தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதாவை அமலாக்கத்துறை கைது செய்தது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி யூனியன் பிரதேச ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய புதிய மதுபானக் கொள்கையில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் கே.ஆர்.சந்திரசேகர ராவ் மகளான எம்எல்சி யான கவிதா மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப் பதிவு செய்துள்ளது டெல்லி கலால் கொள்கை முறைகேடுகள் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சம்மன்களுக்கு எதிராக கவிதா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மார்ச் மாதம் 19-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸிலுள்ள பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி யான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் நேற்று பிற்பகல் முதல் சோதனை மேற்கொண்ட நிலையில்
கே ஆர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதாவைக் கைது செய்தது அமலாக்கத்துறை.. விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லத் திட்டம் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். .கவிதா கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து பி.ஆர்.எஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தெலுங்கானாவில் பரபரப்பு நிலவுகிறது.
கருத்துகள்