முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சமாதி அடைந்த சமணத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜுக்கு அஞ்சலி

அண்மையில் சமாதி அடைந்த சமணத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் குறித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய அஞ்சலிக் கட்டுரை

புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி, அண்மையில் சமாதி அடைந்து நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார். ஆழ்ந்த ஞானம், எல்லையற்ற இரக்கம் மற்றும் மனிதகுலத்தை மேம்படுத்துவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் அவரது வளமான ஆன்மீக வாழ்க்கை அமைந்திருந்தது. பல சந்தர்ப்பங்களில் அவரது ஆசீர்வாதங்களைப் பெறும் பாக்கியத்தை நான் பெற்றுள்ளேன்.  நான் உட்பட எண்ணற்ற ஆத்மாக்களுக்கு வழிகாட்டிய அவரது இழப்பை மிக பெரிய இழப்பாக நான் உணர்கிறேன். அவரது அரவணைப்பு, பாசம் மற்றும் ஆசீர்வாதங்கள், நல்லெண்ணத்தின்  அடையாளங்கள் மட்டுமல்ல. அவை ஆன்மீக சக்தியின் ஆழமான பரிமாற்றங்களாக அமைந்ததுடன், அவரது தொடர்பு கிடைத்த அதிர்ஷ்டசாலிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தன.



பூஜ்ய ஆச்சார்ய ஜி, ஞானம், இரக்கம் மற்றும் சேவை ஆகிய மூன்று அம்சங்களின் சங்கமமாக எப்போதும் நினைவுகூரப்படுவார். அவர் ஒரு உண்மையான தவசீலராக திகழ்ந்தார். அவரது வாழ்க்கை பகவான் மகாவீரரின் கொள்கைகளை கொண்டதாக இருந்தது. அவரது வாழ்வு சமண சமயத்தின் முக்கிய கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டாக இருந்தது. அதன் கொள்கைகளை தமது சொந்த செயல்கள் மற்றும் போதனைகள் மூலம் அவர் பின்பற்றினார். அனைத்து உயிர்களிடமும் அவர் கொண்டிருந்த அக்கறை, உயிர்களின் மீது ஆழ்ந்த அன்பு செலுத்தும் சமண சமயத்தின் கொள்கையைப் பிரதிபலித்தது. எண்ணம், சொல் மற்றும் செயலில் நேர்மையை சமண மதம் வலியுறுத்துகிறது. அதைப் பிரதிபலிக்கும் வகையில் அவர் உண்மையாக வாழ்ந்தார். அவர் மிகவும் எளிமையான வாழ்க்கை முறையையும் பின்பற்றினார். சமண சமயத்தாலும், பகவான் மகாவீரரின் வாழ்க்கையாலும் உலகம் தொடர்ந்து உத்வேகம் பெற்று வருவதற்கு இவரைப் போன்ற மாபெரும் துறவிகளே காரணம். அவர் சமண சமூகத்தில் உயர்ந்து நின்றார். ஆனால் அவரது தாக்கமும் செல்வாக்கும் ஒரு சமூகத்திற்குள் மட்டும் அடங்கிவிடவில்லை. பல்வேறு நம்பிக்கைகள், பிராந்தியங்கள் மற்றும் கலாச்சாரங்களைக் கடந்து பலதரப்பட்ட மக்களும் அவரிடம் வந்தனர். ஆன்மீக விழிப்புணர்வுக்காக, குறிப்பாக இளைஞர்களிடையே அவர் அயராது உழைத்தார்.

