யோகா என்பது உலகத்திற்கு இந்தியாவின் விலைமதிப்பற்ற பரிசு, இது மக்களையும் கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கிறது:
மத்திய அமைச்சர் எச் டி குமாரசாமி
மத்திய கனரக தொழில்கள் துறை சார்பில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் இத்துறையின் அமைச்சர் திரு எச் டி குமாரசாமி, பங்கேற்றார். இவருடன் துறையின் செயலாளர் திரு கம்ரான் ரிஸ்வி மற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு குமாரசாமி, யோகா என்பது உலகத்திற்கு இந்தியாவின் விலைமதிப்பற்ற பரிசு என்றும் இது தனது நல்லிணக்கம் மற்றும் சமச்சீர் தன்மையால் மக்களையும், கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கிறது என்றும் கூறினார். நம்பிக்கையை அதிகரித்து, மனதைக் கட்டுப்படுத்த உதவி செய்து, மனதையும் உடலையும் புனரமைத்து தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் பயன் அளிப்பது யோகா என்று அவர் தெரிவித்தார்.
உண்மை யோகியான பிரதமர் திரு நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பும் ஆர்வமும், இன்றைய இளைஞர்களை ஈர்த்து மாற்றத்தை ஏற்படுத்தும் யோகா பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்."பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன், நமது பண்டைய யோகா பயிற்சி முழுமையான நல்வாழ்வை அடைவதற்கு உலகம் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது": மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி
ஐதராபாத்தின் பஷீர்பாக்கில் ஏபிவி அறக்கட்டளை மற்றும் நிஜாம் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த 10-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பங்கேற்றார்.
"மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் யோகாவை ஏற்றுக்கொள்வதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன், நமது பண்டைய யோகா பயிற்சி முழுமையான நல்வாழ்வை அடைவதற்கு உலகம் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் 'தனிநபர் மற்றும் சமுதாயத்திற்கான யோகா' என்ற தலைப்பில் 10-வது சர்வதேச யோகா தினத்தை நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் கொண்டாடினர். பிரம்மகுமாரிகளைச் சேர்ந்த யோகா பயிற்றுவிப்பாளர் பொதுவான யோகா நெறிமுறைகள் மற்றும் தியான நடைமுறைகளை விளக்கினார். இதில், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
2014-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.புதுவை பல்கலைக்கழகம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகத்துடன் இணைந்து 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது
புதுவை பல்கலைக்கழகம், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகத்துடன் இணைந்து புதுவை பல்கலைக்கழகத்தில் 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது. "தனிநபர் மற்றும் சமூகத்திற்கான யோகா" என்ற தலைப்பில் 2024-ம் ஆண்டின் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. . புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் க.தரணிக்கரசின் யோகா தினம் குறித்த சுருக்கமான அறிமுகத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த உரையின் போது துணைவேந்தர், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கினார். யோகாவின் அவசியத்தையும், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே யோகா தினத்தை கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மேலும், தியானத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 200 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் இணைந்ததால் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரு வழக்கமான அடிப்படையில் வெவ்வேறு ஆசனங்களை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை கற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியை எஸ்.வீரமணி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சிபிசி புதுச்சேரி ஒருங்கிணைத்தார்.10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
10-வது சர்வதேச யோகா தினம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இன்று (21.6.2024) கொண்டாடப்பட்டது. விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் பங்கேற்று, யோகா பயிற்சி மேற்கொண்டனர். யோகா பயிற்றுனர்களாக பயிற்சி பெற்ற விமானப்படையினர் அவர்களது அனுபவத்தின் மூலம் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியை நடத்தியதுடன், பொதுவான யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.
யோகா பயிற்றுனரான ஜூனியர் வாரண்ட் அதிகாரி எஸ் பார்கவ், யோகா பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் சுகாதார பலன்கள் குறித்து அறிமுக உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியின் போது, பல்வேறு யோகா, தியானப் பயிற்சிகள், சங்கல்ப, பிரார்த்தனை மற்றும் செயல்விளக்கங்களும் அளிக்கப்பட்டது. நிலையப் பணியாளர்கள் முழுமனதுடன் பங்கேற்றது இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கியது.வருமான வரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
வருமான வரித்துறை தலைமை ஆணையர்-1, சென்னை மற்றும் வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் (புலனாய்வு) திரு. கிருஷ்ண முராரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
யோகா ஆசிரியர் டாக்டர் விக்ரம் சீனிவாசன் யோகாசனங்களை பற்றி செயல் விளக்கம் கொடுத்தார். நல்வாழ்வின் உடல், உளவியல் மற்றும் உணர்ச்சி அம்சங்களை மேம்படுத்த நமது அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இதில் சென்னை வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். இதே போன்ற நிகழ்வுகள் தாம்பரம், கடலூர், புதுச்சேரி, கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் நடத்தப்பட்டது
மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 10-வது யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்
புதுதில்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் இந்தியாவின் பாரம்பரிய முறையான யோகாவை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறினார். பிரதமரின் அயராத முயற்சியால் யோகா மக்கள் இயக்கமாக மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள்