முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரான் அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்தில் அதிபருடன் ஒன்பது நபர்கள் பலி

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி வனப்பகுதியில் விழுந்த விபத்தில் அதிபருடன் ஒன்பது நபர்கள் உயிரிழந்த நிலையில்


ஒன்பது பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது, அவர்கள் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. விபத்துக்கான காரணம்  குறித்து விமானப்படை முன்னாள் அதிகாரி ஒருவர் கூறுகையில் .ஈரான் அதிபரான இப்ராஹிம் ரைசி 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில்  வெற்றி பெற்றார். சுமார் 28 மில்லியன் வாக்குகள் பதிவான தேர்தலில் 62 சதவீத வாக்குகளை அவர் பெற்றார். ஈரானில் தலைமை நீதிபதியாகவும் துறையில் முக்கிய பங்காற்றியவருமான ரைசி 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைச் தழுவியிருந்தும் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானார்.


இப்ராஹிம் ரைசி: 63 வயதில் ஈரான் நாட்டின் மூத்த தலைவர் பொறுப்பை கையில் வைத்திருக்கும் அயத்துல்லா அலி காமெனிக்கு அடுத்த பொறுப்பை கவனிப்பாரென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் அவரது மரணம் ஈரானில் மிகவும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதப்பற்று காரணமாக ஈரானில் பரவலான ஆதரவாளர்களைக் கொண்டவர் தற்போது அமைதியான ஆதரவையும் ராணுவம் சட்டமன்றத்தின் ஆதரவையும் பெற்றிருந்த நிலையில் அவரது மரணம் உலக அளவில் பேசுபொருளகிறது.




  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உலங்கு வானூர்திப் பயணம் மேற்கொண்ட போது விபத்தில் சிக்கி மரணமடைந்ததாக தகவல் வெளியாகியது. நேற்று விபத்து நடந்த நிலையில் இன்று அவர் மரணம் அடைந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் போருக்கிடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி நேற்று விபத்துக்குள்ளானது. விபத்து நடந்ததாகக் கூறப்படுமிடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்தப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உலங்கு வானூர்தி விபத்தில் மரணமடைந்தது உறுதியானது. பயணித்த உலங்கு வானூர்தியில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, உடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகளும் மற்றும் பாதுகாவலர்களும் இருந்ததாக அந்த நாட்டின் அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும்  விபத்தில் பலியாகினர்.

 


அவர்களது உடல்கள் தற்போது மீட்கப்பட்ட நிலையில், அதனை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உடை அங்க அடையாளங்கள் மூலம் உடல்களை அடையாளம் காண முடியாதவாறு உடல்கள் எரிந்துள்ள நிலையில், மரபனுப் பரிசோதனை மூலமே அவர்களது உடல்களை அடையாளம் காண முடியுமென மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோரின் உடல்கள் செங்குத்தான மலைப்பாதையிலிருப்பதால் அவற்றை தரைப் பகுதிக்குக் கொண்டு வந்து பின்பு மருத்துவமனையில் மரபனுப் பரிசோதனை மேற்கொண்ட பின் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படுமென அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மீட்புப் பணியில் ரஷ்யா மற்றும் துருக்கி நாட்டின் மீட்புகா குழுவின் பங்கு மிகவும் முக்கியமானது. சவாலான மலைப்பகுதியில் உடல்கள் இருந்த நிலையில் மீட்பு குழுவினர் மிக கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்த இடத்தை அடைந்தனர் தற்போது உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை கீழ இறக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் விபத்துக்கு காரணம் குறித்து, என்ன நடந்திருக்கும் என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகின்றனர் விமானப்படை வீரர்கள். இது குறித்துப் பேசியுள்ள முன்னாள் விமானப்படை அதிகாரியான மாதேஸ்வரன்,"ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதுக்கு மோசமான வானிலை என இன்று ஒரே வரியில் முடித்து விட முடியாது. பனிப்பொழிவு அல்லது பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. காரணம் அதிபர் உள்ளிட்டோர் பயணிக்கும் விமானம் என்பதால் ஏற்கனவே வானிலையை முன்கூட்டியே கணித்து அதற்கேற்றார் போலத்தான் பொசிஷன் எடுத்திருப்பார்கள்.


ரேடார், நேவிகேஷன்: மேலும் ரேடார் நேவிகேஷன் சிஸ்டம் மூலம் பயணம் செய்யும் தூரத்தில் இருக்கும் வானிலையை கணித்து தான் பயணம் மேற்கொள்வார்கள். ஒரு வேளை பிரச்சனை ஏற்பட்டால் அந்த இடத்திலிருந்து விலகி மற்றொரு பாதையில் பயணிக்க வைத்திருக்க முடியும். மேலும் அதிபர் உள்ளிட்டோர் பயணம் செய்யும் உலங்கு வானூர்தி என்பதால் மூத்த விமானிகளே அதனை இயக்கியிருப்பார்கள். எனவே தொழில்நுட்பக் கோளாறும் இதற்குக் காரணமாக இருந்திருக்க முடியாது. அதே நேரத்தில் இடி மின்னல் கனமழை போன்ற திடீர் பிரச்சனைகள் காரணமாகத்தான் விபத்து ஏற்படும். என்னை பொருத்தவரை பனிமூட்டம் அல்லது பனிப் பொழிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. கனமழை காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மாதேஸ்வர் தெரிவித்தார்.     மேலும்                  ஈரான் நாட்டின் புதிய அதிபராகிறார் முகமது முக்பர். ஈரான் நாட்டின் புதிய காபந்து அதிபராக துணை அதிபர் பொறுப்பேற்க உள்ளார்


உலங்கு வானூர்தி விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழந்த நிலையில் துணை அதிபர், பதவியேற்கிறார் ,                         ‌. ‌.   இந்த நிலையில் இந்திய அரசு சார்பில் தெரிவித்த இரங்கல் செய்தியில் ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அதிபர் டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரைசி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர்


ஈரான் இஸ்லாமிய குடியரசின் அதிபர் டாக்டர் செய்யத் இப்ராஹிம் ரைசி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2024, மே 21 (செவ்வாய்க்கிழமை) அன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையடுத்து தேசியக் கொடி பறக்கவிடப்படும் அனைத்து கட்டடங்களிலும் நாளை அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்