முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வில்லியனூரில் புதிய மருத்துவமனையின் துவக்க விழாவில் குடியரசுத்தலைவர் உரை

புதுச்சேரியில் நடைபெற்ற வரவேற்பு மற்றும் ஜிப்மரில் புதிய மேம்பட்ட நேரியல் முடுக்கி கருவி,


வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையின் துவக்க விழாவில் மாண்புமிகு குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவின் உரை

குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக புதுச்சேரிக்கு வருகை தருவதில் மிகுந்த ஆவலோடு இருந்தேன். இங்கு வந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். புதுச்சேரி மக்கள் எனக்கு அளித்த வரவேற்பை நான் போற்றுவேன்.

என்னைப் பொறுத்தவரை, எனது முதல் வருகை, ஸ்ரீ அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் இணைந்திருப்பது, மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். வந்தே மாதரம் பத்திரிகையில் நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்திய இந்தியாவின் முதல் அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர். அன்னாரது தெய்வீக ஆன்மாவை வணங்கி தலைவணங்குகிறேன்.



தாய்மார்களே, அன்பர்களே,

வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக புதுச்சேரி வெவ்வேறு மக்களை ஈர்த்துள்ளது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நிறுவினர். இந்தியாவில் உள்ள பிரெஞ்சு பிரதேசங்களின் கவர்னர் ஜெனரலாக இருந்த டூப்ளே, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களின் முக்கிய கோட்டையாக மாற்ற விரும்பினார். பிரெஞ்சுக்காரர்களின் காலனித்துவ லட்சியங்களுக்கு முற்றிலும் மாறாக, மகரிஷி அரவிந்தர் 20 ஆம் நூற்றாண்டில் ஆன்மீக மனநிறைவுக்கான சிறந்த இருப்பிடமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும் வழிபாட்டுத் தலங்களைக் காணலாம். இன்று அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலிலும், திருக்காஞ்சி கோயிலிலும் சக குடிமக்களுக்காக இறைவனிடம் ஆசி பெறப் போகிறேன்.

புதுச்சேரியின் ஆன்மீக அம்சம், யோகாவை ஊக்குவிக்கும் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும். சர்வதேச யோகா திருவிழாவைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய கூட்டத்தை இது காண்கிறது.

தாய்மார்களே, அன்பர்களே,

பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியில் வாழ்ந்தாலும், புதுச்சேரி வாசிகள் சுதந்திரப் போராட்டத்தில்  சம அளவில் தீவிரமாக இருந்தனர். சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாயகமாக புதுச்சேரி திகழ்கிறது. கவிஞர் பாரதிதாசன் இங்குதான் பிறந்தார். இந்த புண்ணிய பூமி ஒரு காலத்தில் மகா கவிஞரும், தேசியவாதியும், சமூக சீர்திருத்தவாதியுமான மகாகவி சுப்பிரமணிய பாரதியின் இருப்பிடமாக இருந்தது. புதுச்சேரியில் தனது தேசியவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். பிரபல தமிழறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வ.வே.சு.அய்யர் பாரதியாரின் சமகாலத்தவராவார்.


தாய்மார்களே, அன்பர்களே,

புதுச்சேரியின் அரசியல் மற்றும் சமூக புவியியல் அசாதாரணமானது. இந்த யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகியவை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. மாஹே, அரபிக் கடலில் அமைந்துள்ளது. மேலும், யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவின் பகுதிகளுக்குள் அமைந்துள்ளன்

தாய்மார்களே, அன்பர்களே,

இங்கு புதுச்சேரியில், பல்வேறு கலாச்சாரங்களின் கலவையை நாம் காண்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நெறிமுறைகளைக் கொண்டாடும் துடிப்பான கலாச்சாரப் பாரம்பரியத்தை நீங்கள் முன்னெடுத்துள்ளீர்கள். தமிழ், தெலுங்கு, மலையாள சாயல்கள் தென்படுகின்றன. பிரெஞ்சுக்காரர்களின் தாக்கமும் அப்படித்தான். கட்டிடக்கலை, திருவிழாக்கள் மற்றும் வாழ்க்கைமுறைகள், நல்லிணக்கத்துடன் ஒன்றிணையும் பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கின்றன. புதுச்சேரியின் துடிப்பான கலாச்சாரம், தமிழ்நாட்டில் நிலவும் இசை மற்றும் நடன வடிவங்களிலிருந்து அதிக ஆற்றலைப் பெறுகிறது. பிரெஞ்சு பாரம்பரியமான முகமூடி திருவிழாவில் மகிழ்ச்சி உணர்வு வெளிப்படுகிறது. உண்மையில், புதுச்சேரி, பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவின் பாலமாகும்.

