முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அப்பாஸ் அமினியின் 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' என்ற பாரசீக திரைப்படம் சிறந்த படத்திற்கான தங்க மயில் விருது

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அப்பாஸ் அமினியின் 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' என்ற பாரசீக திரைப்படம் சிறந்த படத்திற்கான தங்க மயில் விருது வென்றது;



அரசியல் மற்றும் உணர்ச்சி எல்லைகளைக் கடந்து பாரபட்சங்களை எதிர்கொள்ளும் அன்பின் சக்தியை படம் சித்தரிக்கிறது

பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை 'பிளாகாஸ் லெசன்ஸ்' படத்திற்காக பெற்றார் .

'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' படத்தில் நுணுக்கமான, சிறந்த நடிப்புக்காக பவுரியா ரஹிமி சாமுக்கு சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.


'பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ்' படத்தில் பரந்த அளவிலான உணர்ச்சிகளை தடையின்றி வெளிப்படுத்தியதற்காக மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது வழங்கப்பட்டது.

'காந்தாரா' படத்துக்காக இந்திய திரைப்பட இயக்குநர் ரிஷாப் ஷெட்டிக்கு நடுவர்களின் சிறப்பு விருது கிடைத்துள்ளது. இந்தப் படம் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் இடையிலான கருத்தியல் மோதலை ஆராய்கிறது

சிறந்த அறிமுக படத்திற்கான விருது இயக்குநர்

ரெகர் ஆசாத் கயாவுக்கு 'வென் தி சீட்லிங்க்ஸ் குரோ' படத்திற்காக கிடைத்தது



54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு தங்க மயில் விருது இன்று வழங்கப்பட்டது. கோவாவில் உள்ள டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களைக் கொண்ட சர்வதேச நடுவர் குழு விருதுகளை அறிவித்தது. இந்த விழாவில் 12 சர்வதேச, திரைப்படங்கள், 3 இந்திய திரைப்படங்கள் அடங்கிய 15 தனித்துவமான திரைப்படங்கள் மதிப்புமிக்க தங்க மயில் விருதுக்கு போட்டியிட்டன. இவ்விருது ரூ.40 லட்சம், சான்றிதழ் மற்றும் தங்க மயில் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

பாரசீகப் படமான 'என்ட்லெஸ் பார்டர்ஸ்' சிறந்த படமாக தேர்வு

சிறந்த படத்திற்கான 'தங்க மயில்' விருது அப்பாஸ் அமினி இயக்கிய பாரசீகத்தின் தலை சிறந்த படைப்பான 'எண்ட்லெஸ் பார்டர்ஸ்' திரைப்படத்திற்கு வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் எழுச்சியால் ஏற்பட்ட கொந்தளிப்புக்கு மத்தியில் ஒரு ஈரானிய ஆசிரியரின் பயணத்தின் பின்னணியில் உணர்ச்சிபூர்வமான கதைக்களம் கொண்ட படம் இதுவாகும்.

பல்கேரிய இயக்குநர் ஸ்டீபன் கோமண்டரேவ் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருதை ப்ளாகாஸ் லெசன் படத்திற்காக வென்றார்

இந்த படம் பிளாகா என்ற விதவையை மையமாகக் கொண்டது,

இவ்விருது ரூ.15 லட்சம், சான்றிதழ் மற்றும் வெள்ளி மயில் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

3. சிறந்த நடிகருக்கான வெள்ளி மயில் விருது பவுரியா ரஹிமி சாமுக்கு வழங்கப்பட்டது.

அப்பாஸ் அமினி இயக்கிய எண்ட்லெஸ் பார்டர்ஸ் என்ற பாரசீக திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் பூரியா ரஹிமி சாம் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். "சவாலான படப்பிடிப்பு சூழ்நிலைகளில் தனது சக நடிகர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் தொடர்பு கொள்வதன் பண்புக்காக" இவ்விருதுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவ்விருது ரூ.10 லட்சம், சான்றிதழ் மற்றும் வெள்ளி மயில் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

4. பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ் படத்திற்காக மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது

பார்ட்டி ஆஃப் ஃபூல்ஸ் படத்திற்காக பிரெஞ்சு நடிகை மெலனி தியரிக்கு சிறந்த நடிகைக்கான வெள்ளி மயில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தனது கதாபாத்திரத்தின் பயணத்தில் எதிர்கொள்ளும் நம்பிக்கை முதல் விரக்தி வரையிலான அனைத்து உணர்ச்சிகளையும்  நுட்பத்துடன்  வெளிப்படுத்தும் ஒரு நடிகைக்கு இந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக நடுவர்கள் தெரிவித்தனர்.

