முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிராம நத்தம் நிலங்களுக்கு இணைய வழியில் நகல்

நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் என்பது சொத்தின் உரிமைக்கான ஆவணம் கிடையாது -

அது வரி விதிப்பு ஆவணம், பட்டா மாற்றம் செய்து விடுவதாலேயே அந்தச் சொத்துக்கு ஒருவர்  உரிமையாளர் என்றாகி விடாது என -உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,     

 தனியார் கட்டுப்பாட்டிலுள்ள நத்தம் ரயத்து நிலங்களை, 'ரயத்துவாரி' என்றும், அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நத்தம் புறம்போக்கு நிலங்களை, 'சர்கார்' என்றும் பொதுவான பெயரில் வகைப்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டதற்கான அரசாணை, 2023 ஆம் ஆண்டு மே மாதம் பிறப்பிக்கப்பட்டது.


அரசாணை வெளியீடு வந்து ஓராண்டாகியும், பொதுமக்கள் மத்தியில் அதுகுறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த வகைப்பாடு மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில், சொத்துகள் பரிமாற்றப் பத்திரங்களை எழுத வேண்டும். அப்போது தான் அதன் அடிப்படையில் புதிய பட்டா, அடங்கல் ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிட வாய்ப்பு ஏற்படும்.





இந்த விஷயத்தில், வருவாய்த் துறையினர் பொது மக்களுக்கு உரிய விளக்கங்களை அளிக்கும்படி அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.                   பயன்பாடுகள் இல்லாத கிராம நத்தம் அரசு நிலத்தை மக்களுக்காக ஒதுக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவு காரணமாக 

கிராம நத்தம் நிலங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி, அவர்களை வெளியேற்றுவதுடன், கிராம நத்தம், புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரமுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது 





கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, அப்போதிருந்த நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், கிராம நத்தம் நிலங்களுக்கு விரைவில் இணைய வழியில் பட்டா மாறுதல் முறை கொண்டு வரப்படும் என அறிவிப்பை வெளியிட்டார். அதன்படியே, தற்போது அமலுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது 

கிராம நத்தம் பட்டாக்கள் இதுவரை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படாத நிலைமை இருந்ததால், தற்போது, ஆன்லைனில் பதிவு செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது, ஆன்லைனிலேயே நத்தம் இணைய வழி பட்டா மாறுதல்கள் செய்ய முடியும் என முதல்வர் மு.க.ஸ்டாலினும் அறிவித்திருக்கிறார். தற்போது, 1.42 கோடி நத்தம் நில ஆவணங்கள், தமிழ்நாட்டில் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டிருக்கிறது.





நத்தம் நிலம் தொடர்பான விவரம் ஆன்லைன் மயமாகி விட்டதால், வழிகாட்டி மதிப்பு விரைவில் நிர்ணயம் செய்யப்படும் எனவும் தெரிகிறது. மேலும், அரசு வழங்கிய பட்டா மற்றும் பத்திர அடிப்படையில், நிலத்தின் உரிமையாளர்கள் முழுமையான உரிமைகளையும் இனி எளிதாகப் பெற முடியும் என நம்பப்படுகிறது.





இப்படிப்பட்ட சூழலில், கிராம நத்தம், புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக, முக்கிய உத்தரவு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

பெரம்பலுார் மாவட்டம் குரும்பலுார் கிராமத்தில் அன்பானந்தன் என்பவர், தன்னுடைய 5 சென்ட் கிராம நத்தம் நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சித்தலைவரிடம் விண்ணப்பம் செய்திருந்தார். அந்த நிலம், அரசு நிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியர் நிராகரித்து விட்டார். அதனால், அன்பானந்தன், உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அரசு நிலமாக வகைப்படுத்தியதில் குறுக்கிடுவதற்கு நீதிமன்றமும் மறுத்து விட்டது.







உடனே அன்பானந்தன், அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டுக்குப் போனார். அது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளதாவது:

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் கிராம நத்தம் நிலங்கள் இல்லை என்று தனிநபர்கள் அவற்றை ஏராளமாக அபகரித்து விட்டார்கள். கிராம நத்தம் நிலம் என்ற போர்வையில், நிலங்களை அபகரிப்பதை அனுமதித்தால், பொதுவான பயன்பாட்டுக்கு அரசுக்கு நிலங்கள் கிடைக்காது. கிராம நத்தம் நிலங்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து, சட்டப்படி பொதுப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில், ஒழுங்குபடுத்த வேண்டும்.





 சட்டப்படி ரயத்துவாரி வீட்டு மனையை பரம்பரையாகவோ அல்லது உரியவர்களிடம்  உரிமைக் கிரையம் பெற்றோ வாங்கிச் சொந்தமாக வைத்திருந்து, அதற்கு நத்தம் பட்டா வழங்கியிருந்தால், அதில் குறுக்கிட அரசுக்கு எந்தவித உரிமையுமில்லை. ஆனால், நத்தம் பட்டா வழங்கப்படாத நிலங்களை, யாராவது சொந்தமாக வைத்திருந்தால், அதற்கான உரிய ஆவணங்களைச் சரிபார்த்து பட்டா வழங்கலாம்.




