முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளக்குறிச்சி விஷ கள்ளச்சாராயச் சாவுகள் 33 ஐத் தாண்டும் நிலை

கல்வராயன் மலை விஷ கள்ளச்சாராயச் சாவுகள் எதிரொலி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம், காவல்துறை கண்காணிப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம்.


CBCID விசாரணைக்கு மாற்றி முதல்வர் உத்தரவு.  விஷ கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்து வரும் நிலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஐத் தாண்டியிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.   



அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 90-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு சந்தித்து ஆறுதல் 


 80 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேரின் நிலைமை மேலும் கவலைக்கிடம் 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ கள்ளச்சாராயம் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்திருக்கும் நிலையில் 





ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவரும், முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என 33 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.




மேலும், 90-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக களத்திற்கு விரைவு 




மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்த ஒரே ஆண்டில் மற்றுமோர் கொடுமை நிகழ்ந்திருப்பது பேரதிர்ச்சியாகிறது!

புதிய ஆட்சியர் மற்றும் எஸ்.பி நியமனம்:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த்நியமனம். 


புதிய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக ரஜத்சதுர்வேதி நியமனம். கள்ளச்சாராயம் குடித்து விட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் 40 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதி. இந்த பரபரப்பில் அங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிப்பார்கள் என்பதை யாரும் உணருவதாக தெரியவில்லை. மாறாக இவர்களுக்கு நஷ்ட ஈடு தர கோரிக்கை வைக்கிறார்கள். 

தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை காவல்துறை பாதுகாப்போடு இயங்கி கொண்டிருக்கும போது, கள்ளச்சாராயம் குடிக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் குடும்பம், குடும்பமாக! இதுவரை இறந்துள்ள 33 நபர்களில் குறைந்தபட்சம் இந்திரா, வடிவு என்ற  இரு பெண்களும் அடக்கம். 


இவர்கள் வாரிசுகளுக்கு அரசு பணி அளிக்க  வேணடும் என கோரிக்கை வேறு . இரண்டு கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். மிக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுதல்கள்.  இதை எழுதுவதற்குள் பலி எண்ணிக்கை  33 ஆக உயர்ந்து விட்டதாகத் தகவல்.  

சமீபத்தய  தொலைக்காட்சி தகவல் படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 90. 

இது விஷ கள்ளச்சாராய சாவுதானா என உடற்கூறு ஆய்வுக்குப் பின்தான் தெரியும் என ஒரு அரசு மருத்துவ அலுவலர் சொல்கிறார்.   கைப்புண்ணுக்கு  கண்ணாடி தேவையில்லை 


மாமுல் வாங்கிக் கொண்டு குற்றங்களைத் நடக்க அனுமதிப்பவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து சிறைத் தண்டனைக்கும் உள்ளாக்காதவரை, இதற்கெல்லாம் முடிவே கட்ட முடியாது.

ரமணா படத்தில் வருகிற மாதிரி, அவ்வளவு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்து ஏராளமானபேர் பலியாவதற்கு மூல காரணம் வெறும் 30 ரூபாய் லஞ்சம் தான் என்பது போலத்தான்,


எல்லா பயங்கரங்களுக்கும் பின்னணியாக சட்டவிரோதக் காரியம் சிறியதாகத்தான் இருக்கும்.

சட்டம் எப்போதுமே பிரச்சனை இல்லை. அதை பாரபட்சம் இல்லாமல் கடுமையோடு அமல்படுத்துவதில் தான் பிரச்சனையே..

அதற்கு ஒரு உதாரணம்..

மாநில அரசாங்க கட்டிட சுவர்களின் மீது கண்ட விளம்பரங்களை கண்டவர்களும் எழுதுவார்கள். ஆனால் மிலிட்டரி சுவர் பக்கம் போக மாட்டார்கள்..ஆரம்பத்தில் அப்படி இல்லை இப்படி இல்லை, அது கிடையாது இது கிடையாது என்றெல்லாம் அரசு தரப்பில் சொல்லப்பட்டு

தற்போது நிலைமை இந்த அளவுக்கு பயங்கரமான நிலைமையில் வந்து நிற்கிறது. 

பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை. பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு