முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறப்பில் மன்னகள் காலத்தை உணர்த்தும் நிகழ்வுகள்

நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் நம் அனைவரையும்


பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது: பிரதமர்






நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். நேரடியாகப் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்ததன் மூலம்  நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தைத்  திரு மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்வு பற்றிப் பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

“நாட்டு மக்களாகிய நம் அனைவருக்கும் இன்று மறக்க முடியாத நாள். நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் நம் அனைவரையும் பெருமையாலும் நம்பிக்கையாலும் நிரப்பப் போகிறது. இந்த தெய்வீகமான, அற்புதமான கட்டடம், மக்களின் அதிகாரத்துடன், தேசத்தின் வளம் மற்றும் வலிமைக்குப் புதிய வேகத்தையும் பலத்தையும் தரும் என்று நான் முழுமையான நம்பிக்கை கொண்டுள்ளேன்."



“இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்ட நிலையில், நமது இதயங்களும் மனங்களும் பெருமை, நம்பிக்கை மற்றும் வாக்குறுதியால் நிரம்பியுள்ளன. வரலாற்றுச் சின்னமான இந்தக் கட்டடம் அதிகாரமளிக்கும் தொட்டிலாக இருக்கட்டும், கனவுகளைத் தூண்டி அவற்றை நனவாக்கட்டும்.  மகத்தான  நமது தேசத்தை முன்னேற்றத்தின் புதிய உச்சத்திற்கு இது கொண்டு செல்லட்டும்."புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்





பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கட்டடம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான இடமாக மட்டுமல்லாமல் அமிர்தகாலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் உள்ளது.

புதிய நாடாளுமன்றக் கட்டடம்  நாட்டின் கனவை நிறைவேற்றிய கட்டுமானத் தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகி) கடின உழைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.




பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களால் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கும்  தற்காலத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது.

நமது வளமான கலாச்சாரத்தில் நீதியின் நற்பண்புகளின் முக்கியத்துவத்தைப் பற்றி இது இந்தியாவின் வரும் தலைமுறையினருக்கு தொடர்ந்து நினைவூட்டும்.




புதிய நாடாளுமன்றக்  கட்டடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்துவைத்ததற்காக நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதாக திரு அமித் ஷா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த கட்டடம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான இடம் மட்டுமல்ல, அமிர்த காலத்தின் போது ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் இந்தியாவின் பயணத்தின் தொடக்கப் புள்ளியாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.



புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டும் நாட்டின் கனவை சாதனை நேரத்தில் நிறைவேற்றிய கட்டுமானத் தொழிலாளர்களின் (ஷ்ரம் யோகிகளின்) கடின உழைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு துறை அமைச்சருமான அமித்ஷா  நன்றி தெரிவித்துள்ளார்.




பிரதமர் திரு நரேந்திர மோடியால் நாடாளுமன்ற வளாகத்தில் செங்கோல் நிறுவப்பட்டது இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கும் அதன் நிகழ்காலத்திற்கும் இடையே ஒரு பாலத்தை உருவாக்கியுள்ளது என்றும், நமது செழுமையான கலாச்சாரத்தில் நீதியின் நற்பண்புகளின் முக்கியத்துவத்தை இது இந்தியாவின் வரவிருக்கும் தலைமுறையினருக்கு தொடர்ந்து நினைவூட்டுவதாக இருக்கும் என்றும் திரு அமித் ஷா தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்





மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மூத்த பிரமுகர்களே, மதிப்பிற்குரிய விருந்தினர்களே, இதர பிரதிநிதிகளே, எனதருமை நாட்டு மக்களே!







ஒவ்வொரு தேசத்தின் வரலாற்று பயணத்திலும் சில தருணங்கள் அழிக்க முடியாதவையாக மாறும். மே 28, 2023 என்ற இன்றைய தினம், அதுபோன்ற புனிதமான தருணம். நாட்டின் 75-ஆவது சுதந்திர ஆண்டை அமிர்த பெருவிழாவாக நாடு கொண்டாடி வரும் நேரத்தில், இந்திய மக்கள் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் என்னும் அன்பளிப்பை வழங்கி உள்ளார்கள். இது வெறும் கட்டிடம் அல்ல, 140 கோடி இந்தியர்களின் லட்சியம் மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு. இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் நமது ஜனநாயக ஆலயம், இது.  திட்டமிடலை யதார்த்தத்துடனும், கொள்கைகளை அமலாக்கத்துடனும், மன உறுதியை செயலாகத்துடனும், உறுதிப்பாட்டை வெற்றியுடனும் இணைக்கும் முக்கிய கருவியாக இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் விளங்கும்.

நண்பர்களே,





புதிய பாதைகளில் பயணிப்பதன் மூலமாகவே புதிய மாதிரிகள் உருவாக்கப்படும். இன்று புதிய பாதைகளை வகுப்பதற்காக, புதிய இலக்குகளை புதிய இந்தியா நிர்ணயித்து வருகிறது. புதிய உற்சாகமும், புதிய ஆர்வமும் எழுந்துள்ளது. இந்தியாவின் உறுதித் தன்மை, மக்கள் சக்தி மற்றும் இந்திய மக்களின் உணர்வை ஒட்டுமொத்த உலகமும் கவனிக்கிறது.


இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தின் போது புனித செங்கோலும் இந்த புதிய கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான சோழப் பேரரசு காலத்தில் சேவை, கடமை, தேசத்தின் பாதையின் அடையாளமாக செங்கோல் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் ஆதீன துறவிகளின் வழிகாட்டுதல்களின் கீழ் இந்த செங்கோல் அதிகார மாற்றத்தின் அடையாளமாகியது. தமிழ்நாட்டில் துறவிகள் இன்று காலை நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வந்திருந்து நமக்கு ஆசி வழங்கினார்கள். அவர்களது வழிகாட்டுதலின் கீழ் இந்த புனித செங்கோல் மக்களவையில் நிறுவப்பட்டுள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டிடத்தில் கூட்டத்தொடர் தொடங்கும் போதெல்லாம் இந்த செங்கோல் நமக்கு எழுச்சியூட்டும்.

நண்பர்களே,

இந்தப் புதிய நாடாளுமன்றம், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு புதிய ஆற்றலையும், வலிமையையும் வழங்கும். தங்களது வேர்வை மற்றும் கடின உழைப்பால் பணியாளர்கள் இந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நமது அர்ப்பணிப்பால் இதனை மேலும் புனிதமாக மாற்றுவது, நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நமது கடமை. இங்கு எடுக்கப்படும் முடிவுகள் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்பதோடு, பல தலைமுறைகளுக்கு அதிகாரம் அளித்து, இந்தியாவின் வளமான எதிர்காலத்திற்கு அடித்தளமிடும். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தப் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் அமல்படுத்தப்படும் புதிய சட்டங்கள், வளர்ச்சிப் பாதையை நோக்கி இந்தியாவை மாற்றும். கொள்கை, நீதி, உண்மை, கண்ணியம் மற்றும் கடமை ஆகிய கோட்பாடுகளுக்கு உட்பட்டு வளமான, வலிமையான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் அடித்தளமாக திகழும் என்று நான் நம்புகிறேன். நன்றி!புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு பிரதமர் மரியாதை


புதிய நாடாளுமன்றத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று நேரில் சந்தித்து கவுரவித்தார். அவர்களின் பங்களிப்பை அழிக்க முடியாத வகையில் புதிய அரங்கு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் டவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"இன்று, நாங்கள் எங்கள் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்கும் போது, கட்டுமானத் தொழிலாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கைவினைத்திறனுக்காக அவர்களைக் கவுரவிக்கிறோம். "நிகழ்வுகள் எல்லாம் பார்க்கும் போது....






அனேகமா பிரதமர் நரேந்திர  மோடி இந்த முறை காசி, இராமேஸ்வரம் இரண்டிலும் போட்டியிட வாய்ப்புகள்  இருக்கிறது என பார்க்கப்படுகிறது .நாங்கள் அணைவரும் சைவ மதம்னு எனக் கூறிக் கொண்டிருந்த திக ஆதரவாளர்கள் சைவ மடாதிபதி தந்த  நந்தி செங்கோலை பார்த்ததும் இந்து செங்கோல்னு  சொல்வது  பார்க்க அதில் உள்ள நுட்பமான  அரசியல்  புரிகிறது !செங்கோல்கள், பேனாக்களை விட வலிமை வாய்ந்தது மண்னராட்சியில் முக்கியம் அடிப்படை தேவைகள் நிறைவேறி நீதி வழங்கும் செங்கோல் என்ற நம்பிக்கை ஜனாயகத்தில் வந்தால் மட்டுமே மக்கள் மத்தியில் அது எழுட்சியாக விளங்கும், தற்போது தற்போது மக்கள் விரும்புவது மனுநீதிச் சோழன் போலவும் பாண்டியன் நெடுஞ்செழியன் போலவும் ஊழல் இல்லாத ஆட்சி தேவை அதற்கு இந்த செங்கோல் பயன்படும் போது அதன் மதிப்பு பன் மடங்காக மாறும் அதுவே இங்கு பொது நீதி 







10 கிலோ மீட்டருக்கு வெறும் மண் சாலை. குழந்தை மரணம், ஆம்புலன்சிலிருந்து குழந்தையின் சடலத்துடன் இறக்கி விடப்பட்டுள்ளனர். இதில் எப்போது சாமானிய நீதி வரும் அப்போது ஜனாயகத்தின் செங்கோல் மதிப்பு உயரும்.இது வரை எந்த பிரதமரும் ஆதீனங்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்ததில்லை! நாங்க எம்.பிஆகாமலே, எந்தக் கட்சியிலும் சேராமலே பாராளுமன்றத்திற்கு போயிட்டு வந்துட்டோம்னு மதுரை ஆதீனம் புளகாங்கிதமாக பேசியுள்ள நிலையில் 

ஆதீனங்கள், அடிகளார்கள், மடாதிபதிபதிகள் எல்லாம் துறவரம் பூண்டவர்கள் எல்லாம் ஆன்மீகவாதிகள். அவர்கள் இறைவன் குடியிருக்கும் அவன திருவடி தாழ்பணிந்து  சேர வேண்டும் – பிறவியில்லா பெரும் பேறு பெற வேண்டும் – அதையன்றி வேறெதும் வேண்டாம் என்ற ஒற்றை நோக்கமின்றி, வேறெதையும் விரும்பாதவர்கள் என கடந்த கால ஆட்சியாளர்கள் இருந்துவிட்டார்கள்! 



ஆன்மீக மையங்களைத் தேடி அதிகார மையங்கள் தாம் வந்து பணிந்து வணங்கி ஆசீர்வாதம் வாங்கிச் செல்ல வேண்டுமென்பது கடந்த கால மரபாகிப் போனது ,ஆஹா  எப்பேர்பட்ட பாராளுமன்றக் கட்டிடிடத் திறப்பு விழாவுக்குப் போயிட்டு வந்திருக்கோம்.. பிரதமரே எங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினார் என்பது தங்களை ஆன்மீகவாதிகளாக





பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய ஆதீனங்களின் தகுதிக்குச் சான்றாகிவிட்டதென்பதே தற்போது அரசியல் உலகில் விவாதப் பொருள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்