பட்டா பெயர் மாறுதல் செய்ய ரூபாய்.8,000 லஞ்சம் வாங்கிய துணை வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை: முதல் தகவல் அறிக்கை பதிவாகி 14 ஆண்டுகளான நிலையில் தற்போது விசாரணை முடிவில் 12.06.2024 ல் திருப்பூர் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது
பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூபாய்.8000 லஞ்சம் வாங்கிய துணை வருவாய் வட்டாட்சியருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் பி என் ரோட்டைச் சேர்ந்தவர் ஹோமியோபதி மருத்துவர் தண்டபாணி. அவரது அண்ணன் மேகநாதன். அவர்களது தந்தை மாரப்பன், மகன்கள் இருவருக்கும்
இராக்கியாபாளையத்திலுள்ள, மூன்று ஏக்கர் நிலத்தில், தலா 93 சென்ட் பாகம் பிரித்துக் கொடுத்ததையடுத்து, தனித்தனிப் பட்டா கேட்டு சகோதரர்கள் அவிநாசி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.
அப்போது மண்டலத் துணை வட்டாட்சியராக இருந்த பாலசுப்ரமணியம் (வயது56), பட்டா பெயர் மாற்றம் செய்து வழங்க 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டு. பேரம் பேசியதில் இறுதியில் ரூபாய் .8 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத தண்டபாணி கோயம்புத்தூர் மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் கொடுத்தார்.
அவர்களின் அறிவுறுத்தல் படி கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10 ஆம் தேதி அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் தண்டபாணி, பாலசுப்ரமணியத்திடம் ரூபாய்.8 ஆயிரத்தைக் கொடுத்தபோது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வந்தது. நீதிபதி செல்லத்துரை வழங்கிய தீர்ப்பில் பாலசுப்ரமணியத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
கருத்துகள்