முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தில்லையில் தொல்லை தரும் தீட்சிதர்கள் vs அறநிலையத்துறை நடத்தும் தாண்டவம்

பல குடும்பங்களில் மதுரையின் ஆட்சியா? இல்லை  சிதம்பரத்தின் ஆட்சியா ? என்ற வழக்கு நடைமுறை இன்றும் உண்டு


அந்தத் தில்லை சிற்றம்பலத்தில் ஏற்படுத்தப்படும் பிரச்சனைகளை பற்றிய பதிவில் பலர் சிவனடியார்கள் மற்றும் அந்தணர்களும் நிறைய கவலைகளையும் சிறு கண்டனங்களையும் தீக்க்ஷிதர்களின் பேரில் வைக்கிறார்கள். தயவு செய்து உடனே அவர்களை கிரிப்டோ சைவர்கள்  என்று வகைபடுத்த வேண்டாம். அவர்கள் ஹிந்து தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையும் சைவம் வைணவம் சாக்கியம் கௌமாரம் , காணாபத்தியம் என்ற வேறுபாடு காட்டாத ஆழ்ந்த புலமை மிக்கவர்கள் தான்.  முன்னால் சட்ட அமைச்சரும் தற்போதய பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி பெற்றுத்தந்த உச்சநீதிமன்ற உத்தரவு இன்றுவரை நடைமுறையில் இருந்தாலும் சாமானிய மக்களில் தமிழ்வழி வழிபடும் பக்தர்கள் நிலை ஜனநாயக நாட்டில் சமத்துவம் இல்லை என்பதே மன்னர் ஆட்சிகள் மாறிப்போனாலும்  என்னைப் பொறுத்தவரை சிற்றம்பல தரிசனங்களின் போது எனக்கு தீக்க்ஷிதர்களின் பேரில் எந்தக் கண்டனங்களுமில்லை.

நாம் கண்ணில் கண்ட சிறுவயது காட்சி இன்றும் மனதில் பதிந்தது 




பட்டமங்கலம்  தெட்ஷ்ணாமூர்த்தி குரு பகவான் நடத்திய திருவிளையாடல் புரானத்தின் ஒரு படலம் அருளிய பூமி படித்துக் கொண்டிருந்த காலம் 1980 களில் கோவிலிலுள்ள குருக்கள், நல்ல வசதியுள்ளவர்கள் மற்றும் பிராமணர்கள் வரும் போது விழுந்து விழுந்து சேவை சாதிப்பார். என்னிடம் மட்டும் பழக்கப்பட்டதால் அவர் சிரித்துப் பேசியதும் உண்டு அந்தச் சிறு வயதில் எனக்கு அவ்வளவு ஆத்திரமாக வரும் அவரின் பேரில், ஏன் இந்த பேதம் காட்டப் படுகிறதென்று. ஆனால் ஞான மார்கத்தில்  நுழைந்த பின் எனது இந்த ஆத்திரமெல்லாம் சிரிப்பாக மாறிக் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டேன்.





என்ன செய்வது? இந்த கலிகாலத்தில் பணத்தின் தேவை அனைவருக்கும் உண்டு. அதில் அந்தண தில்லை தீக்க்ஷிதர்களும் விதிவிலக்கல்ல.



புரிந்து கொண்டு கடந்து செல்லுவோம். நமது நோக்கம் செயல் எல்லாம் ஆடல்வல்லானின் பரிபூரண அருளைப் பெறுவது மாத்திரம்தான்.  ஆனால் தீட்சிதர்களின் பொருள் பறிபோகும் கவலை அவர்களுக்கு சிதம்பரம் நடராஜர் கோவிலை புனரமைத்த விஜயநகர நாயக்கர் பேரரசர்களின் வழித்தோன்றல்கள் என்ற வகையில், தீட்சிதர்களின் சொத்தாக பாரம்பரியமாக அடையாளப்படுத்தப்படும் நடராஜர் கோவிலின் நிர்வாகத்தில் தமிழக அரசு தலையிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்: விஜயநகர உஜ்ஜீவானா அறக்கட்டளை விண்ணப்பித்த நிலையில் நமது கருத்தாக இங்கு ஒரு பொதுநீதி தீட்சிதர்கள் நிர்வாகத்திலிருந்து அறநிலையத்துறை நிர்வாகத்தில் வந்தால் மட்டும் ஊழல் குறைந்துவிடுமா இல்லை அதிகரிக்கவே செய்யும் வாகனம் நுழைவுக் கட்டணம் ,வாகன நிறுத்தக் கட்டணம், மொட்டை அடிக்க கட்டணம் , குளிக்க,மற்றும் தீர்த்தக் கட்டணம் , செருப்பு விடுவது கட்டணம் ,தேங்காய் உடைக்கக் கட்டணம், காது குத்த கட்டணம் ,நெய் தீபம் ஏற்ற கட்டணம்,அர்ச்சனை செய்யக் கட்டணம் ,அபிஷேகம் செய்ய கட்டணம் காவடி எடுக்க கட்டணம், தங்கத் தேர் இழுக்க கட்டணம் ,இது போக கடை வாடகை ஒரு அடி நிலம் கூட அறநிலையத்துறை வாங்காமல் நில வாடகை, குத்தகை வருமானம் ,பிரசாத விற்பனை, பஞ்சாமிர்தம் விற்பனை, அன்னதான நன்கொடை, அபிஷேக நன்கொடை, கும்பாபிஷேகம் நன்கொடை கட்டளை பூஜை நன்கொடை, உண்டியல் வருமானம், இவ்வளவு வருவாய் இருந்தும்.

சாமி கும்பிட 10. 20. 50.100. 250. 500. ருபாய்  சிறப்பு கட்டணம். கடவுளைக் கும்பிட காசு கேட்பது நியாயமா?

கடவுள் முன்பு அனைவரும் சமம். இது ஒருபுறம் இருக்கட்டும் அறநிலையத்துறை வருவாய் பார்க்கும் துறையாக இருக்க ஆரம்ப காலம் அதன் பணியாளர்களான அந்தனர்கள் தான், சில தேவஸ்தான ஆலயங்களில் இவர்கள் வளர்த்துவந்த பிரச்சனைகள் காரணமாக தனியார் புனரமைத்த பல தேவஸ்தான ஆலயங்கள் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்று இன்று நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்து போனதைக் காணலாம் . அறநிலையத்துறை கோவிலுக்கு என கைமுதல் போடாது அந்தண தீட்சிதர்களும் ஒரு பைசா செலவிட மாட்டார்கள் அது முழுவதும் அரசர்கள் மற்றும் செக்வந்தர்கள் தந்த நிதி ஆகவே இப்போதய சண்டை அறநிலையத் துறைக்கும் தீட்சிதர்களுக்கும் தான் சிவ பக்தர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கும் நிலை தான் காணலாம்  ஆகவே சமூக நீதி சமநீதி வேண்டும் என்ற நமது கொள்கை படி இங்கு பொதுநீதி சமயக்குறவோர் நால்வரில் 

அருள்நிறை திருநாவுக்கரசர் எனும் அப்பர் பெருமான் சொல்வதைப் போல்:

"சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்!

கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர்?

பாத்திரம் சிவம் என்று பணிதிரேல்!

மாத்திரைக்குள் அருளும் மாற்பேரரே! ''

திருச்சிற்றம்பலம். இதுவே இங்கு பொதுநீதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...