முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வாழ்வாதாரம் காக்கப் போராடும் வந்தாரங்குடி

வாழ்வாதாரம் காக்கப் போராடும் வந்தாரங்குடி. !


ஏழை, எளிய விவசாயிகளின் விலை





நிலங்களைக் கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தின் அராஜகப் போக்கை கண்டித்தும், என்எல்சி நிர்வாகம் வெளியேற வேண்டுமென்று வலியுறுத்தியும், பாமக சார்பில் நெய்வேலியில் நடைபெற்ற மாபெரும் முற்றுகை போராட்டத்தின் போது காவல் துறையினரால் பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டுப் பின்னர் 

தொண்டர்களுடன் விடுதலை செய்யப்பட்டார் அதற்குள் அதில் ஒரு மக்கள் எழுட்சியும், தன்னுரிமையும் வெளிப்பட்டது, நெய்வேலிக்கு பறந்து வருகிரார் பாமக தலைவர் மருத்துவர்  அன்புமணி ராமதாஸ் என்றானதும்  தயாராக 3 காவல்துறைக் கண்காணிப்பாளர்ககள்  5 ஏ எஸ் பி க்கள், 17 துணை கண்காணிப்பாளர்கள் - கடலூரே மாவட்டமே உச்சகட்ட பதற்றத்தில்..!  இருந்ததை நாம் நேரில் கண்டுணர்ந்தோம் .  என்எல்சிக்கு எதிராக 1988 ஆம் ஆண்டில் மிகப்பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து

மக்களுக்கான அதிகாரத்தை மக்களே பெற வேண்டுமென மக்களைச் சந்தித்து..வந்த பாமக சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினராக மூன்று முறை வெற்றி பெற்றது விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினராக ஒரு முறை வெற்றி., நடிகர் விஜயகாந்த் இருமுறை வென்றாலும் அவர் கட்சி போராட வில்லை அது சினிமா ரசிகர் கூட்டம் மக்கள் மீது அக்கரை வராது என்பது உண்மையே.  ஆனால் பாமகவில் 

நேரடியாக நிலக்கரிச் சுரங்கத் துறை அமைச்சர்.ஒரு முறை இருந்தார்.

என்எல்சியில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திலும் பாமக வெற்றி பெற்றது.

இப்படி எத்தனை முறை உங்களை நம்பி அதிகாரத்தைக் கொடுத்த மக்கள்..,

ஆனாலும் இன்றுவரை நிலைமை நிலம் கொடுத்தவர்களுக்கான போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.      அது நஞ்சை விளை நிலம்.



ஏதோ வெளிநாட்டு சட்டமன்ற உறுப்பினரைப் போல சட்டமன்ற உறுப்பினர்  வேல்முருகனின்  .இந்தப் பார்வை முக்கியமானது.

முதல்வராக இருந்த காலம் சென்ற செல்வி ஜெ. ஜெயலலிதா 5 விழுக்காடு பங்குகளை தமிழ்நாடு அரசு சார்பில் வாங்கி வைத்துள்ளார் என்பது இங்கு  கவனத்திற்குரியது.'என் எல் சி க்கு

நிலம் கொடுத்து விட்டு பணமும் பெற்றுக் கொண்டு நிலத்தைக் கொடுக்க மறுக்கிறார்கள்' 







என கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் இன்னும் சில அறைகுறை அறிவு ஜீவிகளும் பேசுகிறார்கள்.பணத்தாசை காட்டியும் வேலைவாய்ப்பு வழங்குவதாக பொய் வாக்குறுதிகள் வழங்கியும், அதற்கும் பணியாதவர்களை

அரசியல்,அதிகாரம், அடியாள் பலம் கொண்டு பணியவைத்தும் 

நிலங்கள் கையகப்படுத்துதல் என பிடுங்கப்பட்டன.

பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை வேறு...தற்போதைய நிலைமை வேறு...

