முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை நடந்த பின்னணி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராகப் பணி செய்து வந்தவர் கருப்புசாமி


அவரை தற்கொலைக்குத் தூண்டியதாக மக்கள் மித்திரன் மணி மற்றும் கிராம உதவியாளர் எனும் தலையாரி சித்ரா ஆகியோரை மரண வாக்குமூலமாக எழுதியதாக கூறப்படும் கடிதத்தின் அடிப்படையில் கோமங்கலம் காவல் நிலையத்தினர் தேடிவந்த நிலையில்  நள்ளிரவில் தேனியில் கைது செய்யபட்டார்.  பின்னர் பொள்ளாச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மணியன் ஆஜர் படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

மேலும் உடுமலைப்பேட்டை வட்டம் கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கருப்புச் சாமி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடந்தது.

அப்போது கிராம நிர்வாக அலுவலர் கருப்புசாமி தனது கைப்பட ஒரு மரண வாக்குமூலத்தை கடிதமாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்ட நிலையில் கருப்புச்சாமியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருவாய் துறை பணியாளர்கள் காத்திருப்புப் போரா ட்டமும் நடத்தினர்.



உடுமலைப்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இந்தப் போராட்டத்தில் 25 க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்ற நிலையில் கணக்கம்பாளையம் கிராம  உதவியாளரான தலையாரி சித்ரா தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் தலைமறைவான தலையாரி சித்ராவை பிடிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர். அதன் பின்புலம் வருமாறு :  பொள்ளாச்சியில் தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்த கடிதம் கிடைத்ததாகத் தெரிவதால் பரபரப்பு . சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்த கிராம நிர்வாக அலுவலரின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியிடம் புகார் மனுவும் அளித்தனர்.. பொள்ளாச்சி வட்டம் கூளநாயக்கன்பட்டியைச் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி வயது 35, இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகிலுள்ள கணக்கம்பாளையம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்த.. நிலையில் கடந்த இரண்டு நாட்கள் முன்பு காலையில் பொள்ளாச்சி பகுதியிலுள்ள அவரது வீட்டில் தென்னை மரத்திற்கு உரமாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தான ஷெல்பாஸ் என்ற மருந்தை உட்கொண்ட. நிலையில் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி கருப்புசாமி உயிரிழந்துள்ளார்.


பின்பு இந்தத் தகவலறிந்து வந்த கோமங்கலம் காவல் நிலையத்தினர் கருப்புசாமியின் உறவினர்களிடையே நடத்திய விசாரணையில் இவருக்கு வயிற்று வலியும் அடிக்கடி மூச்சு திணறலும் ஏற்பட்டு வருவதாலும் மேலும் இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் இருந்து வந்ததாலும் இந்தத் தற்கொலைக்குக் காரணமாக இருக்குமென காவல் துறையினரிடம் கூறியுள்ளனர். கோமங்கலம் காவல் நிலையத்தில் உறவினர்களின் வாக்குமூலத்தை நம்பி தற்கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில் அவர் தற்கொலைக்கு முயன்ற போது அவரது வீட்டிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் பொழுது தனது தாயிடம் கருப்புசாமி ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட கிராம நிர்வாக அலுவலர் தனது தற்கொலைக்கான காரணத்தை எழுதி வைத்த கடிதம் கிடைத்ததால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியிடம் புகார் மனுவும் அளித்தனர். அதில். கடிதத்தை இன்று அவர்கள் எடுத்துப் பார்த்தபோது திடுக்கிடும் தகவகள் அவர்களுக்கு தெரிந்துள்ளதாகவும். கிராம நிர்வாகி அலுவலர் கருப்புசாமி தனது மரண சாசன வாக்குமூலத்தை தனது கைப்பட எழுதியுள்ளதாகக் கூறப்படுவதாவது


"எனது இறப்புக்குக் காரணமாக இருந்த மக்கள் மித்திரன்  பத்திரிக்கை ஆசிரியர் மணியன் மீதும் எனக்கு அலுவலகத்தில் அடிக்கடி பல இன்னல்களைத் தந்து மக்கள் பணிகளை என்ன செய்ய விடாமல் தடுத்து வந்த கிராம உதவியாளர் சித்ராவின் மீதும் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். எனது அருமை உடன்பிறந்த நண்பர்கள் அம்மா அப்பா மற்றும் பெரிதும் நேசிக்கும் எனது புதுக்கோட்டை நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் நண்பர்களே நான் மிகவும் துன்பத்தில் ஆழ்த்தி விட்டுச் செல்கிறேன் எனது மனம் மிகவும் வேதனையுடன் தமிழருக்கு மானம் தான் பெரிது என்ற நிலையுடன் உயிரை விடுகிறேன் என்று கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருப்புசாமியின் உறவினர்கள் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணனிடம் அவர் எழுதி வைத்த கடிதத்தையும் புகார் மனுவையும் அளித்துள்ளனர். தற்போது கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பல விதமாக அப்பகுதிகளில் பேசப்படுகிறது. விசாரணையின் முடிவில் தான் உண்மை வெளிவரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்