நிலம் சொந்தம் என்பதை வைத்திருப்பவர்கள் நிரூபிக்க முடியாவிட்டால், அவரை நில ஆக்கிரமிப்பாளராகத் தான் கருத வேண்டும். பண பலம், ஆள் பலம், அரசியல் அதிகாரம் பலம் உள்ளவர்கள் மட்டுமே, கிராம நத்தம் நிலங்களை பெருமளவில் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்க முடியும். அப்படி வைத்திருப்பது, வீடில்லாத ஏழைகளின் உரிமையில் குறுக்கிடுவது போலாகும். இது சமூக நீதிக் கொள்கையை மீறுவதாகும்.

தன்னுடைய விருப்பத்துக்கு ஏற்ப நிலங்களை வழங்குவதற்கு அரசுக்கு அதிகாரம் இல்லை.    எனவே, சரியான நபர்களுக்கு, சரியான காரணங்களுக்காக, கிராம நத்தம் நிலங்களை ஒதுக்குவதை உறுதி செய்யும் வகையில், வழிமுறைகள் வகுத்திருக்க வேண்டும். அரசு நிலங்கள், நத்தம் நிலங்களை, மக்கள் நலத்திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டும்.     கிராம நத்தம் நிலங்களை அனுமதியின்றி வைத்திருப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதி, அவர்களை சட்டப்படி வெளியேற்ற வேண்டும். கிராம நத்தம், புறம்போக்கு நிலங்களை ஒழுங்குபடுத்த அரசுக்கு அதிகாரமுள்ளது. ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தி, கிராம நத்தம் நிலங்களை பயன்படுத்த வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட நிலம், ஏற்கனவே நில அளவை அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்டு விட்டதால், தன்வசம் இருந்ததற்கான ஆவணங்கள் எதையும், மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. வீடில்லாத ஏழை என்றால், அரசின் நல திட்டத்தின் கீழ், நிலம் ஒதுக்கும் படி, அரசிடம் மனுதாரர் விண்ணப்பிக்கலாம். அதை, விதிகளுக்கு உட்பட்டு அரசு பரிசீலிக்கலாம். இந்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு பிறகு தான் கடந்த ஆண்டு அறிவித்த திட்டம் தற்போது இன்று eservices.tn.gov.in. என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டில் பார்க்கும்படி வெளியிடப்பட்டது,



இணைய வழியில் சென்று, உரிய ஆவணங்கள், உரிய சான்றுகளை சமர்ப்பித்து, விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு குறைந்த கட்டணமும் செலுத்த வேண்டும். இதற்கு பிறகு விண்ணப்ப ஐடி ஒன்று பிரத்யேகமாக உங்களுக்கு ஒதுக்கப்பட்டு விடும். தனியார் கட்டுப்பாட்டில் உள்ள நத்தம் நிலங்களை, 'ரயத்துவாரி' என்றும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நத்தம் நிலங்களை, 'சர்கார்' என்றும் பொதுவான பெயரில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டதுடன், இதற்கான அரசாணையும்,  பிறப்பிக்கப்பட்டதும் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது வருவாய்த்துறை வழங்கிய பட்டாவினை மட்டும் கொண்டு, நில உரிமை மூலத்தை நிர்ணயம் செய்ய இயலாது என்பதை ஏற்கனவே உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில் 


வழங்கப்பட்ட வழங்கிய ரயத்துவாரி பட்டா மூலம், சம்பந்தப்பட்ட நிலத்தை உரிய உரிமை உள்ள நபர்கள் சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் மற்றொருவர் தன் முன்னோர்களுக்கு பாத்தியப்பட்ட பூர்வீக இடம் என்கிறார். இப்பிரச்னையை எவ்வாறு கையாள்வது? என்பது தற்போது உள்ள அரசு பணியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என்பதும். இதுவரை வருவாய்த்துறை வழங்கிய பட்டாவினை மட்டும் கொண்டு, நில உரிமை மூலத்தை நிர்ணயம் செய்ய இயலாது. அதே நேரம் மற்றொருவர் தன் முன்னோர்களுக்கு பாத்தியப்பட்ட நிலம் எனக்கோரி வருவதை, ஆவணம் மூலம் ஆராயாமல் ஏற்றுக் கொள்ள முடியாது. உரிய சிவில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி 'டிக்ளரேசன்' வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். உரிய சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் மூலம் அந்த நிலம் யாருக்குப் பாத்தியப்பட்டது என நிவாரணம் பெற வேண்டியது மட்டுமே இதற்குத் தீர்வாகும்.

வருவாய் நில ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதால் மட்டும் இடம் ஒருவருக்குச் சொந்தமாகாது.

ஒரு நிலத்தின் பொறுப்பாளர் (பாதுகாவலர், அல்லது பணியாளர்கள் ) அந்த நிலத்தின் மீது உரிமை கோர முடியாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.



நிலத்தைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பணியாக நிறைவேற்றவேண்டிய வாட்ச்மேன், இரண்டு தலைமுறைகளாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த நிலம் தனக்கே சொந்தம் என உரிமை கொண்டாட முடியாது'' என உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பும் வழங்கியது.