பொதுத்துறை நிறுவனமாக இருந்த நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்( NLC)

தற்போது NLC India என மாற்றப் பட்டு அதன் பங்குகள் தனியாருக்கு விற்கும் முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன...

நாளை அவை அம்பானி ,அதானி உள்ளிடட யார் கைகளுக்கு மாறினாலும் மாறலாம்.

கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமே மண்ணின் மக்களுக்கு NLC யில்  வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன...

பிறகு தமிழ்நாடு அளவில் மாறி இன்று 'தமிழர்களுக்கு NLC யில் வேலையே இல்லை' என்ற நிலை உருவாக்கப்பட்டு விட்டது. தமிழர்கள் ஏதோ வளர்ச்சிக்கு எதிரானவர்கள் போன்றும்

நீங்களெல்லாம் மின்சாரம் பயன்படுத்தவில்லையா என்றும் சில ' அரை வேக்காடுகள் ' கேள்விகேட்கின்றனர். NLC தொடங்குவதற்கு தனது 

620 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியவர் ஜம்புலிங்க முதலியார்.

அதே போல் அந்தப் பகுதி மக்கள் ஆயிரக் கணக்கணக்கானோர் தமது வாழ்வாதரமான நிலங்களை

இழந்ததால் அவர்களின் வாரிசுகள் இன்று NLC குடியிருயிருப்பு தோட்டங்களில் மரமேறிகளாகவும், தினக் கூலிகளாகவும் ஐந்துக்கும்  பத்துக்கும் அல்லாடுகிறார்கள்.. ஆண்டொன்றுக்கு லட்சம் கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் 

NLC நிறுவனம்

அதற்காக நிலம். கொடுத்தவர்களுகளுக்கு வேலை வாய்ப்பு  வழங்கக் கூட மறுக்கிறது...

பல ஆண்டுகளாய் நீடிக்கும் உள்ளூர் ஒப்பந்தத் தொழிலாளர்களை 







பணி நிரந்தரம் செய்ய மறுக்கிறது...இது ஏதோ நிலம் கொடுத்தவர்களின்  தனிப்பட்ட சிக்கல் மட்டுமல்ல

இது கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர் சிக்கல்.

பெரும் துயர்களை ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் சிக்கல்.

தமிழ்நாட்டின் 'இறையாண்மை' சிக்கல்.

வருங்காலங்களில்  நில நடுக்கம், நிலச் சரிவு உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்கள் உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தும் தமிழர்களின தாயகத்தை பறிகொடுக்கும் ஆபத்து.

'வாடிய பயிரைக் கண்ட பீதெல்லாம்  வாடிய வள்ளலார் ராமலிங்க அடிகள் மண்ணில்'

விளைந்த பயிரை நாசப்படுத்தும் தடித்தனம் பலரால் கண்டனங்களுக்குறியதாகிய நிலை காண்கிறோம்  ஜாதி, மதம், கட்சி, ,

பேதங்கள் கடந்து பதவி, பணம், புகழ்,தன்னலம் இவைகளுக்கு ஆட்படாமல் களமாட வேண்டிய காலமிது.“காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளில் இருந்து உலகைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ஜி 20, ஐ.நா. காலநிலை மாநாட்டில் வலியுறுத்த வேண்டும்!” - என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்

எழுதியுள்ளதில்

காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வரும் புவிவெப்பநிலை உள்ளிட்ட தீய விளைவுகளில் இருந்து  தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதையும் காக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளை ஜி 20, ஐ.நா. காலநிலை மாநாடு 28 ஆகியவற்றில் இறுதி செய்ய வலியுறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக தமிழக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், புகழ்பெற்ற மனிதர்கள் ஆகியோருக்கும்  அவர் எழுதிய கடிதத்தின் விவரம்:

"மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்!

பொருள்:  புவி வெப்பநிலை உயர்வால் ஏற்படக்கூடிய பேரழிவில் இருந்து உலகைக் காப்பதற்கான நடவடிக்கைகளை ஜி 20, ஐ.நா. காலநிலை மாநாடு 28 ஆகியவற்றில் இறுதி செய்யக் கோருதல் - தொடர்பாக










உலகின் அனைத்து மக்களையும், எதிர்வரும் பலப்பல தலைமுறையினரையும் பாதிக்கக் கூடிய உலகின் தலையாய சிக்கலான காலநிலை மாற்றத்தினை கட்டுப்படுத்தவும் எதிர்கொள்ள உங்களின் ஆதரவைக் கோரி இக்கடிதத்தை எழுதுகிறேன்.

உலக மக்கள் அனைவரும் மாபெரும் பேராபத்தில் சிக்கியுள்ளனர். புவிவெப்பம் அதிகரிப்பதால் ஒட்டுமொத்த மனித குலமும் அழிவின் விளிம்பில் நிற்கிறது! காலநிலை மாற்றம்தான் இன்றைய மற்றும் எதிர்கால தலைமுறையினர் முன்புள்ள மாபெரும் சவால் ஆகும். அதுமட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் கடைசி வாய்ப்பு இன்றைய தலைமுறையினருக்கு மட்டுமே உள்ளது. இப்போதுள்ள குழந்தைகளுக்கோ, அவர்களின் குழந்தைகளுக்கோ அந்த வாய்ப்பு இல்லை. உலகைக் காப்பதற்கான இந்தக் கடைசி வாய்ப்பை நாம் தவறவிடக் கூடாது.  

நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருட்களை (Fossil fuels) பயன்படுத்துவதாலும், காடுகளை அழிப்பதாலும் கரியமிலவாயு உள்ளிட்ட வெப்பத்தை தக்கவைக்கும் பசுங்குடில் வாயுக்களின் (Greenhouse gases) வளிமண்டல அடர்த்தி வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் இது 277 ppm அளவில் இருந்து 421 ppm ஆக அதிகரித்து விட்டது! (1 ppm என்பது பத்து லட்சத்தில் 1 பகுதி). இதனால், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 150 ஆண்டுகளில் 1.2 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய பேராபத்து ஆகும்.

காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அளவுக்கதிக மழை, பெரும் வெள்ளம், கடும் சூறாவளி, வரலாறு காணாத வறட்சி, விவசாய பாதிப்பு, நீர் பற்றாக்குறை, உடல்நலக் கேடுகள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகின்றன. இயற்கை பேரிடர்கள் இனிவரும் ஆண்டுகளில் இன்னும் அதிகமாகும்.

அண்மையில் நிகழ்ந்த புதுதில்லி வெள்ளம், வடமாநில பெருமழை பாதிப்புகள், ஐரோப்பிய நாடுகள் மற்றும் வட அமெரிக்க காட்டுத்தீ, வரலாறு காணாத வெப்ப அதிகரிப்பு உள்ளிட்ட அனைத்து பேரிடர்களுக்கும் காலநிலை மாற்றமே முதன்மையான காரணமாகும்.

அதிகரித்துக் கொண்டே செல்லும் வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் உலக அழிவை தடுப்பதற்கான அதிகபட்ச அளவாகும். அதற்கு இன்னும் 7 ஆண்டுகள் மட்டுமே கால அவகாசம் உள்ளது.

புவிவெப்ப அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்துவதற்கு உலகளவில் வெளியாகும் கரிம உமிழ்வை 2030-க்குள் 50% குறைக்க வேண்டும். 2050-க்குள் நிகர பூஜ்யம் (Net Zero) ஆக்க வேண்டும். அதற்காக;

· நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள் (fossil fuels) பயன்பாட்டிற்கு மிக விரைவில் முடிவுகட்ட வேண்டும்.

· காடுகளும், பசுமைப்பகுதிகளும், இயற்கை வளங்களும் உடனடியாக பாதுகாக்கப்பட்டு, அவற்றின் பரப்பு அதிகமாக்கப்பட வேண்டும்.

· காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாமல் பாதுகாத்துக்கொள்ள தகவமைப்பு (Adaptation) நடவடிக்கைகளை போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும். அதையும் மீறி பாதிக்கப்படுவோரின் இழப்பையும் சேதத்தையும் (Loss and Damage) ஈடு செய்ய வேண்டும்.

· காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் அதிகம் பாதிக்கப்படப்போகும் வளரும் நாடுகளின் நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை புவிவெப்பம் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த வளர்ந்த நாடுகள் அளிக்க வேண்டும்.

மேற்கண்ட இலக்குகளை உள்ளடக்கிய பாரிஸ் காலநிலை உடன்படிக்கை (Paris Climate Agreement) 2015 ஆம் ஆண்டில் ஏற்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட 195 நாடுகள் கையொப்பம் இட்டுள்ளன. ஆனால், எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில் எதிர்பார்க்கப்பட்ட முன்னேற்றம் இல்லை. இவ்வாறான சூழலில், அடுத்த ஏழாண்டுகளில் தலைகீழ் மாற்றத்தை சாதித்தால் மட்டுமே உலகப் பேரழிவை தடுத்து சமாளிக்க முடியும் என்று ஐநா காலநிலை மாற்ற அறிவியலாளர்கள் அமைப்பு IPCC தெளிவாக எச்சரித்துள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலில், இந்தியாவில் G20 நாடுகள் மாநாடும், ஐக்கிய அரபு அமீரகத்தில் COP 28 ஐநா காலநிலை மாநாடும் கூடுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான முடிவுகளை மேற்கொள்வதில் இந்த மாநாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

G20 நாடுகள் மாநாடு: உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கு வகிப்பவை G20 நாடுகள் ஆகும். உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80%, பன்னாட்டு வர்த்தகத்தில் 75%, உலக மக்கள் தொகையில் 60% G20 நாடுகளின் பங்காகும். புவிவெப்ப அதிகரிப்புக்கு காரணமான கரிம உமிழ்வில் 80% அளவு இந்த 20 நாடுகளில் இருந்துதான் வெளிவிடப்படுகின்றன. G20 நாடுகள் கூட்டமைப்புக்கு 2023ஆம் ஆண்டில் இந்தியா தலைமை ஏற்றுள்ளது. இந்த மாநாடு செப்டம்பர் மாதம் 9 - 10 ஆகிய நாட்களில் புதுதில்லியில் நடைபெறுகிறது.

COP 28 - ஐநா காலநிலை மாநாடு: புவிவெப்பம் அதிகரிப்பதை உலகின் எந்தவொரு நாடும் தனித்து தடுக்க முடியாது. உலகின் எல்லா நாடுகளும் ஓரணியில் திரளவேண்டும் என்கிற நோக்கில் 1992 ரியோ புவி உச்சிமாநாட்டில் (Rio de Janeiro Earth Summit 1992) ஐநா காலநிலை மாற்ற பணித்திட்டப் பேரவை (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) உருவாக்கப்பட்டது. இதன் ஆண்டு மாநாடுகள் (Conference of the Parties - COP) ஐநா அவையால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகின்றன.  இதன் 28ஆவது மாநாடு (COP 28) 2023 நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் நடைபெற உள்ளது.

காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தவும், எதிர்கொள்ளவுமான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் G20 மற்றும் COP 28 மாநாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

“பசுமைத் தாயகம் காலநிலை பிரச்சாரம்”

ஐக்கிய நாடுகளின் காலநிலை அமைப்பால் அதிகாரப்பூர்வ பங்கேற்பாளராக (UNFCCC Observer Organization) மருத்துவர் அய்யா அவர்களால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் அவையிலும் சிறப்பு ஆலோசனை அமைப்பாக (NGO in Special Consultative Status with the United Nations ECOSOC) பசுமைத் தாயகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஜி 20 மற்றும் COP 28 மாநாடுகளில் பின்வரும் கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் முன்வைக்கிறோம்.· அனைத்து புதைபடிம எரிபொருட்களையும் படிப்படியாக கைவிட வேண்டும் (Phase-out All Fossil Fuels)

· நீதியான ஆற்றல் மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும் (Ensure a Just Energy Transition)

· காலநிலை நீதியை உறுதி செய்ய வேண்டும் (Ensure Climate Justice)

· காலநிலை கூட்டுச்செயல்பாட்டு ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும்  (Make a Climate Solidarity Pact)

இதனை முன்வைத்து பசுமைத் தாயகம் அமைப்பு 10 லட்சம் கையெழுத்துகளை திரட்டும் பரப்புரையை மேற்கொண்டுள்ளது.

“நீங்கள் என்ன செய்ய வேண்டும்?”

காலைநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு முக்கியமானது. மக்கள் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், உலகின் இருபதாவது பெரிய நாடாக அடையாளம் காணப்படும் தகுதிவாய்ந்தது தமிழ்நாடு. பிரான்ஸ், இங்கிலாந்து, தாய்லாந்து, இத்தாலி, தென்கொரியா, ஸ்பெயின், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட பலநாடுகளின் மக்கள் தொகை அளவை விட, தமிழ்நாட்டின் மக்கள் தொகை அதிகம்.

எதிர்கால புவிவெப்பமடைதலுக்கு காரணமாகக்கூடிய வளர்ச்சித் திட்டங்கள் இனி வளரும் நாடுகளிலேயே அதிகம் நடக்க வாய்ப்புள்ளதால், தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிப் போக்கு காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் உலகளவிய இலக்குகள் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அதைவிட முக்கியமாக, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக தமிழ்நாடு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததும் கவலைக்குரியதும் ஆகும்.




எனவே, தமிழ்நாடு அளவிலும், இந்திய அளவிலும், உலக அளவிலும் காலநிலை மாற்றம் தொடர்பான அறிவியல்பூர்வமான தீர்வுகளை போர்க்கால வேகத்தில் செயல்படுத்துவதற்கு நீங்கள் குரல்கொடுக்க வேண்டும். மேலும், புவிவெப்பமயமாதலுக்கு காரணமான கரிம உமிழ்வை குறைக்கவும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ளவும் தேவைப்படும் நடவடிக்கைகளை, உங்கள் அளவிலும், உங்கள் குடும்பத்தினர் அளவிலும், உங்களது பதவி அல்லது பணி சார்ந்தும், உங்களது நிறுவனம் அல்லது அமைப்பு சார்ந்தும், நீங்கள் வசிக்கும் பகுதி சார்ந்தும் மேற்கொள்ள நீங்கள் முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.

"ஒரு காட்டில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. அனைத்து மிருகங்களும், பறவைகளும் காட்டை விட்டு வெளியேறி விட்டன. ஒரேயொரு சிட்டுக்குருவி மட்டும் அருகில் இருந்த ஓடையில், தன் அலகால் நீரெடுத்து வந்து காட்டுத்தீயின் மீது ஊற்றியது. அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மற்ற உயிரினங்கள், அந்தக் காட்டுத்தீயின் முன் நீ சிறியவள். உன்னால் ஏதும் செய்ய முடியாது என்றன. அந்தச் சிட்டுக்குருவி அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து நீரெடுத்து வந்து ஊற்றியது. பின் அனைத்து விலங்குகளும், பறவைகளும் அந்தச் சிட்டை முட்டாள் என்று கேலி செய்ய ஆரம்பித்துவிட்டன. அதற்கு அந்தச் சிட்டு, 'நம் வாழ்விடத்தைச் சரி செய்ய அதிகபட்சமாக என்னால் முடிந்த ஒன்றை நான் செய்கிறேன்' என்று கூறிவிட்டு தன் பணியைத் தொடர்ந்தது. நாமும் அது போன்ற ஒரு சிட்டுக்குருவி தான்" - என்றார் நோபல் பரிசுபெற்ற கென்யா நாட்டு சுற்றுச்சூழல் போராளி வங்காரி மாத்தாய்

