முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூபாய்.14 கோடி ஜி.எஸ்.டி மோசடி கோயம்புத்தூர் வசித்த வடமாநிலப் பெண் கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில தொழிலதிபர்கள் இல்லாத நிறுவனங்களை இருப்பது போல போலியாகக் கணக்குக் காட்டி, இ-வே பில்களை உருவாக்கி மத்திய அரசின் உள்ளீட்டு வரிச்சேவையில் சலுகைகள் வாங்கிய நிலையில் அரசுக்கு ரூபாய் பத்தாயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகப் புகார்கள் வந்தன


அது குறித்து சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு செய்யும் அலுவலர்கள் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, நொய்டா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி என பல்வேறு மாநிலத்தின் பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததையடுத்து அந்த மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் கடந்த சில மாதங்களாகவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கோயம்புத்தூர் வசித்து வரும் வெளி மாநில மார்வாடி வீட்டுப் பெண் ரூபாய்.14 கோடி ஜி.எஸ்.டி மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூர்  ரேஸ்கோா்ஸ் பகுதியில் வசிக்கும்  சுகன்யா (வயது 40). இவர் கணவர் பிரபு டெல்லி அருகில் நொய்டாவில் இயந்திரங்கள் தொடா்பான நிறுவனம் நடத்தி வந்தாா். இதனிடையே, நொய்டாவில் சுமாா் 1,000 போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூபாய் பத்தாயிரம் கோடி வரை ஜிஎஸ்டி இழப்பீடு ஏற்பட்டதாக மாநில குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவுக்கு முதலில் வந்த ரகசிய தகவல் 

                                     -ADVERTISEMENT-

கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இதுகுறித்த வழக்கினை பதிந்து நொய்டா காவல் நிலையத்தில் விசாரித்தனர். அதாவது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலியாக "இ-வே" பில் தயாரித்தும், உள்ளீட்டு வரிச் சலுகை(ஐடிசி) பெற்று மோசடி நடந்துள்ளதையடுத்து டெல்லி, நொய்டா, காஜியாபாத், சிா்ஸா, ஜெய்பூா் போன்ற பகுதிகளை சோ்ந்த 45 போ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டபோது. தான் இதில் முக்கிய நபராக கோயம்புத்தூர் பகுதியில் வசிக்கும் சுகன்யாவின் பெயரும் கண்டு பிடித்தனர் சுகன்யா நடத்தி வரும் நிறுவனத்திலும் ரூபாய்14.5 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது அலுவலர்களுக்குத் தெரிந்தது, ஆனால் அதற்குள் விபரம் தெரிந்து சுகன்யா தலைமறைவாக இருந்ததனால் அவா் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய முடியாத நிலையில் சுகன்யா எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியாத  உத்தரப்பிரதேச மாநிலக் காவல் துறை கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதுஅறிவிப்பு: அந்த அறிவிப்பில், சுகன்யா பிரபு குறித்த தகவல்கள் அல்லது அவரை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதனிடையே, சுகன்யா கோவையில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக உத்தரப்பிரதேச மாநில போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக வந்த உத்தரப்பிரதேச போலீஸாா் கோவைக்கு விரைந்து வந்தனர்.. ரேஸ்கோா்ஸ் போலீஸாரின் ஒத்துழைப்புடன் சுகன்யா பிரபுவை கைது செய்து நொய்டா அழைத்து சென்றுள்ளனர்.இதுகுறித்து கோவை மாநகர போலீசார் சொல்லும்போது, "கடந்த, 22ம் தேதி நொய்டா போலீசார் 4 பேர் கோவை வந்திருந்தனர்.. ரேஸ்கோர்ஸில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த சுகன்யாவை கைது செய்து, நொய்டா கொண்டு சென்றனர். அவரது கணவர் பிரபுவையும் தேடிவருகின்றனர்" என்றனர்.சுகன்யா கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்திருக்கிறார்

கோயம்புத்தூர் பகுதியில் வசிக்கும் பெண்ணை அவரது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.

                      -ADVERTISEMENT-

இத்தனை கோடி மோசடியில் கோயம்புத்தூர் பகுதியில் ஒரு வடமாநில பெண் கைதாகியிருப்பது அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு