முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

10-வது யோகா தினக் கொண்டாட்டம்

யோகா என்பது உலகத்திற்கு இந்தியாவின் விலைமதிப்பற்ற பரிசு, இது மக்களையும் கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கிறது:


மத்திய அமைச்சர் எச் டி குமாரசாமி

மத்திய கனரக தொழில்கள் துறை சார்பில், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதில் இத்துறையின் அமைச்சர் திரு எச் டி குமாரசாமி, பங்கேற்றார். இவருடன் துறையின் செயலாளர் திரு கம்ரான் ரிஸ்வி மற்றும் அதிகாரிகளும், ஊழியர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு குமாரசாமி, யோகா என்பது  உலகத்திற்கு இந்தியாவின் விலைமதிப்பற்ற பரிசு என்றும்  இது தனது நல்லிணக்கம் மற்றும் சமச்சீர் தன்மையால் மக்களையும், கலாச்சாரங்களையும் ஒருங்கிணைக்கிறது என்றும் கூறினார். நம்பிக்கையை அதிகரித்து, மனதைக் கட்டுப்படுத்த உதவி செய்து, மனதையும் உடலையும் புனரமைத்து தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் பயன் அளிப்பது யோகா என்று அவர் தெரிவித்தார்.



உண்மை யோகியான பிரதமர் திரு நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பும் ஆர்வமும், இன்றைய இளைஞர்களை ஈர்த்து மாற்றத்தை ஏற்படுத்தும் யோகா பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளன என்றும் அவர் கூறினார்."பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன், நமது பண்டைய யோகா பயிற்சி முழுமையான நல்வாழ்வை அடைவதற்கு உலகம் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது": மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி

ஐதராபாத்தின் பஷீர்பாக்கில் ஏபிவி அறக்கட்டளை மற்றும் நிஜாம் கல்லூரி ஏற்பாடு செய்திருந்த 10-வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி பங்கேற்றார்.



"மக்கள் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையில் யோகாவை ஏற்றுக்கொள்வதைக் கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன், நமது பண்டைய யோகா பயிற்சி முழுமையான நல்வாழ்வை அடைவதற்கு உலகம் முழுவதும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறியுள்ளது என்று அவர் கூறினார்.




புதுதில்லியில் உள்ள சாஸ்திரி பவனில் 'தனிநபர் மற்றும் சமுதாயத்திற்கான யோகா' என்ற தலைப்பில் 10-வது சர்வதேச யோகா தினத்தை நிலக்கரி அமைச்சக அதிகாரிகள் கொண்டாடினர். பிரம்மகுமாரிகளைச் சேர்ந்த யோகா பயிற்றுவிப்பாளர் பொதுவான யோகா நெறிமுறைகள் மற்றும் தியான நடைமுறைகளை விளக்கினார். இதில், 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.



2014-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.புதுவை பல்கலைக்கழகம், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகத்துடன் இணைந்து 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது

புதுவை பல்கலைக்கழகம், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மத்திய மக்கள் தொடர்பகத்துடன் இணைந்து புதுவை பல்கலைக்கழகத்தில் 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது. "தனிநபர் மற்றும் சமூகத்திற்கான யோகா" என்ற தலைப்பில் 2024-ம் ஆண்டின் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. . புதுவை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் க.தரணிக்கரசின் யோகா தினம் குறித்த சுருக்கமான அறிமுகத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இந்த உரையின் போது துணைவேந்தர், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு யோகா எவ்வாறு உதவுகிறது என்பதை விளக்கினார். யோகாவின் அவசியத்தையும், ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்களிடையே யோகா தினத்தை கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் விளக்கினார். மேலும், தியானத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.


சர்வதேச யோகா தினத்தை கொண்டாடுவதில் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 200 பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் இணைந்ததால் நிகழ்ச்சி மிகவும் வெற்றிகரமாக இருந்தது. அனைத்து பங்கேற்பாளர்களும் ஒரு வழக்கமான அடிப்படையில் வெவ்வேறு ஆசனங்களை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை கற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியை எஸ்.வீரமணி, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சிபிசி புதுச்சேரி ஒருங்கிணைத்தார்.10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம்

10-வது சர்வதேச யோகா தினம் ஹிண்டன் விமானப்படை தளத்தில் இன்று (21.6.2024) கொண்டாடப்பட்டது. விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இதில் பங்கேற்று, யோகா பயிற்சி மேற்கொண்டனர். யோகா பயிற்றுனர்களாக பயிற்சி பெற்ற விமானப்படையினர் அவர்களது அனுபவத்தின் மூலம் பிரமாண்ட யோகா நிகழ்ச்சியை நடத்தியதுடன், பொதுவான யோகா பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

யோகா பயிற்றுனரான ஜூனியர் வாரண்ட் அதிகாரி எஸ் பார்கவ், யோகா பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் அதன் சுகாதார பலன்கள்  குறித்து அறிமுக உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியின் போது, பல்வேறு யோகா, தியானப் பயிற்சிகள், சங்கல்ப, பிரார்த்தனை மற்றும் செயல்விளக்கங்களும் அளிக்கப்பட்டது. நிலையப் பணியாளர்கள் முழுமனதுடன் பங்கேற்றது இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கியது.வருமான வரித்துறை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித்துறை தலைமை அலுவலகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

 வருமான வரித்துறை தலைமை ஆணையர்-1, சென்னை மற்றும் வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் (புலனாய்வு) திரு. கிருஷ்ண முராரி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

யோகா ஆசிரியர் டாக்டர் விக்ரம் சீனிவாசன் யோகாசனங்களை பற்றி செயல் விளக்கம் கொடுத்தார். நல்வாழ்வின் உடல், உளவியல் மற்றும் உணர்ச்சி அம்சங்களை மேம்படுத்த நமது அன்றாட வாழ்வில் யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இதில் சென்னை வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர். இதே போன்ற நிகழ்வுகள் தாம்பரம், கடலூர், புதுச்சேரி, கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள வருமான வரித்துறை அலுவலகங்களில் நடத்தப்பட்டது

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி, தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 10-வது  யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்

புதுதில்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 10-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், யோகாவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதால், பல்வேறு நாடுகளும் இந்தியாவின் பாரம்பரிய முறையான யோகாவை ஏற்றுக்கொண்டிருப்பதாக கூறினார். பிரதமரின் அயராத முயற்சியால் யோகா மக்கள் இயக்கமாக மாறியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு