் துரிதமாக பணியாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அடிப்படை சேவைகளை வழங்கும் அதே வேளையில், மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் அரசு ஊழியர்கள் விரைந்து செயல்பட வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.



ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் மக்களுக்கு அரசுகளின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருவதாகவும், அவர்களது எதிர்பார்ப்பைக் கண்டறிய ஒரு அமைப்பை உருவாக்குவதும், மக்களின் குறைகளை தீர்க்கும் முறையை நடைமுறைப்படுத்துவது மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார். பொதுமக்களின் குறைகளை நேரில் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் 12 கோடிக்கும் அதிகமான இந்திய விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு மானியங்கள் மாற்றப்பட்டது குறித்தும் அவர் பேசினார்.

தடையற்ற நிர்வாக முறையைப் பற்றி பேசுகையில், ஒவ்வொரு கிராமப்புற வீடுகளுக்கும் சுத்தமான குழாய் நீரை வழங்குவதற்காக 2019-ம் ஆண்டில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கத்தின் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலை அவர் மேற்கோள் காட்டினார். இதேபோல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, உஜ்வாலா திட்டத்தின்  கீழ் 96 மில்லியன் வீடுகளுக்கு சமையல் எரிவாயுவும், தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் 115 மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கழிப்பறைகள் வழங்கப்பட்டதாகவும், இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைத்ததாகவும் அவர் கூறினார். மக்களுக்கு திறம்பட சேவை செய்ய இரு நாட்டு அரசு ஊழியர்களும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று பாரத் லால் வலியுறுத்தினார்.

2014-ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட  என்சிஜிஜி, 2024-ம் ஆண்டுக்குள் மாலத்தீவின் 1,000 அரசு ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கவும், 2025-ம் ஆண்டுக்குள் 1,800 அரசு ஊழியர்களுக்கு பயிற்சியளிக்க வங்கதேச அரசுடனுன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுவரை, மாலத்தீவின் 685 அதிகாரிகளுக்கு என்சிஜிஜி பயிற்சி அளித்துள்ளது. இதுவரை வங்கதேசம், கென்யா, தான்சானியா, துனிசியா, மாலத்தீவு என 15 நாடுகளைச் சேர்ந்த 3,500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு  என்சிஜிஜி பயிற்சி அளித்துள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...