கல்வி அவரது இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஒரு பகுதியாக இருந்தது. வித்யாதர் என்ற  அவரது குழந்தைப் பருவ பெயர் முதல் வித்யாசாகர்  ஜி மகராஜ் வரையிலான அவரது பயணம் அறிவைப் பெறுவதிலும் வழங்குவதிலும் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் அமைந்திருந்தது. கல்வி என்பது நீதி  மற்றும் அறிவொளியுடன் கூடிய சமூகத்திற்கான வலுவான அடித்தளம் என்பது அவரது உறுதியான நம்பிக்கையாக இருந்தது. தனிநபர்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றும் வழியாக கல்வி அறிவை அவர் ஆதரித்தார். அவரது போதனைகள் உண்மையான ஞானத்திற்கான பாதைகளாக அமைந்திருந்தன. சுய ஆய்வு மற்றும் சுய விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை அவை வலியுறுத்தின. வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் ஈடுபட வேண்டும் என்று அவரைப் பின்பற்றுபவர்களை வலியுறுத்தின.

அதே நேரத்தில், புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி, நமது கலாச்சார நெறிமுறைகளில் வேரூன்றிய கல்வியை நமது இளைஞர்கள் பெற வேண்டும் என்று விரும்பினார். கடந்த காலங்களில் நாம் கற்ற பாடங்களிலிருந்து விலகிச் சென்றதால்தான் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற முக்கிய சவால்களுக்கு நம்மால் தீர்வு காண முடியவில்லை என்று அவர் அடிக்கடி கூறுவார். முழுமையான கல்வி என்பது திறன் மற்றும் புதுமைகளில் கவனம் செலுத்தும் ஒன்றாகும் என்றும் அவர் நம்பினார். இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை குறித்து பெருமிதம் கொண்ட அவர், இந்திய மொழிகளைக் கற்க வேண்டும் என இளைஞர்களை ஊக்குவித்தார்.

பூஜ்ய ஆச்சார்ய ஜி, சமஸ்கிருதம், பிராகிருதம் மற்றும் இந்தி மொழிகளில் விரிவாக பல்வேறு விஷயங்களை எழுதினார். ஒரு துறவியாக அவர் அடைந்த உயரங்களும், பூமியில் அவர் எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருந்தார் என்பதும் அவரது புகழ்பெற்ற படைப்பான “மூக்மதி”-யின் மூலம் தெளிவாக வெளிப்படுகிறது. தமது படைப்புகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அவர் குரல் கொடுத்தார்.

உடல் நலத்திலும் பூஜ்ய ஆச்சார்யாவின் பங்களிப்பு  நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது. இதில் அவர் பல முன்முயற்சிகளை மேற்கொண்டார். ஆரோக்கியம் தொடர்பான அவரது அணுகுமுறை முழுமையானது. உடல் நலத்தை ஆன்மீக ஆரோக்கியத்துடன் ஒருங்கிணைத்து,  அதன் மூலம் ஒட்டுமொத்த நபரின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அணுகுமுறையை அவர் கொண்டிருந்தார்.

புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி தேச நிர்மாணத்தில் கொண்டிருந்த உறுதிப்பாடு குறித்து, எதிர் கால தலைமுறையினர் விரிவாக படிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். எந்தவொரு பாகுபாட்டையும் கைவிட்டு தேச நலனில் கவனம் செலுத்துமாறு அவர் எப்போதும் மக்களை வலியுறுத்தி வந்தார். வாக்களிப்பதை ஜனநாயக செயல்முறைகளில் பங்கேற்பதன் வெளிப்பாடாக அவர் பார்த்தார். அதனால் வாக்களிப்பதன்  வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக அவர் இருந்தார். ஆரோக்கியமான மற்றும் தூய்மையான அரசியலை ஆதரித்த அவர், கொள்கை வகுப்பது மக்களின் நலனைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்றும்  சுயநலம் சார்ந்ததாக இருக்கக்கூடாது என்றும் கூறினார்.

மக்கள், தங்களுக்காகவும், தங்கள் குடும்பங்களுக்காகவும், சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடித்தளத்தின் மீது ஒரு வலுவான தேசம் கட்டமைக்கப்படுகிறது என்று அவர் நம்பினார். நேர்மை, ஒருமைப்பாடு மற்றும் தன்னம்பிக்கை போன்ற நற்பண்புகளை ஒவ்வொரு தனி நபரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இது நியாயமான, கருணையுள்ள மற்றும் செழிப்பான சமூகத்தை உருவாக்க அவசியம் என்று அவர் உறுதியாக நம்பினார். வளர்ச்சி அடைந்த பாரதத்தை  உருவாக்க நாம் பணியாற்றும்போது இது போன்ற கடமைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மிகவும் முக்கியமானதாகும்.