தனிப்பட்ட முறையிலும், மற்றவர்களுடன் இணைந்தும் நாம் ஒவ்வொருவரும் காலநிலை மாற்றத்தை தடுக்கவும் எதிர்கொள்ளவும் நம்மால் ஆன அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். அதற்கான சில வழிமுறைகளை கீழே அளித்துள்ளேன்:

1. G20 மற்றும் COP28 மாநாடுகளில் உறுதியான நடவடிக்கைகளை கோருங்கள். இதனை வலியுறுத்தும் பசுமைத் தாயகத்தின் ‘G20 & COP28: காலநிலை நடவடிக்கை கோரி பத்துலட்சம் கையெழுத்து இயக்கம் (One Million Signatures CAMPAIGN for CLIMATE ACTION) பிரச்சாரத்துக்கு உங்களது ஆதரவை அளியுங்கள்.

2. காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வை பரவலாக்குங்கள்.

3. நீங்கள் சார்ந்த நிறுவனம் அல்லது அமைப்பில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடத்த பசுமைத் தாயகம் அமைப்பினரை அழையுங்கள்

4. நீங்கள் சார்ந்த நிறுவனம் அல்லது அமைப்பின் சார்பில் காலநிலை செயல்திட்டம் (Climate Action Plan) ஒன்றினை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்த முன்வாருங்கள் (அத்தகைய காலநிலை செயல்திட்டத்தை உருவாக்க பசுமைத் தாயகம் அமைப்பை அணுகுங்கள்)

5. நீங்கள் வசிக்கும் கிராமம், வார்டு, நகருக்கான காலநிலை செயல்திட்டம் (Local Climate Action Plan) ஒன்றினை உருவாக்கி படிப்படியாக செயல்படுத்த அழுத்தம் கொடுங்கள் (அத்தகைய உள்ளூர் காலநிலை செயல்திட்டத்தை உருவாக்க பசுமைத் தாயகம் அமைப்பை அணுகுங்கள்)

6. தனிப்பட்ட முறையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கு படிப்படியாக மாற முயலுங்கள். நீங்கள் வசிக்கும் பகுதியில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க முன்வாருங்கள். உங்களது பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகளின் பிறந்த நாளில் மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

7. காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான பசுமைத் தாயகம் அமைப்பின் பிரச்சாரத்தில் சேருங்கள்.  

மேற்கண்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் உங்களை இணைத்துக்கொள்ள வலியுறுத்துகிறேன்.

அன்புடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எனக் குறிப்பிட்டிருந்தார்.    நெய்வேலியில் இருபது ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சுவாதீனம் செய்யாமல் இருந்துவிட்டு, தற்போது பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்களுக்கு காத்திருக்க முடியாதா?” என்று என்எல்சி நிர்வாகத்திடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், என்எல்சி நிர்வாகம் அவசர வழக்கு ஒன்றை தாக்கல் செய்ததில். என்எல்சி நிர்வாகத்துக்கும், அங்குள்ள தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பிரச்சினைகளின் காரணமாக, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டுமென்று என்எல்சி நிர்வாகம் கோரியிருந்த அவசர வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு  இன்று விசாரணைக்கு வந்த போது காவல் துறை சார்பில், நெய்வேலியில் இன்று பாமக சார்பில் நடந்த போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது எனக் கூறி, அது தொடர்பான காணொளி ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி, என்எல்சி நிர்வாகத்துக்கும், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மாவட்ட ஆட்சித் தலைவரும், காவல் துறைக் கண்காணிப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். பின்னர், என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் ஜேசிபி இயந்திரங்களைக் கொண்டு அகற்றியது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பிய போது என்எல்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலத்தின் மதிப்பைவிட மூன்று மடங்கு அதிகமாகவே இழப்பீடுகள் வழங்கியுள்ளோம். 20 ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட அந்த நிலங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலத்தை சுவாதீனம் எடுத்துக்கொள்ள நிலத்தின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்" எனத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி

 

