முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியா ஸ்கில்ஸ் திறன் போட்டியில் பெண்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தினர்

தடைகளை உடைத்தல்: இந்தியா ஸ்கில்ஸ் திறன் போட்டியில் பெண்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்திப் பிரகாசிக்கின்றனர்


தில்லி துவாரகாவின் யசோபூமியில் 2024 மே 15 முதல் 19-ம் தேதி வரை இந்தியா ஸ்கில்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது.  ஆண்கள் அதிக ஆதிக்கம் செலுத்தும் பிரிவுகளில்  பெண்களின் பங்கேற்பு தற்போது அதிகரித்து வருகிறது. பெண் பங்கேற்பாளர்கள் ஆண்களுடன் நேருக்கு நேராகப் போட்டியிட்டு உற்சாகத்துடன் திறன்களை வெளிப்படுத்துகின்றனர். திறமைக்குப் பாலின எல்லைகள் இல்லை என்பதை அவர்கள் நிரூபிக்கின்றனர்.

இந்த ஆண்டு இந்தியா ஸ்கில்ஸ் போட்டி, 61 திறன் பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 900- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் வலைதள தொழில்நுட்பம் (வெப் டெக்னாலஜி), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி), வரைகலை தொழில்நுட்பம் (கிராஃபிக் டிசைன் டெக்னாலஜி), வண்ணம் தீட்டுதல் மற்றும் அலங்கரித்தல், மின் கட்டமைப்புகளை நிறுவுதல்,  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பிரிவுகளில் 170-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு துறைகளில் சம வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு தளத்தை இப்போட்டி வழங்குகிறது. 


இந்தியா ஸ்கில்ஸ்- 2024 போட்டியில் பெண்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளதாகவும்  இதில் அவர்கள் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்துவதாகவும் இந்தியா ஸ்கில்ஸ் 2024-ன் நடுவர் குழு உறுப்பினர் சோனு லாதர் கூறினார்.

மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் இந்த நிகழ்வை நடத்துகிறது. இது மே 19 அன்று ஒரு பிரமாண்டமான விழாவுடன் நிறைவடையும்.



ஸ்கில் இந்தியா டிஜிட்டல் ஹப் (எஸ்ஐடிஎச்) இணைய தளத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் இப்போட்டிக்குப் பதிவு செய்தனர். அவர்களில் 26,000 பேர்  போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு, அவற்றில் இருந்து சுமார் 900 பேர் இந்தியா ஸ்கில்ஸ் தேசியப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.


இந்த ஆண்டு, டொயோட்டா கிர்லோஸ்கர், ஆட்டோடெஸ்க், ஜேகே சிமெண்ட், மாருதி சுசுகி, லிங்கன் எலக்ட்ரிக், நாம்டெக், வேகா, லோரியல், ஸ்னைடர் எலக்ட்ரிக், ஃபெஸ்டோ இந்தியா, ஆர்ட்டெமிஸ், மெடந்தா, சிக்னியா ஹெல்த்கேர் போன்ற 400-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் ஆதரவுடன் இந்தியா ஸ்கில்ஸ் போட்டி நடத்தப்படுகிறது.

இந்தியா ஸ்கில்ஸ் 2024-ன் வெற்றியாளர்கள், சிறந்த தொழில்துறை பயிற்சியாளர்களின் உதவியுடன், செப்டம்பர் 2024-ல் பிரான்சின் லியோனில் நடைபெறவுள்ள உலகத் திறன் போட்டியில் பங்கேற்பார்கள். இதில் வாகனத் தொழில்நுட்பம் (ஆட்டோமொபைல்), விருந்தோம்பல் (ஹாஸ்பிடாலிட்டி), இயந்திர மின்னணுவியல் (மெக்கட்ரானிக்ஸ்), நீர் தொழில்நுட்பம் (வாட்டர் டெக்னாலஜி) ஆகிய பிரிவுகளில் இந்தியா இந்த ஆண்டு பதக்கங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...