முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை நடந்த பின்னணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வந்தவர் கருப்புசாமி


அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மக்கள் மித்திரன் மணி மற்றும் கிராம உதவியாளர் எனும் தலையாரி சித்ரா ஆகியோரை மரண வாக்குமூலமாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் கோமங்கலம் காவல் நிலையத்தினர் தேடிவந்த நிலையில்  நள்ளிரவில் தேனியில் கைது செய்யபட்டார்.  பின்னர் பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மணியன் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

மேலும் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புச் சாமி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தது.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி தனது கைப்பட ஒரு மரண வாக்குமூலத்தை கடிதமாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்ட நிலையில் கருப்புச்சாமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவாய் துறை பணியாளர்கள் காத்திருப்புப் போரா ட்டமும் நடத்தினர்.



உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் கணக்கம்பாளையம் கிராம  உதவியாளரான தலையாரி சித்ரா தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் தலைமறைவான தலையாரி சித்ராவை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதன் பின்புலம் வருமாறு :  பொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்த கடிதம் கிடைத்ததாகத் தெரிவதால் பரபரப்பு . சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த கிராம நிர்வாக அலுவலரின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியிடம் புகார் மனுவும் அளித்தனர்.. பொள்ளாச்சி வட்டம் கூளநாயக்கன்பட்டியைச் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி வயது 35, இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த.. நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு காலையில் பொள்ளாச்சி பகுதியிலுள்ள அவரது வீட்டில் தென்னை மரத்திற்கு உரமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான ஷெல்பாஸ் என்ற மருந்தை உட்கொண்ட. நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்புசாமி உயிரிழந்துள்ளார்.


பின்பு இந்தத் தகவலறிந்து வந்த கோமங்கலம் காவல் நிலையத்தினர் கருப்புசாமியின் உறவினர்களிடையே நடத்திய விசாரணையில் இவருக்கு வயிற்று வலியும் அடிக்கடி மூச்சு திணறலும் ஏற்பட்டு வருவதாலும் மேலும் இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் இருந்து வந்ததாலும் இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருக்குமென காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். கோமங்கலம் காவல் நிலையத்தில் உறவினர்களின் வாக்குமூலத்தை நம்பி தற்கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்ற போது அவரது வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் பொழுது தனது தாயிடம் கருப்புசாமி ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்த கடிதம் கிடைத்ததால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியிடம் புகார் மனுவும் அளித்தனர். அதில். கடிதத்தை இன்று அவர்கள் எடுத்துப் பார்த்தபோது திடுக்கிடும் தகவகள் அவர்களுக்கு தெரிந்துள்ளதாகவும். கிராம நிர்வாகி அலுவலர் கருப்புசாமி தனது மரண சாசன வாக்குமூலத்தை தனது கைப்பட எழுதியுள்ளதாகக் கூறப்படுவதாவது


"எனது இறப்புக்குக் காரணமாக இருந்த மக்கள் மித்திரன்  பத்திரிக்கை ஆசிரியர் மணியன் மீதும் எனக்கு அலுவலகத்தில் அடிக்கடி பல இன்னல்களைத் தந்து மக்கள் பணிகளை என்ன செய்ய விடாமல் தடுத்து வந்த கிராம உதவியாளர் சித்ராவின் மீதும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். எனது அருமை உடன்பிறந்த நண்பர்கள் அம்மா அப்பா மற்றும் பெரிதும் நேசிக்கும் எனது புதுக்கோட்டை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் நண்பர்களே நான் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டுச் செல்கிறேன் எனது மனம் மிகவும் வேதனையுடன் தமிழருக்கு மானம் தான் பெரிது என்ற நிலையுடன் உயிரை விடுகிறேன் என்று கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்புசாமியின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் அவர் எழுதி வைத்த கடிதத்தையும் புகார் மனுவையும் அளித்துள்ளனர். தற்போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல விதமாக அப்பகுதிகளில் பேசப்படுகிறது. விசாரணையின் முடிவில் தான் உண்மை வெளிவரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...