உலகம் முழுவதும் சுற்றுச்சூழல் சீர்கேடு தலைவிரித்தாடும் இந்தக் காலகட்டத்தில், இயற்கைக்கு ஏற்படும் தீங்கைக் குறைக்கும் ஒரு வாழ்க்கை முறையை மேற்கொள்ள வேண்டும் என்று பூஜ்ய ஆச்சார்ய ஜி அழைப்பு விடுத்தார். அதேபோல், நமது பொருளாதாரத்தில் விவசாயம் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்த அவர், விவசாயத்தை நவீனமாகவும், நிலையானதாகவும் மாற்றவேண்டும் என வலியுறுத்தினார். அவர் சிறைக் கைதிகளை சீர்திருத்துவதில் அவர் ஆற்றிய பணிகளும் குறிப்பிடத்தக்கவையாகும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நமது மண் மற்றவர்களுக்கு ஒளியைக் காட்டி நமது சமூகத்தை மேம்படுத்திய மகான்களை உருவாக்கியுள்ளது.  இதுவே நமது மண்ணின் தனி அழகாகும். புகழ்பெற்ற துறவிகள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் வரிசையில் பூஜ்ய ஆச்சார்ய ஜி ஒரு மிகச் சிறந்த நபராக நிற்கிறார். அவர் எதைச் செய்தாலும், நிகழ்காலத்திற்காக மட்டுமல்லாமல், எதிர்காலத்திற்காகவும் செய்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலம் டோங்கர்கரில் உள்ள சந்திரகிரி ஜெயின் மந்திருக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்தப் பயணம் பூஜ்ய ஆச்சார்ய ஜி-யுடனான எனது கடைசி சந்திப்பாக இருக்கும் என்று நான் சிறிதும் நினைக்கவில்லை. அவரைச் சந்தித்த அந்தத் தருணங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவர் என்னுடன் நீண்ட நேரம் பேசினார். தேசத்திற்கு சேவை செய்வதில் நான் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர் என்னை ஆசீர்வதித்தார். நமது நாடு செல்லும் திசை மற்றும் உலக அரங்கில் இந்தியாவுக்கு கிடைத்து வரும் மரியாதை குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் செய்து கொண்டிருந்த பணிகளைப் பற்றி பேசும்போது அவர் உற்சாகத்தால் திளைத்தார். அப்போதும் எப்போதும், அவரது மென்மையான பார்வையும், அமைதியான புன்னகையும், மன அமைதியை ஏற்படுத்துவதாக இருந்தன. அவரது ஆசீர்வாதம் ஆன்மாவுக்கு ஒரு இனிமையான மருந்தைப் போல அமைந்திருந்தது, நமக்குள்ளும் நம்மைச் சுற்றியும் தெய்வீகத்தை அது உணர்த்தியது.


புனிதத் துறவி சிரோமணி ஆச்சார்ய ஸ்ரீ 108 வித்யாசாகர் ஜி மகராஜ் ஜி-யின் சமாதி அடைந்துள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடம், அவரை அறிந்த, அவரது போதனைகள் மற்றும் அவரது வாழ்க்கையால் உத்வேகம் பெற்ற அனைவராலும் ஆழமாக உணரப்படுகிறது. இருப்பினும், அவரால் உத்வேகம் பெற்ற அனைவரது  இதயங்களிலும், மனதிலும் அவர் வாழ்கிறார். அவரது நினைவைக் கௌரவிக்கும் வகையில், அவர் பின்பற்றிய கொள்கைகளை பின்பற்றி நடக்க நாம் உறுதியேற்போம். இதன் மூலம் நாம் ஒரு மகத்தான ஆத்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம். அதோடு  மட்டுமல்லாமல், நமது நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அவரது பணியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த