மனைகள் அல்லது நிலங்களை வாங்கும் உரிமையாளர்கள் தங்களுடைய தொழில், வியாபாரம், வேலை காரணமாக ஒருவருடைய பராமரிப்பு அல்லது பொறுப்பில் விட்டு வைத்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சொத்து அவர்களுக்கே உரியது என்று உரிமை கோர சட்டத்தில் வழியில்லை என்று நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது.

நிலங்களை அல்லது சொத்துகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவற்றின் உரிமையாளர் ஒப்படைக்கும் போதே அவர் திரும்பக் கேட்கும் போது அவரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதே இயற்கை நீதி. பராமரிப்புக்கும் இதர சேவைகளுக்கும் உரிமையாளர் அவருக்குச் சம்பளம் அல்லது செலவுக்குப் பணம் தருவதே அப்படிப் பார்த்துக் கொள்வதற்காகத்தான். அதற்குப் பிறகும் அந்தச் சொத்து தனக்கே உரியது என்று கோர எந்தவித நியாயமும் உரிமையும் இல்லை என்பதை அமர்வு' சுட்டிக்காட்டியது.

இந்த வழக்கில் ஒரு நிலத்தை இரண்டு தலைமுறைகளாகப் பராமரித்து வந்த வாட்ச்மேன் அதைத் தனக்கு உரிமையுள்ளது என்று கோரி உச்ச நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுத்திருந்தார்.

அவருடைய வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், இப்போதெல்லாம் தங்களுக்கு சட்டப்படி சொந்தமில்லை என்று தெரிந்தும் ஏதாவது அற்ப ஆதாரத்தை அல்லது காரணத்தைக் காட்டி இது போல நில உரிமையாளர்களை அலைக்கழிக்கும் வழக்குகளைத் தொடுக்கும் போக்கு அதிகரித்து வருவது குறித்து கவலையும் அலுப்பும் தெரிவித்தனர். இத்தகைய வழக்குகளைத் தொடுப்பவர்களுக்குக் கடுமையான அபராதம் விதித்தால் தான் இனி எதிர்காலத்தில் இந்த மாதிரி வழக்குகளின் எண்ணிக்கை குறையும் என்பதால் இந்த வழக்கில் மனுதாரருக்கு அபராதம் விதிக்க முடிவு செய்ததாகவும் மனுதாரர் வெறும் வாட்ச்மேன் தான் என்பதால் 25,000 ரூபாய் மட்டுமே அவருக்கு அபராதமாக விதிப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இந்த அபராதத்தை இரண்டு மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என்றும் கூறினர். அத்துடன் அந்த நிலத்தை அதன் உரிமையாளரிடம் இரண்டு மாதங்களுக்குள் ஒப்படைத்து விட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அந்த நிலத்தை அதன் உரிமையாளர் தருமசத்திரத்துக்குக் கொடுத்து விட முடிவு செய்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் இப்போது அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படுவதும் அதற்காக சட்டப்பூர்வ உரிமை கோருவதும் சத்தியம் தவறி அதிகரித்து வருவதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

பல வழக்குகளில் "சட்டப்பூர்வமாகச் செல்லாது'' என்று நிச்சயமாகத் தெரிந்திருந்தாலும் "சும்மா வழக்கு போட்டுப் பார்ப்போமே'' என்கிற போக்கும் அதிகரித்து வருவதையும் அவர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.

உண்மையிலேயே சட்டப்பூர்வமாக விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் ஏராளமாகத் தேங்கிக் கிடக்க சுய விளம்பரத்துக்காகவும் அப்பாவிகளை அலைக்கழிக்கவும் வழக்குகள் போடும் போக்கைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.   1982 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு மக்கள் நில வகைப்பாடுகளில் நஞ்சை, புஞ்சை, மானாவாரி,தரிசு என இருந்த நிலையில் மக்கள் நிம்மதியாக வழக்குகள் அதிகமின்றி நிம்மதியாக இருந்தது நாம் அறிந்த வரையில் உண்மை, 1983 ஆம் ஆண்டிலிருந்து நத்தம் நிலவரித்திட்டம் துவங்கிய பின்னர் தான் நீதிமன்றத்தில் வழக்குகள் அதிகரித்தது, பயனற்ற ரயத்துவாரி மற்றும் காலியாக உள்ள இடங்களில் பலருக்கும் பகிர்ந்தளித்தது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஆனால் அதில் ரயத்துவாரி உள்ள ரயத்துக்களும் புறம்போக்கு பயன்படுத்தி வாழும் மக்களும் பிரித்து வகைப்பாடு செய்யாமல் ஒரே வகைப்பாடு செய்த காரணத்தினால் வழக்குகள் நீதிமன்றத்தில் சென்றது அதன் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது கிராம நத்தம் மற்றும் இரயத்வாரி நத்தம் ஆன்லைன் மூலம் இன்று இனம் காணப்படும் நிலையில் இதில் தவறேதுமில்லாமல் இருந்தால் வழக்குகள் நீதிமன்றத்தில் எண்ணிக்கை குறையும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்