 இந்த விருது ரூ.10 லட்சம், சான்றிதழ் மற்றும் வெள்ளி மயில் பதக்கம் ஆகியவை அடங்கும்.

5. காந்தாரா படத்திற்காக இந்திய திரைப்பட இயக்குநர் ரிஷப் ஷெட்டிக்கு நடுவர்களின் சிறப்பு விருது

இந்திய திரைப்பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்திற்காக நடுவர்களின் சிறப்பு விருதை வென்றுள்ளார்.

தங்க மயில் விருதுக்குப் போட்டியிடும் 15 சிறந்த  படங்களின் பட்டியலில் இடம் பிடித்த மூன்று இந்தியப் படங்களில் காந்தாராவும் ஒன்றாகும்.

150 நிமிடங்கள் ஓடும் மிகச் சிறந்த கன்னட படமான காந்தாரா, கடந்த ஆண்டு வெளியானதில் இருந்து பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே சிக்கலான மற்றும் துடிப்பான மோதலை நடனம் மற்றும் உணர்ச்சி என்ற கற்பனை ஊடகத்தின் மூலம் சித்தரிப்பதால், கலாச்சாரம் மற்றும் நாட்டுப்புறக் கதைகளுக்கு காந்தாரா மனக்கிளர்ச்சியைத் தருகிறது.

ரிஷப் ஷெட்டி கன்னட திரையுலகில் ஒரு நடிகர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர் படமான 'காந்தாரா' மூலம் அறியப்பட்ட இவர், 'சர்காரி ஹாய்' படத்திற்காக 66-வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த குழந்தைகளுக்கான படம் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவ்விருது வெள்ளி மயில் பதக்கம், ரூ.15 இலட்சம் மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.

6. வென் த சீட்லிங்ஸ் குரோ படத்தை இயக்கிய  ரெகர் ஆசாத் கயா   சிறந்த அறிமுக திரைப்படத்திற்கான இயக்குநர் விருதைப் பெற்றார்.

சிறிய நிகழ்வுகள் மூலம்  ஒரு நாளில்  வெற்றி பெறும்  தந்தை, மகள் மற்றும் தொலைந்து போன ஒரு சிறுவனின் வாழ்க்கையை விளக்கும் படம் இதுவாகும்.

வெள்ளி மயில் பதக்கம், 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழை இந்த விருது உள்ளடக்கியுள்ளது.

திரைப்படத் தயாரிப்பில் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் தங்க மயில் விருது உலகின் மதிப்புமிக்க திரைப்பட கௌரவங்களில் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான நடுவர் குழுவில் இந்திய திரைப்பட இயக்குனர் சேகர் கபூர், நடுவர் குழுவின் தலைவர், ஸ்பானிஷ் ஒளிப்பதிவாளர் ஜோஸ் லூயிஸ் அல்கைன், பிரெஞ்சு திரைப்பட தயாரிப்பாளர்கள் ஜெரோம் பைலார்ட் மற்றும் கேத்தரின் டுசார்ட் மற்றும் ஆஸ்திரேலிய திரைப்பட தயாரிப்பாளர் ஹெலன் லீக் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.54-வது இந்திய சர்வதேசத் திரைப்படவிழாவில் ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை ஆன்டனி சென் இயக்கிய டிரிஃப்ட் திரைப்படம் வென்றது

54-வது இந்திய சர்வதேசத் திரைப்படவிழாவில் ஐ.சி.எஃப்.டி-யுனெஸ்கோ காந்தி பதக்கத்தை ஆன்டனி சென் இயக்கிய டிரிஃப்ட் திரைப்படம் வென்றது. கோவாவில் இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டது.

அதிர்ச்சிகரமான மற்றும் பயங்கரமான யதார்த்தத்தால் அலைந்து திரியும் ஒரு புலம்பெயர்ந்த பெண்ணின் உணர்ச்சிகரமான சித்திரம் இந்த படம். 

வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளைக் கடந்து செல்வது எதிர்பாராத பிணைப்புகளுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை இப்படம் சித்தரிக்கிறது. இத்திரைப்படம் அலெக்சாண்டர் மக்சிக் எழுதிய 'எ மார்க்கர் டு மெசர் டிரிப்ட்' என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது.  

ஐ.சி.எஃப்.டி பாரிஸ் மற்றும் யுனெஸ்கோவால் நிறுவப்பட்ட காந்தி பதக்கம் என்பது அமைதி, அஹிம்சை, இரக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் குறித்த மகாத்மா காந்தியின் பார்வையை சிறப்பாக பிரதிபலிக்கும் ஒரு திரைப்படத்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...