நடிகர் தம்பி ராமையா மகனுக்கும் நடிகர் அர்ஜுன் மகளுக்கும் திருமணம்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாவதியும் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் விரும்பும் நிலையில் இவர்களுடைய திருமணம் எப்போது என தம்பி ராமையா விளக்கம் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் சொந்த செலவில் பிரம்மாண்டமான ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய நடிகர் அர்ஜுன் அதன் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கும் தம்பி ராமையாவை குடும்பத்தோடு அழைத்திருந்தார் அந்த நிகழ்ச்சியில் வைத்து இரு குடும்பத்தினரும் பேசி திருமண தேதியையும் குறித்ததாக கூறப்படுகிற நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக பேட்டி ஒன்றில் உமாபதி பேசியிருக்கிறார். அதில் அர்ஜுன் சார் ஒரு திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவர் அந்த திரைப்படத்தை நடித்து முடித்ததும் திருமணம் நடக்கும். அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி நிச்சயதார்த்தம் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அர்ஜுன் கட்டிய ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது. ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் நிலையில், திருமண அழைப்பிதழை பிரபலங்களைச் நேரில் சந்தித்து வழங்க ஆரம்பித்துள்ளார் அர்ஜுன். ஜூன் மாதம் 10 ஆம் தேதி கெருகம்பாக்கத்திலுள்ள அர்ஜுன் தோட்டத்தில் ஐஸ்வர்யா -உமாபதி திருமணம் நடைபெற உள்ளத. இந்த நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வைக்கும் பணியை அர்ஜுன் ஆரம்பித்துள்ளார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு குடும்பத்துடன் சென்று அழைப்பு விடுத்தார் தம்பி உடன் ராமைய்யாவும் தனது குடும்பத்துடன் சென்று முதலமைச்சர் மு க ஸ்டாலினைச் சந்தித்தார். தம்பி ராமையா மேலும் கூறுகையில் "பெண் வீட்டாரின் சம்மதமும் அவர்களுடைய சௌகரியமும் நமக்கு ரொம்பவே முக்கியம். கல்யாணம் என்றால் இரு வீட்டினரின் முடிவுகள் சுகமாக இருக்க வேண்டும். ஐஸ்வர்யா எங்களுக்கு இன்னொரு மகள் போலத் தான் இருக்கிறார். என்னுடைய மகன் உமாபதி ஐஸ்வர்யாவை விரும்பும் நிலையில் அது பற்றி என்னிடம் நேரடியாகவே சொல்லி விட்டான்.
பொதுவாக குழந்தைகள் என்பது நம்மால் உருவாக்கப்பட்டவர்கள் தான். ஆனால் நமக்காக உருவாக்கப்பட்டவர்கள் கிடையாது. அவர்களுடைய சந்தோசம் தான் நமக்கு முக்கியம். அதனால் நாங்களும் அவர்களுடைய காதலுக்கு சம்மதம் தெரிவித்து விட்டோம். அர்ஜுன் சார் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள். இனி அர்ஜுன் சார் திரைப்படம் முடிவடைந்ததும் திருமணம் நடைபெறும்" என்று அந்த பேட்டியில் நடிகர் தம்பி ராமையா பேசியிருந்தார்.
தம்பி ராமையா ஜகந்நாதபிள்ளை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டம் நற்சாநதுபட்டி அருகில் உள்ள ராதாபுரம் ஆகும்,நடிகர் அர்ஜுன் தந்தை ஜே. சி. ராமசாமி (எ) சக்தி பிரசாத் ஒரு முன்னாள் புகழ் பெற்ற கன்னடத் திரைப்பட நடிகர் ஆவார்,
கருத்துகள்