திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வந்தவர் கருப்புசாமி
அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மக்கள் மித்திரன் மணி மற்றும் கிராம உதவியாளர் எனும் தலையாரி சித்ரா ஆகியோரை மரண வாக்குமூலமாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் கோமங்கலம் காவல் நிலையத்தினர் தேடிவந்த நிலையில் நள்ளிரவில் தேனியில் கைது செய்யபட்டார். பின்னர் பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மணியன் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையிலடைத்தனர்.
மேலும் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புச் சாமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தது.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி தனது கைப்பட ஒரு மரண வாக்குமூலத்தை கடிதமாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்ட நிலையில் கருப்புச்சாமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவாய் துறை பணியாளர்கள் காத்திருப்புப் போரா ட்டமும் நடத்தினர்.
உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் கணக்கம்பாளையம் கிராம உதவியாளரான தலையாரி சித்ரா தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் தலைமறைவான தலையாரி சித்ராவை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதன் பின்புலம் வருமாறு : பொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்த கடிதம் கிடைத்ததாகத் தெரிவதால் பரபரப்பு . சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த கிராம நிர்வாக அலுவலரின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியிடம் புகார் மனுவும் அளித்தனர்.. பொள்ளாச்சி வட்டம் கூளநாயக்கன்பட்டியைச் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி வயது 35, இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த.. நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு காலையில் பொள்ளாச்சி பகுதியிலுள்ள அவரது வீட்டில் தென்னை மரத்திற்கு உரமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான ஷெல்பாஸ் என்ற மருந்தை உட்கொண்ட. நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்புசாமி உயிரிழந்துள்ளார்.
பின்பு இந்தத் தகவலறிந்து வந்த கோமங்கலம் காவல் நிலையத்தினர் கருப்புசாமியின் உறவினர்களிடையே நடத்திய விசாரணையில் இவருக்கு வயிற்று வலியும் அடிக்கடி மூச்சு திணறலும் ஏற்பட்டு வருவதாலும் மேலும் இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் இருந்து வந்ததாலும் இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருக்குமென காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். கோமங்கலம் காவல் நிலையத்தில் உறவினர்களின் வாக்குமூலத்தை நம்பி தற்கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்ற போது அவரது வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் பொழுது தனது தாயிடம் கருப்புசாமி ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்த கடிதம் கிடைத்ததால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியிடம் புகார் மனுவும் அளித்தனர். அதில். கடிதத்தை இன்று அவர்கள் எடுத்துப் பார்த்தபோது திடுக்கிடும் தகவகள் அவர்களுக்கு தெரிந்துள்ளதாகவும். கிராம நிர்வாகி அலுவலர் கருப்புசாமி தனது மரண சாசன வாக்குமூலத்தை தனது கைப்பட எழுதியுள்ளதாகக் கூறப்படுவதாவது
"எனது இறப்புக்குக் காரணமாக இருந்த மக்கள் மித்திரன் பத்திரிக்கை ஆசிரியர் மணியன் மீதும் எனக்கு அலுவலகத்தில் அடிக்கடி பல இன்னல்களைத் தந்து மக்கள் பணிகளை என்ன செய்ய விடாமல் தடுத்து வந்த கிராம உதவியாளர் சித்ராவின் மீதும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். எனது அருமை உடன்பிறந்த நண்பர்கள் அம்மா அப்பா மற்றும் பெரிதும் நேசிக்கும் எனது புதுக்கோட்டை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் நண்பர்களே நான் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டுச் செல்கிறேன் எனது மனம் மிகவும் வேதனையுடன் தமிழருக்கு மானம் தான் பெரிது என்ற நிலையுடன் உயிரை விடுகிறேன் என்று கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்புசாமியின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் அவர் எழுதி வைத்த கடிதத்தையும் புகார் மனுவையும் அளித்துள்ளனர். தற்போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல விதமாக அப்பகுதிகளில் பேசப்படுகிறது. விசாரணையின் முடிவில் தான் உண்மை வெளிவரும்
கருத்துகள்