நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் நம் அனைவரையும்
பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது: பிரதமர்
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத் திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு பற்றிப் பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;
“நாட்டு மக்களாகிய நம் அனைவருக்கும் இன்று மறக்க முடியாத நாள். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது. இந்த தெய்வீகமான, அற்புதமான கட்டடம், மக்களின் அதிகாரத்துடன், தேசத்தின் வளம் மற்றும் வலிமைக்குப் புதிய வேகத்தையும் பலத்தையும் தரும் என்று நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்."
“இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. வரலாற்றுச் சின்னமான இந்தக் கட்டடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும், கனவுகளைத் தூண்டி அவற்றை நனவாக்கட்டும். மகத்தான நமது தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு இது கொண்டு செல்லட்டும்."புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்
பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கட்டடம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான இடமாக மட்டுமல்லாமல் அமிர்தகாலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம் நாட்டின் கனவை நிறைவேற்றிய கட்டுமானத் தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகி) கடின உழைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கும் தற்காலத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது.
நமது வளமான கலாச்சாரத்தில் நீதியின் நற்பண்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இது இந்தியாவின் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து நினைவூட்டும்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதாக திரு அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த கட்டடம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான இடம் மட்டுமல்ல, அமிர்த காலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் நாட்டின் கனவை சாதனை நேரத்தில் நிறைவேற்றிய கட்டுமானத் தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகிகளின்) கடின உழைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான அமித்ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கும் அதன் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது என்றும், நமது செழுமையான கலாச்சாரத்தில் நீதியின் நற்பண்புகளின் முக்கியத்துவத்தை இது இந்தியாவின் வரவிருக்கும் தலைமுறையினருக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாக இருக்கும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மூத்த பிரமுகர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, இதர பிரதிநிதிகளே, எனதருமை நாட்டு மக்களே!
ஒவ்வொரு தேசத்தின் வரலாற்று பயணத்திலும் சில தருணங்கள் அழிக்க முடியாதவையாக மாறும். மே 28, 2023 என்ற இன்றைய தினம், அதுபோன்ற புனிதமான தருணம். நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டை அமிர்த பெருவிழாவாக நாடு கொண்டாடி வரும் நேரத்தில், இந்திய மக்கள் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்னும் அன்பளிப்பை வழங்கி உள்ளார்கள். இது வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்தியர்களின் லட்சியம் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு. இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் நமது ஜனநாயக ஆலயம், இது. திட்டமிடலை யதார்த்தத்துடனும், கொள்கைகளை அமலாக்கத்துடனும், மன உறுதியை செயலாகத்துடனும், உறுதிப்பாட்டை வெற்றியுடனும் இணைக்கும் முக்கிய கருவியாக இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் விளங்கும்.
நண்பர்களே,
புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலமாகவே புதிய மாதிரிகள் உருவாக்கப்படும். இன்று புதிய பாதைகளை வகுப்பதற்காக, புதிய இலக்குகளை புதிய இந்தியா நிர்ணயித்து வருகிறது. புதிய உற்சாகமும், புதிய ஆர்வமும் எழுந்துள்ளது. இந்தியாவின் உறுதித் தன்மை, மக்கள் சக்தி மற்றும் இந்திய மக்களின் உணர்வை ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் போது புனித செங்கோலும் இந்த புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சோழப் பேரரசு காலத்தில் சேவை, கடமை, தேசத்தின் பாதையின் அடையாளமாக செங்கோல் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் ஆதீன துறவிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த செங்கோல் அதிகார மாற்றத்தின் அடையாளமாகியது. தமிழ்நாட்டில் துறவிகள் இன்று காலை நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வந்திருந்து நமக்கு ஆசி வழங்கினார்கள். அவர்களது வழிகாட்டுதலின் கீழ் இந்த புனித செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம் இந்த செங்கோல் நமக்கு எழுச்சியூட்டும்.
