தமிழ்நாடு அரசின் சார்பில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சிலை திறப்பு
சென்னை மாநிலக் கல்லூரியில் ரூபாய்.52 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. வி.பி.சிங் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்குத் திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார். மேலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்வார்கள் . சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலை திறப்பு நிகழ்ச்சியாக இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடக்கின்றன. ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரிலஹ, (20.04.2023) ஆம் தேதி சட்டப் பேரவை விதி எண் 110 ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார் .
அதைத் தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பேரவை மற்றும் பேராசிரியர்கள் வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக் காவலரான வி.பி. சிங்கிற்கு கடற்கரைச் சாலையிலுள்ள
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 52 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முழு உருவச் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்த வந்த நிலையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியது.
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை திறப்பு விழா; ஏற்பாடுகள் தீவிரம்
முன்னாள் பிரதமர் வி.பி. சிங் சிலை நாளை காலை 11 மணியளவில் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த சிலையைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். விழாவில் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகிறார். வி.பி. சிங் மனைவி சீதாகுமாரி, மகன்கள் அஜய சிங், அபய் சிங் ஆகியோரும் இந்த விழாவில் கலந்துகொள்ளத் அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்ட மக்களின் காவலராக வாழ்ந்த அந்தணராகப் பிறந்து வளர்ந்த ஒரு மாபெரும் தலைவர் விஸ்வநாத் பிரதாப் சிங் எனும் வி.பி.சிங் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் எமர்ஜென்சியை எதிர்த்துத் தொடங்கப்பட்ட ஜெயபிரகாஷ் நாராயணனின் ஜனதா கட்சி நடத்திய ஆட்சியில் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொண்டு வந்த மண்டல் ஆணைக்குழுவை பரிந்துரை செய்து நடைமுறைப் படுத்துவதற்குள் கட்சியிலேற்பட்ட ஒற்றுமை இன்மையால்.
பிரதமர் தலைமை சரண் சிங் வசம் சென்றது ஜனதா கட்சியின் ஆட்சி 1980 ஆம் ஆண்டு கவிழ்ந்ததால். 1990 ஆம் ஆண்டில் பத்தாண்டுகளுக்குப் பின் ஜனதா கட்சி பலவாக உடைந்து அதில் ஜனதா தளம் நடத்திய கூட்டாட்சியில் வி.பி.சிங் தலைமையில் மண்டல் கமிஷன் பரிந்துரை உயிர் பெற்றது. தேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும், பிரச்சனைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்தார். இத்திட்டமானது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொதுத்துறை அமைப்பு மத்திய அரசாங்கம் சார்ந்த வேலை வாய்ப்புகள் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. இந்த மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்புத் திட்டம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சலுகையாகவும், சாதகமாகவும் இருந்தாலும். உயர் சாதி மக்களுக்கு இந்த இட ஒதுக்கீட்டில் பலனில்லாததால் கடும் எதிர்ப்பு நிலை ஏற்பட்டு வட இந்தியாவின் நகர்புறங்களில் போராட்டங்களும், கலவரங்களும் நடைபெற்றது.
மண்டல் கமிஷன் இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை வி. பி. சிங் அமல் படுத்த முற்பட்டபோது ஜனதா தளம் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்ளபடுமென்று கூட்டணியில் வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த பாரதிய ஜனதா கட்சித் தலைவரான எல்.கே.அத்வானி எச்சரிக்கை விடுத்தார். இந்தத் திட்டத்தை அமல் படுத்தக் கூடாதொன்று அத்வானி தலைமையில் வட இந்தியாவில் பல மதகலவரங்களும், தீ குளிப்பு உயிர் பலி போராட்டங்களும் நடந்ததால். வி.பி.சிங் ஆட்சியை பல எதிர்கட்சி தலைவர்கள் விமர்சித்தனர். ஆனால் இந்த மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தியதாலும், அப்போது வட இந்தியாவில் நடந்த ராமர் யாத்திரையை தடுத்து நிறுத்தி எல்.கே.அத்வானியை கைது செய்ததால் ஜனதா தளம் ஆட்சிக்கு பாஜக அளித்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் வி.பி.சிங் பிரதமர் பதவியை இழந்து ஜனதா தளம் கூட்டணிஆட்சி கவிழ்ந்தது. இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் மண்டல் கமிஷன் உத்தரவு செல்லுமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு கிரீம் லேயர் முறையில் வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது அதன் காரணகர்த்த வி.பி.சிங் ஆவார். பிற்படுத்தப்பட்ட ஜாதிகளுக்கு விடிவைத் தேடித் தந்த மாவீரன். தன் ஆட்சி பாஜகவால் வீழும் என்றறிந்தே சமூகநீதி ஒளியை ஏற்றியவர்.
கருத்துகள்