சிவகங்கை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மை தாசில்தாராக இருப்பவர் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த ராஜரத்தினம்,
தற்போது ஒக்கூரில் வசித்து வருகிறார், இவர் ஒரு பெண்ணுடன் ஹோட்டல் அறையில் உல்லாசமாக இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. சம்பந்தப்பட்ட உல்லாச வீடியோவை அரசுத் துறை சார்ந்த வட்டாட்சியரான அவரே வாட்சப் செயலியில் ஸ்டேட்டஸாக வைத்திருந்ததாககூறப்படுகிறது. தாசில்தாரின் வாட்ஸ் ஆப் செயலியிலிருந்து டவுன் லோட் செய்து, வீடியோவை சமூக வலைதளங்களில்பலரும் பகிர்ந்து வருவதாகத் தெரிகிறது. மேலும் குறிப்பிட்ட வீடியோவில் சிக்கியவருக்குச் சிக்கல் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை செய்பவர் என்பதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை மாவட்ட உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். ஆபாச வீடியோவை பொது இடத்தில் பலரும் பார்க்கும் படி பகிர்ந்த குற்றத்திற்காக தாசில்தார் ராஜரத்தினம் மீது, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தானாக முன்வந்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் புகார் அளிக்காத நிலையில், இது போன்ற விவகாரங்களில் காவல்துறையும் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதால் , சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் சிலர் கோரிக்கை வைத்து வருகிறார்கள் முன்னதாக இவர் பணியாற்றிய இடங்களில் இது போன்ற பாலியல் புகார்களில் சிக்கியவர் எனவும் கூறப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பணியாற்றிய போது, தாசில்தார் ராஜரத்தினம் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக எழுந்த புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.ராஜரத்தினம். இவர் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் இருந்து வந்த நிலையில் இவர் பணியாற்று இடங்களில் எல்லாம் தொடர்ந்து பாலியல் அத்துமீறல்கள் மற்றும் பெண்களுக்குத் தொந்தரவு என பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
தற்பொழுது அவருடன் பணியாற்றும் டைப்பிஸ்ட் பெண்ணுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோவை அவரே எடுத்து, அவரது மொபைலில் ஸ்டேட்ஸ் வைத்து இப்போது சிக்கலில் சிக்கினர். இவர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றிய காலத்தில் பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் அப்போது பணி செய்த வட்டாட்சியர்களின் உதவியில் தப்பித்து வந்ததாக லஞ்ச ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் பேசப்பட்டது
குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது முதல் மனைவி காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் பணி செய்து வருகிறார், இவர் தற்போது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார்.
கருத்துகள்