இணையவழியில் மட்டுமே பட்டா மாறுதல் பணிகள் நில அளவைத் துறை மற்றும் நிலவரி திட்ட துறை இயக்குனர் டி.ஜி.வினய் சுற்றறிக்கை
இணையவழியில் மட்டுமே பட்டா மாறுதல் பணிகள்
வரி விதிப்புக்கான பட்டா மாறுதல் தொடர்பான பணிகளில், 'மேனுவல்' முறையில் கூடுதல் ஆதாரங்களைக் கேட்பதற்கு, நில அளவைத் துறை தடை விதித்துள்ளது. நில அளவை துறை பணிகள் 'டிஜிட்டல்' முறைக்கு மாற்றப்பட்டாலும், அதன் பலன் பொது மக்களுக்கு இருவரை முறையாக கிடைக்கவில்லை. காரணம் ஊழல்
எனவே, நில அளவைத் துறை மற்றும் நிலவரி திட்ட துறை இயக்குனர் டி.ஜி.வினய், நில அளவைத் துறை மாவட்ட உதவி இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் விபரம் வருமாறு பட்டா பெயர் மாறுதலுக்கு 'ஆன்லைன்' வழியே தாக்கல் செய்யும் விண்ணப்பங்கள், நில அளவரின் 'லாக் இன்' பகுதிக்கு வந்து சேர்கின்றன. பட்டா உட்பிரிவு ஏற்படுத்துதல் பணிகள் இணைய வழியில் நடக்கின்றன. இதில் கள ஆய்வு முடிந்து, உட்பிரிவு வரைபடம் கணினி வழியாக தயாரிக்கப்படுகிறதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட மேல் அலுவலர்கள் இணைய வழியில் ஒப்புதல் அளித்த நிலையில், இந்த விபரங்கள் 'தமிழ் நிலம்' மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதில் இணைய வழியில் கோப்புகள் தயாரிக்கப்பட்டு, அடுத்தடுத்த கட்டப் பணிகளும் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படுவதால், 'மேனுவல்' முறையில் தனியாக கோப்பு தயாரிக்கக் கூடாது. கணினிமயமாக்கப்பட்ட ஆவணங்களின் கூடுதல் பிரதிகளை, மேனுவல் முறையில் கேட்கக் கூடாது. கணினி மயமாக்கப்பட்ட ஆவணங்களை, கணினி வழியே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். தமிழகம் முழுதும் அங்கீகரிக்கப்படும் பட்டா மாறுதல்கள், புதிய உட்பிரிவுகள் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்துடன், சொத்துக்களின் 'அ' பதிவேடு, பட்டா, சிட்டா விபரங்கள் இணைய வழியில் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதாது; இவற்றின் அடுத்தடுத்த மாற்றங்களும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்