நண்பர்களே,
இந்தப் புதிய நாடாளுமன்றம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும், வலிமையையும் வழங்கும். தங்களது வேர்வை மற்றும் கடின உழைப்பால் பணியாளர்கள் இந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நமது அர்ப்பணிப்பால் இதனை மேலும் புனிதமாக மாற்றுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நமது கடமை. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்பதோடு, பல தலைமுறைகளுக்கு அதிகாரம் அளித்து, இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமல்படுத்தப்படும் புதிய சட்டங்கள், வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியாவை மாற்றும். கொள்கை, நீதி, உண்மை, கண்ணியம் மற்றும் கடமை ஆகிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு வளமான, வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் அடித்தளமாக திகழும் என்று நான் நம்புகிறேன். நன்றி!புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் மரியாதை
புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து கவுரவித்தார். அவர்களின் பங்களிப்பை அழிக்க முடியாத வகையில் புதிய அரங்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமர் டவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இன்று, நாங்கள் எங்கள் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் போது, கட்டுமானத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கைவினைத்திறனுக்காக அவர்களைக் கவுரவிக்கிறோம். "நிகழ்வுகள் எல்லாம் பார்க்கும் போது....
அனேகமா பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை காசி, இராமேஸ்வரம் இரண்டிலும் போட்டியிட வாய்ப்புகள் இருக்கிறது என பார்க்கப்படுகிறது .நாங்கள் அணைவரும் சைவ மதம்னு எனக் கூறிக் கொண்டிருந்த திக ஆதரவாளர்கள் சைவ மடாதிபதி தந்த நந்தி செங்கோலை பார்த்ததும் இந்து செங்கோல்னு சொல்வது பார்க்க அதில் உள்ள நுட்பமான அரசியல் புரிகிறது !செங்கோல்கள், பேனாக்களை விட வலிமை வாய்ந்தது மண்னராட்சியில் முக்கியம் அடிப்படை தேவைகள் நிறைவேறி நீதி வழங்கும் செங்கோல் என்ற நம்பிக்கை ஜனாயகத்தில் வந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அது எழுட்சியாக விளங்கும், தற்போது தற்போது மக்கள் விரும்புவது மனுநீதிச் சோழன் போலவும் பாண்டியன் நெடுஞ்செழியன் போலவும் ஊழல் இல்லாத ஆட்சி தேவை அதற்கு இந்த செங்கோல் பயன்படும் போது அதன் மதிப்பு பன் மடங்காக மாறும் அதுவே இங்கு பொது நீதி
10 கிலோ மீட்டருக்கு வெறும் மண் சாலை. குழந்தை மரணம், ஆம்புலன்சிலிருந்து குழந்தையின் சடலத்துடன் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதில் எப்போது சாமானிய நீதி வரும் அப்போது ஜனாயகத்தின் செங்கோல் மதிப்பு உயரும்.இது வரை எந்த பிரதமரும் ஆதீனங்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்ததில்லை! நாங்க எம்.பிஆகாமலே, எந்தக் கட்சியிலும் சேராமலே பாராளுமன்றத்திற்கு போயிட்டு வந்துட்டோம்னு மதுரை ஆதீனம் புளகாங்கிதமாக பேசியுள்ள நிலையில்
ஆதீனங்கள், அடிகளார்கள், மடாதிபதிபதிகள் எல்லாம் துறவரம் பூண்டவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள். அவர்கள் இறைவன் குடியிருக்கும் அவன திருவடி தாழ்பணிந்து சேர வேண்டும் – பிறவியில்லா பெரும் பேறு பெற வேண்டும் – அதையன்றி வேறெதும் வேண்டாம் என்ற ஒற்றை நோக்கமின்றி, வேறெதையும் விரும்பாதவர்கள் என கடந்த கால ஆட்சியாளர்கள் இருந்துவிட்டார்கள்!
ஆன்மீக மையங்களைத் தேடி அதிகார மையங்கள் தாம் வந்து பணிந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிச் செல்ல வேண்டுமென்பது கடந்த கால மரபாகிப் போனது ,ஆஹா எப்பேர்பட்ட பாராளுமன்றக் கட்டிடிடத் திறப்பு விழாவுக்குப் போயிட்டு வந்திருக்கோம்.. பிரதமரே எங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினார் என்பது தங்களை ஆன்மீகவாதிகளாக
பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய ஆதீனங்களின் தகுதிக்குச் சான்றாகிவிட்டதென்பதே தற்போது அரசியல் உலகில் விவாதப் பொருள்
கருத்துகள்