சேலத்திற்கும் தருமபுரிக்கும் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பகுதியில் உள்ள சாலை வளைவுகள் மிகுந்த சாலையாகும்.
அங்கு அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதிகளவில் உயிரிழப்புகளும், பலத்த காயங்களும், உடல் உறுப்புகள் இழக்கின்ற சூழ்நிலையும் உருவாகின்றன. வாகனம் இயக்குபவர்களும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் சாலையைக் கடந்து பயணம் செய்கின்றனர்.
விபத்து ஏற்பட்டால் பல கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்படுகிறது. துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தியும் விபத்துக்கள் குறையவில்லை. தொப்பூர் மலைப்பகுதி சாலையை ஆய்வு செய்து, விபத்தில்லாத நேரான வளைவில்லாத சாலையாக உடனடியாக அமைக்க வேண்டுமென்று திட்ட இயக்குனர் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தின்
தலைமைப் பொறியாளரைச் சந்தித்து தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் SP.வெங்கடேஸ்வரன் சேலம் மேற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் ஆகியோர் சென்று மனு வழங்கினார்கள் மற்றும் சேலம் மேற்கு தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை மூலம் செயல்படுத்த வேண்டிய வேலைகள் குறித்தும் வழங்கிய கடிதங்களுக்கான நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர்.
கருத்துகள்