சென்னை விமான நிலையத்தில் ரூ.1.67 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
மலேசியாவிலிருந்து கடந்த 17-ம் தேதி சென்னை வந்த விமானப் பயணி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சுங்கத்துறையினர் அந்தப் பயணியிடம் நடத்திய சோதனையின் போது 710 கிராம் எடையுள்ள 22 கேரட் தங்கச் சங்கிலி மற்றும் வளையல் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு ரூ.44.53 லட்சமாகும்.
இதேபோன்று, 18-ம் தேதி ஏர்அரேபியா விமான நிறுவன ஊழியர்கள், விமானப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்த ஒரு பையில், பசை வடிவிலான 1056 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 66.23 லட்சம் ஆகும்.
இது தவிர, 18ம் தேதி மலேசியாவிலிருந்து சென்னை வந்த ஒரு பெண் பயணியிடம் நடத்திய சோதனையில், அவர் கடத்தி வந்த 900 கிராம் எடையுள்ள 24 கேரட் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.56.38 லட்சமாகும். கடத்தலில் ஈடுபட்ட பயணிகள் கைது செய்யப்பட்டு மேல் விசாரணை நடத்தப்படுகிறது.
கருத்துகள்