முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு

 பொது சிவில் சட்டம் அவசியமானதென அதை  அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது. இந்தியாவில் உள்ள இரண்டு சட்டங்களில் சிவில் சட்டம், மற்றோன்று கிரிமினல் சட்டம். அந்த கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் சிவில் சட்டம் பொதுவானதில்லை.

சட்டம் பல்வேறு சிக்கல்களைக் கொண்டது. மத ரீதியான நிறைய சிக்கல் அதனால் வரும். இந்தச் சட்டத்தின்படி இந்திய குடிமகன்கள் எல்லோருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டமிருக்கும். அவர்கள் பின்பற்றும் தனி மதம் சார்ந்த சட்டங்கள் செல்லுபடியாகாது. உதாரணமாக பொது சிவில் சட்டம் வந்தால் இஸ்லாமிய மக்கள், ஷரியத் சட்டத்தை பின்பற்ற முடியாது.

பொது சிவில் சட்டம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில்

 மத்தியில் அமைந்த பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முடிவிலுள்ளது.



இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம். சிங் முன்பு  

விசாரணையின்போது நீதிபதி கூறியதாவது, “நவீன இந்திய சமூகம் படிப்படியாக ஒரேவிதமானதாக மாறி, மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து வருகிறது,மேலும் இந்த மாறிவரும் முன்மாதிரிகளைப் பார்க்கும்போது, ஒரு பொதுவான சிவில் சட்டம் அவசியத் தேவையாகவும்  உள்ளது.



நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்க வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். இதை அமல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என்றார்.பொது சிவில் சட்டம் குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் மற்றும் மதம் சார்ந்த அமைப்புகளை இந்திய சட்ட ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை விவகாரங்களில் பல்வேறு மதங்கள் தங்களுக்கென தனிச் சட்டங்களை பின்பற்றி வருகின்றன.

இவற்றுக்குப் பதிலாக, அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றும் வகையில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வந்தது. இது சிறுபான்மையினருக்கு எதிராக அமையுமென எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த இந்தச் சட்டத்தை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு சட்ட ஆணையத்தை மத்திய சட்டத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதனைத் தொடர்ந்து, கருத்துக் கேட்பை நடத்துமாறு  2018 ஆம் ஆண்டிலேயே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோதும், நீதிமன்ற வழக்குகளின் காரணமாக அடுத்தகட்ட நடவடிக்கைகள்  எடுக்க முடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து புதிதாக ஆராய முடிவெடுத்துள்ள சட்ட ஆணையம், பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகள், ஒரு மாத காலத்திற்குள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என அழைப்பு விடுத்துள்ளது இந்திய சட்ட ஆணையம் சீரான பொது சிவில்  சட்டம் பற்றி பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளின் கருத்துகள் மற்றும் யோசனைகளைக் கோருகிறது என அறிவிக்கை வெளியிடப்பட்டது.

இந்தியாவின் 22 வது சட்ட ஆணையம், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட ஒரு செய்திக் குறிப்பு, ஒரே மாதிரியான குடிமைச் சட்டத்தை ஆய்வு செய்து வருகிறது.

தொடக்கத்தில் 21 வது இந்திய சட்ட ஆணையம் சீரான பொது சிவில் சட்டம் பற்றிய விஷயத்தை ஆய்வு செய்து, 07.அக்டோபர் .2016 ஆம் தேதியிட்ட செய்தித்தாள் மற்றும் 19.03.2018, 24.01.03 தேதியிட்ட பொது மேல்முறையீடுகள்மற்றும் அறிவிப்புகளுடன் அதன் மேல்முறையீட்டின் மூலம் அனைத்து தரப்பினர்களின் கருத்துக்களையும் கோரியது. 2018 ஆம் ஆண்டு அதைத் தொடர்ந்து, ஆணையத்திடம் பெரும் பதில்கள் கிடைத்துள்ளன. 21 வது சட்ட ஆணையம் 31 ஆகஸ்ட் 2018 ல்  பொது சிவில்  சட்டத்தின் சீர்திருத்தங்கள் குறித்த ஆலோசனைக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. மேற்படி கலந்தாய்வு அறிவிப்பு  வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகளுக்கு மேல் காலாவதியாகி விட்டதால், சட்டத்தின் பொருத்தம் மற்றும் முக்கியத்துவத்தையும், இந்த விஷயத்தில் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளையும் கவனத்தில் கொண்டு, இந்திய 22 வது சட்ட ஆணையம் வேண்டுமென்றே தீர்மானிப்பது நல்லது என்றும்

அதன்படி, 22 வது இந்திய சட்ட ஆணையம், ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் குறித்து பொது மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடம் கருத்துகளையும் யோசனைகளையும் பெற மீண்டும் முடிவு செய்தது. ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள், "இங்கே கிளிக் செய்யவும்" என்ற விசை  மூலமாகவோ அல்லது Membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ இந்திய சட்ட ஆணையத்திற்கு தங்களின் கருத்துக்களைத்  தெரிவிக்கலாம்.“இது குறித்து நமது இதழ் சார்பில் கருத்துக்கள் மின்அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது இந்த நிலையில் எதிர்கட்சிகள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ள நிலையில் பொது சிவில் சட்டத்தை முதலில் ஹிந்து மதத்தில் அமல்படுத்துங்கள்”.என பிரதமர் பேச்சுக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு நிலை எடுத்துள்ள போதிலும்  

பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. பிரதமரின் பேச்சுக்கு திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  டிகேஎஸ் இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்த பின்னர், நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் தொண்டர்களிடையே உரையாற்றியபோது பொது சிவில் சட்டம் (UCC) மற்றும் முத்தலாக் விவகாரத்தில், முஸ்லிம்களை தூண்டிவிட்டு தவறாக வழிநடத்துவதாக எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கிப் பேசினார்.

"பொது சிவில் சட்டத்தை முன்வைத்து மக்களைத் தூண்டி விடுகின்றனர். ஒரு நாடு எவ்வாறு இரண்டு சட்டங்களால் இயங்க முடியும்? அரசியல் சாசனம், பொது சிவில் சட்டம் குறித்தும், சம உரிமை குறித்தும் பேசுகிறது. உச்ச நீதிமன்றமும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்" எனப் பேசியுள்ளார் பிரதமர் நரேந்திரமோடி. அரசியல் கட்சிகள் உங்களைத் தூண்டிவிட்டு, அழித்து ஆதாயம் தேட முயல்கின்றன என்பதை இந்தியாவின் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும். பொது சிவில் சட்டம் என்ற பெயரில் தங்களைத் தூண்டிவிட முயற்சி செய்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடியின் இன்றைய பேச்சு எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்யப்போவதை உறுதிப்படுத்துவதாகவே பேச்சுகள் எழுந்துள்ளன. தி.மு.கவின் தகவல் தொடர்பு தலைவரான  டி.கே.எஸ்.இளங்கோவன். இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ளதில் பொது சிவில் சட்டத்தை முதலில் இந்து மதத்தில் அமல்படுத்த வேண்டும். இந்த நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் உட்பட அனைத்துச் சாதியினரும், இந்தியாவில் உள்ள எந்தக் கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லவும், அர்ச்சனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மதத்துக்கும் பாதுகாப்பளிக்கிறது அரசியலமைப்புச் சட்டம். அதனால் தான் நாங்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த