அளவில் சிறியதாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசம், மிகவும் அழகானது. "சிறியதுதான் அழகானது" என்ற சொற்றொடரை இது நிரூபிக்கிறது.

தாய்மார்களே, அன்பர்களே,

ஒரு புகழ்பெற்ற சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக முன்னேற்ற குறியீட்டு மதிப்பெண் 2022 இல் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.

தனிநபர் சுதந்திரம் மற்றும் தேர்வு,

தங்குமிடம்

குடிநீர் மற்றும் சுகாதாரம்

ஆகிய  அளவுருக்களில் இது மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது:

நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற பகுதியாக புதுச்சேரி திகழ்வது பாராட்டுக்குரியது. இங்கு பாலின விகிதம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. புதுச்சேரி மக்கள் பாலின சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை இந்த உண்மைகள் நிரூபிக்கின்றன. இவை உண்மையான முற்போக்கு மனநிலையின் குறிகாட்டிகளாகும். புதுச்சேரி மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நவீன மற்றும் உணர்திறன் அணுகுமுறைக்காக நான் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

குறிப்பாக புதுச்சேரியில் உயர்கல்வி சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். இங்கு சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் உயர்கல்விக்காக இங்கு வந்து செல்கின்றனர்.

தாய்மார்களே, அன்பர்களே,

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஜிப்மர்)  இந்த அரங்கில் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தக் கலையரங்கம் எனது மிகச்சிறந்த முன்னோடிகளில் ஒருவரான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவரது பல பங்களிப்புகளுள், பாதுகாப்பு ஆராய்ச்சியை மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும்  முயற்சிகளை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு  சற்று முன்பு, சர்வதேச புகழ் பெற்ற இந்த நிறுவனத்தில் ஒரு புதிய மேம்பட்ட நேரியல் முடுக்கி கருவியை  நான் திறந்து வைத்தேன். புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க  சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த உபகரணம் கதிர்வீச்சை துல்லியமாக குறிவைப்பதன் மூலம் கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைக்கும். இந்த இயந்திரம், நோய் தீர்க்கும் கதிர்வீச்சு சிகிச்சையை வழங்குவதற்கான நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது மலிவான மேம்பட்ட மருத்துவ சேவையை அதிகரிக்கும்.

தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் வில்லியனூரில் மருத்துவமனையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மருத்துவமனை மலிவான மருத்துவ சேவையையும் வழங்கும். இந்த மருத்துவமனை பல்வேறு மாற்று மருத்துவ முறைகளின் கீழ் மருத்துவ சேவைகளை வழங்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த மருத்துவமனை முழுமையான ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

தாய்மார்களே, அன்பர்களே,

ஆன்மீகச் சுற்றுலா என்று வர்ணிக்கப்படக்கூடிய ஒரு அற்புதமான இடமாக புதுச்சேரி திகழ்கிறது. ஆன்மீகச் சுற்றுலா,  உலகளவில் வேகமாக புகழ்பெற்று வருகிறது.  இது இந்த பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான ஊக்கத்தை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 'சுதேச தர்ஷன்' திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா வளர்ச்சியுடன், மருத்துவச் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல்  சார்ந்த சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும்.

இறுதியாக, இந்த தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தேசிய அளவிலும், உலகளவிலும், தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். புதுச்சேரி மக்கள் இந்த யூனியன் பிரதேசத்தை இன்னும் உயர்ந்த வளர்ச்சி மற்றும் சிறப்பிடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.

நன்றி! ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்