சிலவற்றைக் கண்டு கொள்ளாமலிருக்க வேண்டும். காரணம் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்ட பின்னர்
ஒரு திரைப்படத்தைத் தடுத்து நிறுத்தும் உரிமை மாநில அரசுகளிடம் இல்லை. கண்டு கொள்ளாமல் விட்டால் அது கருத்தில்லாத படம் எனில் வருவதும் தெரியாது போவதும் தெரியாது. ஆனால் எதிர்த்தால் கூட்டம் கூட்டமாக மக்கள் செல்வார்கள். ஒரு காட்சி கூட ஓடாத எத்தனையோ குப்பைப் படங்களையும் ஓட வைத்த பெருமை சில சிந்திக்காத முற்போக்காளர்களுக்கு உண்டு.
கேரள மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கம்யூனிஸ்ட் அரசின் எதிர்ப்பின் காரணமாகவே கேரள ஸ்டோரி என்றொரு படம் வருகிறது என்பதே இங்கு மக்களுக்குத் தெரிய வந்துள்ளது. நீதிமன்றத்துக்குச் சென்று அதை தடுத்து விடலாம் என்ற அப்பாவி எண்ணம் தோற்று திரைப்படமும் கேரளாவில் வெளியிடப்பட்டுவிட்டது.
தமிழ்நாட்டில் அரசு அமைதியாக இருந்தது தான் சரி. “படம் வெளியிடப் பாதுகாப்புக் கொடுப்போம்” என ஊடகங்களிடம் சொன்னது கூட தேவையற்ற ஒன்று. அது எதிர்ப்பு இருப்பது போன்ற தோற்றத்தையும் உருவாக்கி விட்டது.
பாஜக அதிமுக, நாம் தமிழர் என கட்சிகள் நாலா திசைகளிலிருந்தும் அரசு மீது குற்றம் சுமத்துவதை எதிர்கொள்ள முடியாததல்ல ஆனால் புதிதாக ஒரு திசையிலிருந்து இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களும் இந்த அரசு மீது விமர்சனம் வைப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அவர்கள் ஆளும் ஒரே மாநிலமான கேரளத்தில் அந்தத் திரைப்படம் வெளியாகியிருக்கிறது அங்கே மக்கள் கூட்டம் படத்துக்கும் வரவேற்புள்ளதாம். தமிழ்நாட்டில் அப்படி எதுவும் இல்லை. பாஜக ஆதரவு ஊடகங்கள் இந்த அரசுக்கு எதிரான பிரச்சாரங்களில் ஒன்றாக இந்தப் படத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் அரசை அப்படிச் சொல்லி விட முடியுமா என்ன? என்பதே இங்கு எழுவினா?
கருத்துகள்