மேலும், “பயிரிடப்பட்டுள்ள நிலங்களில் புல்டோசரைக் கொண்டு கால்வாய் தோண்டும் பணிகளைப் பார்க்கும்போது எனக்கு அழுகை வந்துவிட்டது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகில் பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை. நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் கூறினாலும், பயிர்களை அழிக்கப்படுவதை ஏற்க முடியாது. ஒரு பயிர் என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அந்த பயிர்தான் மனிதன் உள்ளிட்ட அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வாதாரமாக இருக்கக் கூடியது. நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப் பெரிய பஞ்சத்தை சந்திக்கப் போகிறோம் அரிசிக்கும், காய்கறிக்கும் அடித்துக் கொள்ளும் காட்சிகளை நம் தலைமைுறையிலேயே நாம் காணப் போகிறோம். அப்படி ஒரு நிலை வரப்போகிறது. அப்போது இந்த நிலக்கரி எல்லாம் பயன்படாது. இந்தக் கருத்துகளுக்காக என்எல்சி நிர்வாகம் கோபித்துக் கொண்டாலும் பரவாயில்லை.

 அணைக்கரை, கொள்ளிடம் பாய்ந்தோடும் நெய்வேலியின் அழகை மறக்க முடியாது. ஆனால், இந்த இடங்கள் எல்லாம் தற்போது பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பஞ்சத்தின் ஆபத்தை உணராமல் தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். சோறுடைத்த சோழநாடு என்ற பெருமையை இதுபோன்ற நிறுவனங்களால் இந்தப் பகுதிகள் அதன் பெருமையை இழந்துவிட்டன.

மேலும், பூமியைத் தோண்டித் தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது? மூன்று மடங்கு அல்ல, எத்தனை மடங்கு இழப்பீடு வழங்கினாலும் கூட அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு விவசாயி என்ன செய்ய முடியும்? மக்கள் பாதிக்கப்படுவதை அரசு அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளனர்” என்றார்.

இந்த விசாரணையின்போது குறுக்கிட்ட என்எல்சி தரப்பு வழக்கறிஞர், இந்த நீதிமன்ற அறையில் எரியும் மின் விளக்குகள், குளிர் சாதன வசதிக்கான மின்சாரம் கூட நிலக்கரியில் இருந்து தயாரிக்கப்பட்டதுதான் என்று தெரிவித்தார். இதையடுத்து, தனது அறையில் உள்ள குளிர் சாதன வசதியை நிறுத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார். பூமியில் உள்ள அனைவரும் ஏசி காற்றில் வாழ்வது இல்லை. புங்கை மரத்தின் காற்றிலும், வேப்ப மரத்தின் காற்றிலும் இளைப்பாறும் ஏராளமானவர்கள் உள்ளனர். அதிகாரிகள் இதனை உணர வேண்டும் என்று நீதிபதி தனது வேதனையையும், அதிருப்தியையும் தெரிவித்தார்.இச் சூழ்நிலையில் நெய்வேலியில் நிலைமை தற்போது கட்டுக்குள் வந்துள்ளது" - என டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுளனர்: டிஜிபி சங்கர் ஜிவால்

என்எல்சியை முற்றுகையிட்டு பாமக போராட்டம் நடத்திய நிலையில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அங்கு கலவரம் ஏற்பட்டது. பாமகவினர் கற்களை எறிந்து தாக்கியதைத் தொடர்ந்து, காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாமகவினர் கல் வீசி தாக்கியதலில் காவல்துறையில்  சிலரும் லேசான காயம் அடைந்தனர். தற்போது போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிகழ்விடத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் காவல்  பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது பாமக நடத்திய போராட்டத்தில் கலவரம் வெடித்த நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால், நெய்வேலி செல்ல உள்ளார். போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால் கூறியிருப்பதாவது: சுமார் 25 நிமிடம் நடைபெற்ற போராட்டம் முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. 3000- க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கலவரம் தொடர்பாக 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவலர்கள், காவல்துறை வாகனங்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த