முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மதுரை மாநகராட்சியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற வரித்தண்டலருடன் உதவியாளரும் கைது

மதுரை மாநகராட்சியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற வரித்தண்டலருடன் உதவியாளரும் கைது.

மதுரை மாநகராட்சியில் சொத்துவாி பெயர் மாற்றத்துக்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர், மற்றும் உதவியாளரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்  கைது செய்தனர்.

மதுரை மாநகராட்சி  ஆறாவது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமிநகர் பரசுராமன் ( 74 வயது) உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். அவரது மனைவியின் பெயரிலுள்ள சொத்துக்களை  மூத்த மகனான ஈஸ்வரக் கண்ணனுக்கு மாற்ற முடிவு செய்து அந்த  இடத்திற்கான சொத்துப் பெயர் மாற்றம் செய்வதற்கு மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட அலுவலகத்தில் மே மாதம் 13- ஆம் தேதி விண்ணப்பித்தார்.

ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன் அளித்த மனு, மதுரை மாநகராட்சி மண்டலப் பிரிவு அலுவலகம் கண்ணனேந்தல்  வரிவசூல் செய்யும் பிரிவிற்கு வந்திருக்கிறது. அந்த மனுவை மாநகராட்சி  ஆறாவது வார்டு வரித்தண்டலர் ஆறுமுகம் (50 வயது) விசாரணை செய்துள்ளார். இவர் சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவராவார். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தை 15- ஆம் தேதியன்று அவரும், அவரது உதவியாளராக உள்ள உறவினருமான சுதாகர் (வயது 25) ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொணடதைத் தொடர்ந்து ஆய்வு செய்த இடத்தை முழுவதும் அளந்து பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய். 20 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்தால் உடனே கையெழுத்திட்டுத் தருவதாக வரித்தண்டலர் ஆறுமுகம் தெரிவித்தாராம். ஆனால் பரசுராமன், நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் தன்னிடம் அவ்வளவு பணமில்லை எனக் கெஞ்சிய அதைதொடர்ந்து லஞ்சத்தை ரூபாய்.15 ஆயிரமாகக் குறைத்துப் பேரம் பேசினார்கள் அதற்கும் ஆசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை கடைசியாக ரூபாய். பத்தாயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தாராம் ஆறுமுகம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத  பரசுராமன், மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து புகாரைப் பெற்றுக்கொண்ட மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமனிடம் அவர் கொண்டு வந்து கொடுத்த பத்தாயிரம் பணத்தை அரசு சாட்சிகள் முன்பு பினாப்தலின் இரசாயனப் பவுடர் தடவிய பத்தாயிரம் ரூபாயை லஞ்சப் பணத்தைக் கொடுத்து அனுப்பியதை அடுத்து நேற்று முன்தினம் காலை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின் படி, பரசுராமன் அந்த பணத்துடன் கண்ணனேந்தல் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு சென்று கொடுத்து நிலையில் 

அங்கு மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக்  கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர் குமரகுரு மற்றும் துறையினர் மறைந்து நின்றிருந்து. பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரூபாய் .பத்தாயிரத்தை பரசுராமன் கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை அவர் வாங்கி உதவியாளர் சுதாகரிடம் கொடுத்த நிலையில் உடனே மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைந்து  அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்திய பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்தனர்.. இச்சம்பவம் குறித்து மதுரை மாநகராட்சியில் உள்ள இதற ஊழல் செய்யும் ஊழியர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளது‌.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...