ஆருத்ரா மோசடியில் நடவடிக்கை நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு லுக்கவுட் நோட்டீஸ்
சென்னை அமைந்தகரை தலைமையிடமாகச் செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக வட்டி தருவதாகக் கூறியதை நம்பி முதலீடு செய்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பித்தராத காரணமாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் மீது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகிற வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், கண்காணிப்பாளர் மகேஷ்வரன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்துகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ, பாஜகவில் மோசடி காதணமாக நீக்கப்பட்ட்ட முன்னால் நிர்வாகி ஹரிஷ், மாலதி, ராஜா உள்ளிட்ட 11 நபர்கள் பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் தேடப்படும் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி பிரிவு மாநிலத் துணைத் தலைவரான நடிகர் ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்கில் தனக்குத் தெரிந்தவர்களைக் காப்பாற்ற முயற்சி செய்ததும் அவர்களுக்கு உதவியும் வந்ததாகத் தகவலைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து ஆர்.கே.சுரேஷின் வங்கிக் கணக்கிற்கு பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதன் காரணமாக விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகர் ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஆஜர் ஆகவில்லை.
சம்மனை ரத்து செய்ய உத்தரவிட வேண்டி, நடிகர் ஆர்.கே.சுரேஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் நீதிமன்றம் அதைத் தள்ளுபடி செய்தது. தற்போது நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்ட நான்கு நபர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்