முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூபாய் ஒரு கோடி லஞ்சம் கேட்டு மூன்று லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் புரோக்கருடன் கைது

சென்னையில் கைதான வட்டாட்சியர் சோதனையை எதிர்த்த பாரதிய ஜனதா கட்சியின்  கராத்தே தியாகராஜன். சென்னையில் லஞ்ச வழக்கில் கைதான வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதற்கு பாரதிய ஜனதா கட்சியின்  கராத்தே தியாகராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அவர் எதற்காக எதிர்ப்பு தெரிவித்தார்.. என்ன நடந்தது 

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்குச் செல்வதற்காக இருந்த 40 அடி சாலையில் ஒருவர் பகிரங்கமாகவே ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டார். அதனால் ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாகக் குறுகிவிட்டது. இந்தச் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சோழிங்கநல்லூர் பகுதியின் சமூக ஆர்வலர் பொன் தங்கவேல்  சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தார்.



ஆனால் அவரது புகார் மனு மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அடுத்து ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாக குறுகியதற்கு காரணமாக ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி  அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் தங்கவேல் வழக்குத் தொடர்ந்தார்.



அந்த ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. அதன் நகலை எடுத்துக் கொண்டு சென்னை தெற்கு மண்டலத் துணை ஆணையரைச் சந்தித்து பொன் தங்கவேல் முறையிட்டார். அங்கு தெற்கு மண்டல துணை ஆணையர் மூன்று நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்ததுடன், உரிய பணியாளர்களை அழைத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். இந்தப்பணியைக் கண்காணிக்க சிறப்பு வட்டாட்சியர் சரோஜாவைவும் நியமித்தார்.


இதற்கிடையே இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் இந்தச் சாலை 40 அடிச் சாலையாக இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு வழி கிடைக்கும். மேலும் இங்குள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும். எனவே அருகிலுள்ள நில உரிமையாளர்களிடம் ரூபாய்.1 கோடி லஞ்சமாக வாங்கித் தந்தால் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் சரோஜா கோரினாராம்.



பின்னர் லஞ்சமாகக் கேட்ட ரூபாய்.1 கோடி பணம் ரூபாய்.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் ரூபாய்.3 லட்சத்தை முன்பணமாகத் தரும்படி வட்டாட்சியர் சரோஜா கேட்டாராம். ஆனால் அந்த இலஞ்சம் பணத்தைக் கொடுக்க பொன் தங்கவேல் விரும்பாததைத் தொடர்ந்து சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் பொன் தங்கவேலு புகார் அளித்தார்.           


                                அதன் பின் V&AC trapped and arrested Tmt.Saroja, Spl.Tahsildar, Adyar and Tr.Arunkumar, PC, St.Thomas Mount Crime P.S. for demanded of Rs.3,00,000/- as advance bribe for evict the encroachment in the complainant's land on 14.05.2024.                          இலஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். மேலும் ரூபாய்.3 லட்சம் பணத்தை வாங்கும் போது வட்டாட்சியர் சரோஜாவை பொறி வைத்துப் பிடிக்க ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டதன்படி நேற்று ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாட்சியர் சரோஜாவின் அலுவலகத்தைக் கண்காணித்தனர். முதலில் அடையார் எல்.பி.சாலையில் உள்ள சரோஜா பணி செய்து வரும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பினாப்தலின் இரசாயணப் பொடி தடவிய ரூபாய்.3 லட்சம் இலஞ்சப் பணம் புகார்தாரர் சார்பில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்தப் பணத்தை வட்டாட்சியர் சரோஜா நேரடியாக வாங்க மறுத்து. அவரது கணவரான பரங்கிமலை ஆயுதப்படையில்  தலைமைக் காவலராகப் பணியில் உள்ள பிரவீனிடம் சொல்லி, இலஞ்சப் பணத்தை அவரது நண்பரான பரங்கிமலை குற்றப்பிரிவுக் காவலர் அருண்குமாரிடம் கொடுக்குமாறு வட்டாட்சியர் சரோஜா கூறியதன் பேரில் ரூபாய்.3 லட்சம் இலஞ்சப் பணம் காவலர் அருண்குமாரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது மாறுவேடத்திலிருந்த ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையுடன் காவலர் அருண்குமாரைப் பிடித்துள்ளார்கள். அவரிடமிருந்து ரூபாய்.3 லட்சம் பணம் மீட்கப்பட்டது. அவர் கைகள் சோடியம் கார்பனேட்டு கரைசலில் நனைத்து பின்பு கைது செய்யப்பட்டார். இலஞ்சப் பணம் கேட்ட வட்டாட்சியர் சரோஜாவையும் பின்னர் கைது செய்தார்கள்.

இதனிடையே சிறப்பு வட்டாட்சியர் சரோஜா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக இருந்தவர் என்பதால், இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரது அலுவலகத்தில்  நடத்திய சோதனையின் பின்னர் இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளரும், தென்சென்னை தொகுதியின் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் அந்த அலுவலகத்துக்கு விரைந்து சென்று.

அங்கு நடந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்தார்.இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ஆலோசனையின்படி இரசாயனம் தடவிய மூன்று லட்சம் ரூபாயை பொன் தங்கவேல் அடையாரில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். அப்போது, சரோஜா தரப்பில் காவலர் அருண்குமார் என்பவர், பொன் தங்கவேலைச் சந்தித்து அந்தப் பணத்தை தரும்படி கூறியிருக்கிறார். ஆனால் பொன் தங்கவேல், பணத்தைக் கொடுக்கவில்லை. அதனால் பொன் தங்கவேலுக்கும் காவலர் அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.அப்போது காவலர் அருண்குமார், நான் மதுரைக்காரன், என்னை நீங்கள் நம்பலாம் என்று பொன் தங்கவேலிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து பொன் தங்கவேல், இலஞ்சப் பணத்தை காவலர் அருண் குமாரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இலஞ்ச ஒழிப்புத்துறையினர் காவலர் அருண்குமாரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து காவலர் அருண்குமாரிடம்  விசாரித்தபோது அவர் அளித்த தகவலின்படி வட்டாட்சியர் சரோஜாவின் அறைக்கு ஊழல் தடுப்புத் துறையினர் சென்று அவரையும் கைது செய்தனர்.  அங்கு வந்த பாஜக பிரமுகர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை தேர்தல் அலுவலகமாக இருக்கும் இடத்தில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி சோதனை நடத்தப்படுவதாகக் கூறினார். இருப்பினும் லஞ்சப் புகாரில் சிக்கிய வட்டாட்சியர் சரோஜா மற்றும் காவலர் அருண்குமாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.இதுகுறித்து ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அலுவலர்  ஒருவரிடம் பேசிய போது``சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வட்டாட்சியர் சரோஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் அருண்குமார் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நாங்கள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருப்பதால் இங்கு சோதனை நடத்தக் கூடாது என பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் சட்டப்படி எங்களின் கடமையைச் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் சிக்கியிருக்கும் வட்டாட்சியர் சரோஜாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். அதே நேரத்தில் காவலர் அருண்குமாருக்கும் வட்டாட்சியர் சரோஜாவுக்கும் எப்படிப் பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப்பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்" என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்